Noelnadesan's Blog

Just another WordPress.com site

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • நூல் அறிமுகம் :நடேசனின் பண்ணையில் ஒரு மிருகம்.

    –   முனைவர்  ஜொஸப்பின் பாபா  ( புனித சேவியர் கல்லூரி பாளையங்கோட்டை ) மாயவாத சித்திரிப்பில்  எழுதப்பட்டுள்ள நடேசனின் பண்ணையில் ஒரு மிருகம்.                                   – இலங்கையைச் சேர்ந்த  கால்நடை மருத்துவர் நடேசன் அவர்கள்  தமிழ்நாட்டில் வாழ்ந்த காலப்பகுதியில்   சென்னக்கு  அடுத்திருந்த காஞ்சிபுரம் பகுதியில்  ஒரு கிராமத்தில் அமைந்திருந்த பண்ணையில் வேலை செய்தபோது பெற்ற அனுபவங்களை பின்னணியாக வைத்து எழுதப்பட்ட நாவல்தான்  பண்ணையில் ஒரு மிருகம் . தமிழ்நாடு காலச்சுவடு பதிப்பகம் இதனை வெளியிட்டுள்ளது. இதன்…

    noelnadesan

    01/08/2022
    Uncategorized
  • இலங்கை நெருக்கடியில் தமிழர்களின் நிலை என்ன?

    மாலன் ஆகா என்றெழுந்தது பார் ஓர் புரட்சி, அண்மையில், இலங்கையில். அதன் விளைவாக அதிபர் தலைமறைவானார். பிரதமரும் அதிபரும் பதவிகளைத் துறந்தார்கள். ஏறத்தாழ இருபது ஆண்டுகளாக அரசியலில் பெரும் செல்வாக்குச் செலுத்தி வந்த ராஜபக்க்ஷேக்களின் குடும்பம் இனி அதிகாரம் பெறுவது மெத்தக் கடினம் என்று நிலைமை ஒரு சனிக்கிழமை பிற்பகலில் மாறிவிட்டது. அன்று அலை அலையாக மக்கள் வீதிகளில் திரண்டார்கள். ஆவேசத்துடன் தடை உத்தரவை மீறி, தடுப்புக்களை தள்ளித் தகர்த்து அதிபர் மாளிகையை நோக்கி முன்னேறினார்கள். அதன்…

    noelnadesan

    30/07/2022
    Uncategorized
  • Illiterates Who Conduct Self-Cremation!

    By L.  Murugapoopathy Translated by Mahroof Noor Mohamed When asked, “What would you do if you get ten million?” “I will build a library.” Said, Mahatma Gandhi “What would you do if you were stranded on a lonely island?” “I would live happily with books,” said Jawaharlal Nehru “Don’t forget to write on my grave,…

    noelnadesan

    26/07/2022
    Uncategorized
  • பண்ணையில் ஒரு மிருகம்’; – எழுதியவர் டாக்டர் நடேசன்.

    இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம். டாக்டர் நடேசனின் ‘ பண்ணையில் ஒரு மிருகம்’ நாவல் அண்மையில் வெளியாயிருக்கிறது. அவர் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு 1985ம் ஆண்டு அகதியாகப் போயிருந்த கால கட்டத்தில் ஒரு மிருகப் பண்ணையில் உத்தியோகம் பார்த்ததைப் பற்றிய அனுபவத்தின் பின்னணியில் கதையொன்றைப் படைத்திருக்கிறார். இவர் படைத்த பல புத்தகங்கள் உலகத் தரமான அற்புத படைப்புக்கள்.புலம் பெயர்ந்த தமிழனின் எழுத்து மேம்பாட்டை பல்வேறு தளங்களில் பதிவு செய்திருக்கிறார் என்பதற்கு இவரின், ‘அசோகனின் வைத்தியசாலை,’ ‘ கானல் தேசம்’ போன்ற சில…

    noelnadesan

    25/07/2022
    Uncategorized
  • கலா. பரமேஸ்வரன்   நினைவுகள் 

    நனவிடை தோய்தற் குறிப்புகள்:    கறுப்பு   ஜூலையில்  –  நேற்று 24 ஆம் திகதி 39 ஆவது நினைவு தினம்                                                                     முருகபூபதி                                 முப்பத்தியொன்பது   ஆண்டுகளுக்கு    முன்னர் (1983 ) இதே   ஜூலை   மாதம்  22   ஆம் திகதி  வெள்ளிக்கிழமை  நள்ளிரவு யாழ்ப்பாணம்    பலாலி   வீதியில் பரமேஸ்வரா சந்தியில் வந்துகொண்டிருந்த     இராணுவ  ட்ரக்   வண்டி  மீது நிலக்கண்ணிவெடித்தாக்குதல்    நடந்தது. அச்சம்பவத்தில்  13   இராணுவத்தினர்    கொல்லப்பட்டதன்              எதிரொலியை  தமிழர்கள்    இன்றும்    கறுப்பு   ஜூலை  என்று அனுட்டித்துக்கொண்டிருக்கிறார்கள். இலங்கை அரசியலிலும்  இங்கு…

    noelnadesan

    25/07/2022
    Uncategorized
  • ஷோபாசக்தியின் புதிய நாவல் ஸலாம் அலைக்

    படித்தோம் சொல்கின்றோம் ஆயுதங்கள்  உலகெங்கும்  உற்பத்திசெய்த அகதிகளின் கதை !                                                                                      முருகபூபதி இஸ்லாமிய சகோதர சகோதரிகள் ஒருவரையொருவர் சந்திக்கும்போது “  அஸ்ஸலாமு அலைக்கும் – வஅலைக்கும் அஸ்ஸலாம்  “ எனச் சொல்லிக்கொள்வார்கள். பராக் ஒபாமாவும் அமெரிக்க ஜனாதிபதியானதன் பின்னர் கெய்ரோ சென்றவேளையில் அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களின் முன்னிலையில் “  அஸ்லாமு அலைக்கும்  “ என்று தொடங்கித்தான் தனது உரையை ஆரம்பித்தார். இதுபற்றிய  ஒரு விரிவான ஆக்கத்தை எனது சொல்லத்தவறிய கதைகள் நூலில் எழுதியிருக்கின்றேன்.   “…

    noelnadesan

    24/07/2022
    Uncategorized
  • திசையறியாப் பயணங்கள்.  : சீமான் பத்திநாதன பர்ணாந்து

      நடேசன் “குஞ்சரம் ஊர்ந்தோர் நாவல் “சமீபத்தில் ஆஸ்திரேலியா தமிழ் கலை இலக்கிய சங்கத்தினரால், சிறந்த நாவலாக தேர்ந்தெடுக்கப்பட்டது . அவரது நாவலில் எனக்கு மிகவும் பிடித்தது  ‘திசையறியாப் பயணங்கள்’ . மிகவும் சிறிய நாவல். இலங்கையின் போர்க்காலத்தின் தொடக்கத்தை விவரிக்கிறது. நாவல் விறுவிறுப்பாகக் கையில் எடுத்தால், வைக்க  முடியாத வேகத்தில் பயணிக்கிறது. மன்னார் கிராமமொன்றின் நடக்கும் கதை; இயக்கத்திற்கு இராணுவத்தினருக்கு இடையில் சிக்கித் தவிக்கும் மக்களது கதைகளில் எவரும் புனிதரில்லை . பாத்திரப் படைப்பு மிகவும்…

    noelnadesan

    05/07/2022
    Uncategorized
  • அசாம்- அவதானித்தவை.

    எனது பாடசாலை நண்பரான டாக்டர் திருச்செல்வத்துடன் இவ்வருடம்  ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் வட  கிழக்கு மாநிலங்களுக்குப் பயணம் செய்தேன். பலவகையில் வித்தியாசமான அனுபவம். இதுவரையிலும் நாம் பார்த்த இந்தியாவாக இந்தப் பிரதேசம்  இருக்கவில்லை.    தற்பொழுது  அசாம்,  மேகாலயா மாநிலங்கள் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டது எனும் செய்திகள் வரும்போது மனதுக்குக் கஷ்டமாகிறது. நாம் பிரயாணம் செய்த இடங்கள் எங்களுடன் உளரீதியாக இணைக்கப்படுகிறது . ஒரு விதத்தில் எமக்குத் தெரிந்தவர்கள் துன்பம் போன்றது. தொடர்ந்து தொலைக்காட்சியை பார்த்தபடியிருந்தேன். இந்தியாவின் ஏழு…

    noelnadesan

    04/07/2022
    Uncategorized
  • பவளவிழாக்காணும் கலைஞர் மாவை நித்தியானந்தன்.

    அவுஸ்திரேலியாவில்  பாரதி பள்ளியை முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பித்து இயங்கவைத்து வரும் ஆளுமை !!                                             முருகபூபதி “ தமிழ்க்குழந்தைகளை மகிழவைக்கக்கூடியதான காட்சி ஊடகத்தின் வளர்ச்சி தமிழர் புலம்பெயர்ந்த சூழலில் மட்டுமல்ல, தாயகச் சூழலிலும் மிக அவசியமான ஒன்றாக உள்ளது. இத்தேவையை நிறைவுசெய்வது எப்படி என்பதைப்பற்றி எமது சமூகம் சிந்தித்தல் அவசியம்.”என்று பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே in எழுதியும் பேசியும் வந்திருக்கும் கலைஞரும் எழுத்தாளருமான மாவை நித்தியானந்தன் இந்த ஆண்டு தனது 75 வயதினை அடைந்து பவள…

    noelnadesan

    03/07/2022
    Uncategorized
  • குறளோவியம்: 1121:கானல்தேசம்.

    பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழிவாலெயிறு ஊறிய நீர். காதலை அனுபவிக்க வேண்டும் -அதை எழுத ———————“இதுவரையும் எந்தப்பெண்ணையும் தொடவில்லை. குறைந்தபட்சம் பெண்ணின் எச்சில் எப்படி இருக்கிறது எனப்பார்க்க விரும்புகிறேன்”கார்த்திகாவிடமிருந்து எதுவித பதிலும் வரவில்லை. “நான் இயக்க கட்டுப்பாட்டுடன் இருந்தேன். 2002இல் தலைவர் என்னைத் திருமணம் செய்ய வற்புறுத்திய போது பார்ப்போம் எனச் சொன்னேன். பின்பு இந்தியாவிற்கு இயக்க அலுவலாகச் சென்றதும் அந்த விடயம் மனதை விட்டுப் போய்விட்டது. அப்பொழுதுதான் உனது அண்ணனையும் கண்டேன்.”மீண்டும் சாந்தன் “நான் பேசிக்கொண்டிருக்கிறேன்.…

    noelnadesan

    02/07/2022
    Uncategorized
முந்தையப் பக்கம்
1 … 34 35 36 37 38 … 162
அடுத்த பக்கம்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
    • Noelnadesan's Blog
    • Join 104 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • Noelnadesan's Blog
    • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
    • பதிவு செய்க
    • உள்நுளை
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar