-
பொன்னியின் செல்வன் புனைவு
நடேசன் பொன்னியின் செல்வன் மட்டுமல்ல கல்கியின் எல்லாக் கதைகளையும் சிறுவயதில் படித்திருக்கின்றேன். எங்கள் எழுவைதீவுக்கு கல்கி தபாலில் வரும். சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு முதலான தொடர்களை அம்மாவோடு போட்டியிட்டுப் படிப்பேன். அந்த பழைய தொடர்களை அம்மா புத்தகமாக தொகுத்து பைண்ட் செய்து வைத்திருந்தார். பொன்னியின் செல்வனில் முக்கியமாக நினைவுக்கு வருவது அதில் வரும் பாத்திரங்களான வந்தியத்தேவன், ஆழ்வார்க்கடியான், நந்தினி என்பன. இலக்கியத்தை ருசிப்பது ஒன்று, அதை அறிந்து கொள்வது மற்றொன்று. நட்சத்திர உணவகத்தில் உண்பவனுக்கும் அந்த…
-
வியட்நாமிய நீர்ப்பாவைக் கூத்து
நடேசன் தமிழ்நாட்டில் பாவைக்கூத்து நிகழ்ச்சியை நான் கும்பகோணத்திலிருந்த காலத்தில் பார்த்திருக்கிறேன். அத்துடன் தமிழ் திரைப் படங்களிலும் பார்த்த நினைவுண்டு. பாவைக்கூத்து இலங்கையிலிருந்ததாக அறியவில்லை. ஆனால், இந்தியாவில் கிராமங்களிலும் தற்போது பாவைக்கூத்து அழிந்து வருகிறது. இந்தப்பாவைக் கூத்துக் கலை, குடும்பங்களின் பாரம்பரியமாக, தலைமுறை தலைமுறையாக கடத்தப்பட்டு வந்தது. அப்படியான கலைக்குடும்பத்து இளைஞர்கள் நகரை நோக்கி கல்விக்காகவும் மற்றைய வேலைகளுக்காகவும் இடம்பெயர்வதால் இந்தக் கலைஞர்கள் அற்று அழிந்துவிடுகிறது. கிராம விவசாயப் பொருளாதாரத்தின் பகுதியான பல கிராமியக் கலைகள் நகரமயமாக்கத்தால் நலிந்து…
-
சிட்னியில் இலக்கிய சந்திப்பு
05-11-2022 ஆவணப்படக்காட்சி – ஐந்து நூல்களின் அறிமுகம் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில், எதிர்வரும் 05 ஆம் திகதி ( 05-11-2022 ) சனிக்கிழமை மாலை 4-00 மணிக்கு சிட்னியில் Toongabbie Community Centre (244 Targo Rd, Toongabbie NSW 2146 ) மண்டபத்தில் நடைபெறவிருக்கும் இலக்கிய சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்குமாறு, கலை, இலக்கிய ஆர்வலர்களையும் ஊடகவியலாளர்களையும் சங்கம் அன்புடன் அழைக்கின்றது. இந்நிகழ்வு சங்கத்தின் உறுப்பினர் சட்டத்தரணி கலாநிதி (…
-
மெல்பனில் இலக்கிய சந்திப்பு
கனடா ஶ்ரீரஞ்சனியின் “ ஒன்றே வேறே “ புதிய கதைத்தொகுதி வெளியீடு கனடாவில் வதியும் எழுத்தாளரும் ஆசிரியருமான ஶ்ரீரஞ்சனி விஜேந்திரா அவுஸ்திரேலியா வருகை தருகிறார். ஶ்ரீரஞ்சனியுடனான இலக்கிய சந்திப்பும், அவரது புதிய சிறுகதைத் தொகுதி ஒன்றே வேறே நூலின் அறிமுக அரங்கும் மெல்பனில் இம்மாதம் 30 ஆம் திகதி ( 30-10-2022 ) ஞாயிற்றுக்கிழமை மாலை 4-00 மணிக்கு அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. சங்கத்தின் தலைவர், எழுத்தாளர் திருமதி சகுந்தலா…
-
மனிதர்கள் நல்லவர்கள்’
தெளிவத்தை ஜோசப் November 12, 2013 நாளைக்குத் தீபாவளி பண்டிகை நெரிசலில் பஸ் திணறியது. கை நிறைந்த பைகளும், பை நிறைந்த சாமான்களுமாய், ஆட்கள் முட்டி மோதிக் கொண்டிருந்தனர். உத்தியோகம் என்று பிரித்துவிட்ட பிறகு பெற்றவர் பிள்ளைகளுடன் கணவன் மனைவி மக்களுடனும் – உற்றார் உறவினருடனும் ஒன்றாகிக் களிக்க ஏதாவது ஒரு பண்டிகை வரவேண்டியிருக்கிறது. “இந்த பஸ்சை விட்டாச்சுன்னா அடுத்தது அஞ்சுக்குத்தான்” என்றபடி தனது முழுப்பலத்தையும் காட்டி ஒருவர் முண்டி முன்னேறுகிறார். பஸ்ஸில் – ரயிலில் –…
-
தெளிவத்தை ஜோசப்- எனது நினைவுகள்
நடேசன் இதயத்தால் பழகுபவர்களை முதல் சந்திப்பிலே என்னால் தெரிந்துகொள்ளமுடியும் . அதேபோல் அறிவால் , உதட்டால் பழகுபவர்களையும் புரிந்துகொள்வேன். உடல் மொழியே எனது தேர்வாகும். இது எனக்கு எனது மிருக வைத்தியத் தொழிலால் கிடைத்த கொடை. இதன் மூலம் பலரோடு பழகுவதை கட்டுப்படுத்திக்கொள்ளமுடியும். 2009 ஆண்டிலே எமது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தின் ஒன்பதாவது தமிழ் எழுத்தாளர் விழாவுக்காக சங்கம் எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப்பை அழைத்திருந்தது. அவர் மெல்பனில் நண்பர் முருகபூபதியின் வீட்டில் தங்கியிருந்தார். அங்குதான் …
-
மேகம் தழுவும் நிலம்.
நடேசன் “ உணவின் முன்பாக இவ்வளவு அழகான சிரிப்பைப் பெற்றுக் கொள்வதற்காகவே இந்த ஹோட்டலில் தங்கலாம் “ என்று அந்த உணவு விடுதியின் வரவேற்பிலிருந்த பெண்ணிடம் கூறியபோது, அவள் முகம் சிவந்து தலை குனிந்தாள். இருபத்தைந்து வயதான இளம்பெண்ணான அவளைத் தேவையற்று சங்கடப்படுத்திவிட்டேனோ என்ற மனக்குழப்பத்துடன் உணவு மேசையிலிருந்து எழுந்து சென்று மன்னிப்புக் கேட்டேன். அப்பொழுது அவள் சிரித்தபடி “ எனது தந்தையின் வார்த்தையாக நினைக்கிறேன் “ என்றாள். அதைக் கேட்டபோது எனக்கு மகிழ்வாக இருந்தது. சிலோங்…
-
முதுகன்னியின் இராமன்- நடேசன்.
நடேசன். திருவாளர் மகாலிங்கத்தின் உடல் அந்த இறுதிச்சடங்கு மண்டபத்தின் முன்பகுதியில் வெள்ளை நிற சவப்பெட்டியில், இடுப்பளவு உயரத்தில் மேசைபோன்ற ஒன்றில் வைக்கப்பட்டிருந்தது. இறந்த பிறகும் மகாலிங்கத்தின் முகம் சிரித்தபடியே தெரிகிறது. கறுத்த பிரேம் போட்ட மூக்குக் கண்ணாடி முகத்திற்கு மேலும் அழகையூட்டியது. எந்தக் கவலையுமில்லாது வாழ்ந்த மனிதன், இறுதியில் இந்த உலகத்திற்கு சந்தோசமாக விடைகொடுத்துச் சென்றது போன்ற தோற்றத்தைக் காண்பித்தது. கொடுத்து வைத்த சாவு எனலாம். பெட்டியின் இடது பக்கத்தில் தரையில் விரிக்கப்பட்டிருந்த சிவப்பு ஜமுக்காளத்தில் மூவர் …
-
பொன்னியின் செல்வன் புனைவின் காட்சி.
நடேசன் பொன்னியின் செல்வன் மட்டுமல்ல கல்கியின் எல்லாக் கதைகளையும் சிறுவயதில் படித்திருக்கின்றேன். எங்கள் எழுவைதீவுக்கு கல்கி தபாலில் வரும். சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு முதலான தொடர்களை அம்மாவோடு போட்டியிட்டுப் படிப்பேன். அந்த பழைய தொடர்களை அம்மா புத்தகமாக தொகுத்து பைண்ட் செய்து வைத்திருந்தார். பொன்னியின் செல்வனில் முக்கியமாக நினைவுக்கு வருவது அதில் வரும் பாத்திரங்களான வந்தியத்தேவன், ஆழ்வார்க்கடியான், நந்தினி என்பன. இலக்கியத்தை ருசிப்பது ஒன்று, அதை அறிந்து கொள்வது மற்றொன்று. நட்சத்திர உணவகத்தில் உண்பவனுக்கும் அந்த…
-
அமரர் கே. எஸ். சிவகுமாரன் வாழ்வை கொண்டாடுதல்
அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் இலக்கியத் திறனாய்வாளர் இம்மாதம் 15 ஆம் திகதி ( 15-10-2022 ) சனிக்கிழமை மெய்நிகரில் —————————————- இலங்கையில் அண்மையில் மறைந்த மூத்த எழுத்தாளரும், ஊடகவியலாளரும் இலக்கியத் திறனாய்வாளருமான கே. எஸ். சிவகுமாரன் அவர்களின் வாழ்வையும் பணிகளையும் நினைவுகூர்ந்து உரையாடும் வகையில், அன்னாரை கொண்டாடும் நிகழ்ச்சியினை எமது அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம், இம்மாதம் 15 ஆம் திகதி ( 15-10-2022 ) சனிக்கிழமை மெய்நிகரில், சங்கத்தின் தலைவர் திருமதி சகுந்தலா கணநாதன் தலைமையில் ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்வில் இணைந்துகொள்ளுமாறு கலை, இலக்கியவாதிகளையும்…