-
நாவல்: நிமித்தம் – எஸ்.ராமகிருஷ்ணன்.
வாசிப்பு அனுபவம் : நடேசன். கிராமங்களில் புறம் கூறுபவனைப் பற்றிச்சொல்லும்போது , “ அவன் ஒரு சகுனி “ என்பார்கள். அதேபோல், அதிகம் உண்பவனை பீமன் என்றும், ஒழுக்கமான ஆணை ராமனைப்போல் என்றும் சொல்வார்கள். அன்றாட வாழ்வில் படிக்காத மக்களிடம் புழங்கும் சொலவடைகள் இவை. இதிகாசங்கள் எமது சமூகத்தின் கலாச்சாரத்தின் ஒரு கூறாக காலம் காலமாகத் தொடர்வதன் காரணம், அங்குள்ள பாத்திரங்களின் வடிவமைப்புத்தான். இதிகாசங்களை எழுதியவரின் கற்பனையா இல்லை, நடந்த சம்பவத்தின் உண்மையான சாரமா என ஆராய்வது…
-
கொன்றால் பாவம் – திரைப்படம்.
மனிதர்களது அகவயக்காரணிகளான காதல், காமம், துயரம், நகைச்சுவை, பேராசை என்பனவற்றை வைத்து இலக்கியங்கள் மற்றும் திரைப்படங்கள் உருவாக்கும்போது அப்படைப்புகள் காலம் கடந்து நிலைக்கும். நாம் அவற்றை கலாச்சாரம், பண்பாடு, நிலம் கடந்து புரிந்துகொள்ள முடியும். இலியட் ஓடிசி போன்ற கிரேக்கக் காவியங்களோ அல்லது நமது இந்திய காவியங்களான மகாபாரதம் இராமாயணம் போன்றவையோ மதமயபபடுத்தாது விட்டிருந்தாலும் நிச்சயம் நிலைத்திருக்கும். அவை அடிப்படை மனித இயல்புகளின் சாரத்தை எழுத்தில் வைக்கின்றன என்பதே அதற்கான காரணம். இந்த காவியங்களுக்கு நிகராக பண்டைய…
-
Corruption in South Asia.
இது பிரித்தானியாவில் வாழும் டாக்டர் சாம் ஜெயக்குமார் ( my classmate Ranjth sing) பாடி இசை அமைத்தது. லஞ்சத்தை வெறுப்பவர்கள் இதை பகிரவும். சில நிமிடங்கள் அமைதியாக இருக்கும்.
-
வடிவேலுவின் மற்றும் ஒரு பரிமாணம் மாமன்னன் !
பயணத்தின் வழியே ஒரு பார்வை முருகபூபதி தமிழ்த்திரையுலகில் நகைச்சுவை நடிகராகவும், சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் நாயகனாகவும் அதிக கவனத்திற்குள்ளான வடிவேலு நடித்த மாமன்னன் படத்தை எனது தொடர் வெளிநாட்டு பயணங்களுக்கிடையே பார்த்தேன். கடந்த ஜூன் மாதம் ரெட்ஜெயன்ட் மூவிஸின் தயாரிப்பில், மாரி செல்வராஜின் இயக்கத்தில் ஏ. ஆர். ரகுமானின் இசையில் வடிவேலு ( மாமன்னன் ) பகத்பாஸில் ( ரத்தினவேல் ) உதயநிதி ஸ்டாலின் ( அதிவீரன் ) கீர்த்தி சுரேஷ் ( லீலா…
-
நடுக்காட்டில் பிரதேப் பரிசோதனை
‘யானை வாழ்ந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்’ எனச் சொல்வார்கள். தெஹிவளை மிருகக்காட்சிசாலையிலும், கண்டி எஸல பெரஹராவிலும்தான் யானைகளைப் பார்த்திருக்கிறேன். மிருகமருத்துவம் பயிலும் பொழுது, என்றாவது ஒருநாள், ஒரு யானையைப் பிரேதப் பரிசோதனை செய்வேன் எனக் கனவிலும் நினைத்ததில்லை. பயிற்சி முடிந்து மிருகமருத்துவர் பட்டத்துடன் தொழில் தொடங்கி இரண்டாவது நாளே ஒரு யானையின் மரணம் தொடர்பாக பிரேதப் பரிசோதனைக்குச் சென்றமை என் மிருக மருத்துவத்துறை வாழ்வில் வித்தியாசமான அனுபவம்தான். சுமார் 17 ஆண்டுகளுக்கு முன்பு மதவாச்சியில்…
-
கட்டிடக்கலையின் காட்சியகம்: கத்தார்!
நோயல் நடேசன் வளைகுடா நாடுகளுக்கு, ரமலான் நோன்பு காலத்தில் போன அனுபவம் உங்களுக்கு உண்டா? மதிய உணவுக்காக அலைந்த அனுபவம் ஏதாவது? குடி நீரை, சிறுவயதில் கள்ளுக் குடித்தது போல், மறைத்து கடதாசிப் பையில் ஒழித்து வைத்துக் குடித்த அனுபவம் உள்ளதா? முதல் அனுபவங்கள் பள்ளிப்பருவத்தில்தான் வரவேண்டுமா என்ன? வயதாகிய பின்பும் வரலாம். இதை இந்த முறை அனுபவித்தேன். முந்திப்பிந்தி உணவுண்டாலும் மூன்று நேர உணவு என்பது இதுவரை காலமும் என் வாழ்வின் ஒரு அம்சமாய் இருந்தது.…
-
கொலைக்கு சாட்சி!
லூர்து மாதாவைத் தரிசிக்க பாரிசில் நாங்கள் ஏறிய ரயில், பிரான்சின் தென் மேற்கிலுள்ள லூர்து மாதாவின் தேவாலயம் அமைந்த லூர்து என்ற சிறிய நகரை நோக்கி வேகமாக சென்றது. கிட்டத்தட்ட ஐந்து மணிநேரத்திற்கு மேலான பயணம் அது. மாலை நான்கு மணியளவில் ஏறிய ரயில் லூர்து நகரத்தை நோக்கி வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. விரைவு ரயில் என்பதால் பெரிய நகரங்களில் மட்டுமே நிற்கும். மாலை நேரத்து சூரிய வெளிச்சம் கண்ணுக்கு இதமாக இருந்தது. ரயில் கண்ணாடி வழியே வெளியே…
-
Shiamala’s birthday.
Shyamala’s birthday speech. My grandson 7 years old Kiyaan a few weeks ago brought his write-up on his holiday in Phillip Island for me to read. After reading I told him that you did not write why you went there He replied Yes, yes, I know 5 W Tell me, ‘’ I said’’ “What, who,…
-
கிழக்கிலங்கையில் இலங்கை மாணவர் கல்வி நிதியம்.
அவுஸ்திரேலியாவிலிருந்து நீண்ட காலமாக இயங்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவிகளைப்பெறும் அம்பாறை மாவட்ட தமிழ் மாணவர்களின் ஒன்றுகூடலும் தகவல் அமர்வும் நிதிக்கொடுப்பனவும் அண்மையில் பாண்டிருப்பு மகா வித்தியாலய மண்டபத்தில், கல்வி நிதியத்தின் தொடர்பாளர் அமைப்பான ஆதரவற்ற மாணவர் கல்வி அபவிருத்தி நிறுவகத்தின் தலைவர், முன்னாள் அதிபர் திரு. ந. கமலநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பேராசிரியர் சி. மௌனகுரு, எழுத்தாளர் செங்கதிரோன் கோபாலகிருஷ்ணன், விரிவுரையாளர் திரு. அற்புதன், பாண்டிருப்பு மகா வித்தியாலய…
-
எகிப்தின் கற்சாசனம்
—————————– பாரிஸ் , மட்ரிட், நியுயோரக் எனப் பல இடங்களில் அருங்காட்சியகங்களுக்கு நான் போயிருக்கிறேன். ஆனாலும் அங்கெல்லாம் ஏற்படாத ஒரு அதீத உணர்வு லண்டன் அருங்காட்சியகத்தில் ஏற்பட்டது. அதே நேரத்தில் தனிமரியாதையும் தவிர்க்க முடியவில்லை முதல் ஏற்பட்ட உணர்வு பற்றிச் சொல்லிவிடுகிறேன் ஆஸ்திரேலியாவில் பல நாடுகளிலிருந்து பயணிகள் நாட்டினுள் கொண்டு வரும் சட்டப் படி அனுமதியல்லாத பொருட்களை பறிமுதல் செய்யும் சுங்க இலாகா, போதைவஸ்துக்கள் மற்றும் உணவு, பாவனை பொருட்களை எரித்துவிட்டு, நகைகள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை…