பொருளடக்கத்திற்கு தாவுக

Noelnadesan's Blog

Just another WordPress.com site

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • நம்பிக்கை

    சொல்லமறந்த கதைகள் -13 முருகபூபதி – அவுஸ்திரேலியா லண்டன் பி.பி.ஸி தமிழ் ஓசையில் சில வருடங்களுக்கு முன்னர் நான் கேட்ட செய்தி இது: இலங்கையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் புதிய அதிபர் தெரிவாகுவார் என்று தமது சிங்கள சோதிட சஞ்சிகையில் எழுதியிருந்த சந்திரஸ்ரீ பண்டார என்னும் ஒரு சோதிடர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டார். இந்தச்செய்தி என்னைச்சற்று வியப்பில் ஆழ்த்தியது. ஆனால் சில செப்டெம்பர்கள் கடந்துவிட்டன. இலங்கை அதிபரின் தலைமையிலான கூட்டணிதான் இந்த ஆண்டு செப்டெம்பர் நடந்த மூன்று…

    noelnadesan

    13/09/2012
    Uncategorized
  • உயிர்ப்பிச்சை

    முருகபூபதி – அவுஸ்திரேலியா இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை கூர்மையடைந்து தமிழின விடுதலைப்போராட்டம் உக்கிரமடைந்த காலகட்டத்தில் எங்காவது குண்டுவெடித்தால் அல்லது யாராவது அரசியல் தலைவர் தற்கொiலைக்குண்டுதாரிகளினால் கொல்லப்பட்டால் பாதுகாப்பு படையினர் நிலக்கண்ணி வெடியில் தாக்குதலுக்குள்ளானால் உடனடியாக அரச படைகளும் பொலிஸாரும் தேடுதல் வேட்டையில்தான் ஈடுபடுவார்கள். இச்சந்தர்ப்பங்களில் பெரும்பாலும் அப்பாவித்தமிழர்கள்தான் சந்தேகத்தின் பேரில் கைதாகி காலவரையறையின்றி தடுப்புக்காவலில் வைக்கப்படுவார்கள். பாவம்செய்தவர்கள்தான் தமிழராகப்பிறக்கிறார்கள் என்ற பொதுவான பேச்சுத்தான் பாதிக்கப்பட்டவர்களின் தரப்பிலிருந்து இத்தேடுதல் வேட்டைகளின்போது உதிர்க்கப்படும் வார்த்தைகளாக இருக்கும். தேடுதலின்போது கைதான பலர்…

    noelnadesan

    09/09/2012
    Uncategorized
  • Mothers for hire.

    Amrit Dhillon Many Australians travel to India and pay surrogate mothers to bear their child. But the local women are often poor, desperate and exploited. SHE was very precious to us. Now we cannot do anything about it. Please leave,” is all that Premila Vaghela’s sister would say to an Indian journalist before closing the…

    noelnadesan

    08/09/2012
    Uncategorized
  • எதிர்பாராதது

    சொல்ல மறந்த கதைகள் –11 முருகபூபதி – அவுஸ்திரேலியா எதிர்பாராத நிகழ்வுகளின் சங்கமம்தான் வாழ்க்கை. இந்த வசனத்தை எனது எழுத்துக்களில் பல சந்தர்ப்பங்களில் பதிவுசெய்வதற்கு கால்கோள் இட்டதுதான் நான் முதல்முதலில் மாஸ்கோவுக்கு செல்வதற்காக விமானம் ஏறிய சம்பவம். வானத்தில் பறக்கும் விமானங்களை பார்த்து வியந்த பருவத்தில் எங்கள் ஊருக்கு சமீபமாக கட்டுநாயக்காவில் சர்வதேச விமானநிலையம் 1965 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் டட்லிசேனநாயக்காவினால் திறந்துவைக்கப்பட்டபோது அந்த விழாவைப்பார்க்க பாடசாலை நண்பர்களுடன் சென்றிருக்கின்றேன். அன்றுதான் என் வாழ்நாளில் முதல்தடவையாக…

    noelnadesan

    06/09/2012
    Uncategorized
  • காத்திருப்பு ‘புதுவை நினைவுகள்’

    சொல்லமறந்த கதைகள் 10 (அங்கம் 02) முருகபூபதி – அவுஸ்திரேலியா புதுவை இரத்தினதுரை தனது குடும்பத்திற்காக மத்தியகிழக்கு நாடொன்றுக்குச்சென்று உழைத்து திரும்பியபின்னர், விடுதலைப்புலிகளினால் ஈர்க்கப்பட்டு அவர்களின் கலை. பண்பாட்டுக்கழகத்தினை வளர்த்தார். 1986 இல் நான் அவரை இறுதியாகச்சந்தித்தபோது அவருக்கு தனித்தமிழ் ஈழம்தான் கனவு. அவரின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். அவர் ஒருகாலத்தில் மாக்ஸீயம், கம்யூனிஸம் பேசியவர். எழுதியவர். அதிலிருந்து முற்றாக விடுபட்டாரா? என்பது எனக்குத்தெரியாது. ஆனால் விடுதலைப்புலிகளின் தலைமையை விட்டும் அதன் கொள்கைகளை விட்டும் இறுதிவரையில் அவர்…

    noelnadesan

    02/09/2012
    Uncategorized
  • நண்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் !

    தமிழ்நாட்டில் சிறப்பு முகாம் என்னும் பெயரில் சிறையைவிடக் கொடிய சித்திரவதை முகாமாக இயக்கப்படும் சிறப்புஅகதிகள்முகாம்கள் அனைத்தும் மூடப்பட்டு அங்கு அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் யாவும் விடுதலை செய்யப்பட நீங்கள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். 1989ம் ஆண்டு புலிகள் இயக்கத்தினரைக் கட்டுப்படுத்த என கலைஞர் அரசால் வேலூர் கோட்டையில் ஆரம்பிக்கப்பட்டதே “சிறப்பு அகதிகள் முகாம்”. வெள்ளைக்காரன் காலத்தில் போடப்பட்ட அந்நியர் நடமாட்ட கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியரின் கண்காணிப்பில் இயக்கப்படுவதாக…

    noelnadesan

    28/08/2012
    Uncategorized
  • காத்திருப்பு – ‘புதுவை’பற்றிய நினைவுகள்

    சொல்ல மறந்த கதைகள் —09 முருகபூபதி – அவுஸ்திரேலியா காத்திருப்பதில் சுகமும் உண்டு சோகமும் உண்டு. காதலர்களின் காத்திருப்பும் பரஸ்பரம் அன்பு நிறைந்த தம்பதியரின் காத்திருப்பும் நண்பர்களின் காத்திருப்பும் சோகத்தையும் சுகத்தையும் நினைவுகளையும் சுமந்துகொண்டிருப்பவை. நானும் ஒருவருக்காக காத்திருக்கின்றேன். “ வானவில்லுக்கு எவரும் வர்ணம் பூசுவதில்லை கரையைத்தழுவும் அலைகளை திரும்பிப்போ என்று எவரும் கட்டளை இடுவதில்லை. குருவிகளுக்கு இதுதான் உங்கள் கூடு என்று எவரும் பாதை காட்டிவிடுவதில்லை. கவிஞனும் இப்படித்தான். அவனுக்கு எவரும் அடியெடுத்துக்கொடுக்க முடியாது, கொடுக்கவும்…

    noelnadesan

    27/08/2012
    Uncategorized
  • காவி உடைக்குள் ஒரு காவியம்

    சொல்லமறந்த கதைகள் -08 முருகபூபதி – அவுஸ்திரேலியா இலங்கையில் வடமேல் மாகாணத்தில் அமைதியான ஒரு சிங்களக் கிராமம். பசுமையான வயல்வெளிகளும் தென்னந்தோப்புகளும் பாக்கு, கித்துல், மா, பலா, வாழை மரங்களும் செழித்து வளரும் விவசாயக்கிராமம். முன்னாள் பிரதமர்கள் பண்டாரநாயக்கா, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா, சந்திரிகா குமாரணதுங்க பண்டாரநாயக்கா ஆகியோரின் பரம்பரை தேர்தல் தொகுதியையும் பரம்பரைக்காணிகளையும் கொண்டு விளங்கும் அத்தனகல்லை என்ற நகரத்துக்கு சமீபமான கிராமம்தான் இங்கு நான் குறிப்பிடும் கொரஸ்ஸ. மினுவாங்கொடை என்ற மற்றுமொரு ஊரைக்கடந்து உடுகம்பொலை என்ற…

    noelnadesan

    25/08/2012
    Uncategorized
  • நாய்களுக்கும் நீரழிவு நோய் வரும்.

    கவிஞர் வைரமுத்து தமிழர்கள் அறிந்த கவிஞர். அவரது கவிதை நூலுக்கு ஆய்வுரை வழங்கியுள்ள கருணாநிதி – முத்தமிழறிஞர் எனப் போற்றப்படுபவர். அதனால் – வைரமுத்துவை ஆகா-ஓகோ எனப் புகழ்ந்துரைத்துள்ளார். ‘எந்த விலங்குக்கும் சர்க்கரை வியாதியில்லை தெரியுமோ?’’ – என்றும் வைரமுத்து இந்த கவிதை நூலில் சொல்கிறார். அப்படிச் சொன்ன கவிஞருக்கும் – கவிஞரின் கவித்திறனுக்கும் ஆய்வுரை வழங்கிய கருணாநிதிக்கும் வாசகர்களுக்கும் – இது சமர்ப்பணம். காலைநேரம். கிளினிக்கை திறக்கச் சற்றுத் தாமதமாகிவிட்டது. பரபரப்புடன் பாதுகாப்பு அலாரத்தை நிறுத்திவிட்டு…

    noelnadesan

    25/08/2012
    Uncategorized
  • காலிமுகம்

    சொல்லமறந்த கதைகள் 07 முருகபூபதி – அவுஸ்திரேலியா கொழும்பில் காலிமுகக் கடற்கரை சரித்திர பிரசித்தம் வாய்ந்தது. தமிழ் நாட்டில் சென்னை மெரீனா பீச்சுக்கு ஒப்பானது. இந்து சமுத்திரத்தாயின் அரவணைப்புடன் திகழும் காலிமுகத்திடலைப்பற்றி ஏராளமான கதைகள், செய்திகள் இன்றும் பேசப்படுபவை. 1974 ஆம் ஆண்டு நானும் சுமார் ஓராண்டுகாலம் இந்த காலிமுகத்திடலில் வெய்யிலில் குளித்து முகத்தை கறுப்பாக்கியிருக்கின்றேன். காலிமுகத்தில்(Galle Face) முன்னைய பாராளுமன்றத்திற்கு முன்பாக செல்லும் காலி வீதியை அகலமாக்கும் வேலை அந்த ஆண்டு தொடங்கப்பட்டபோது, படித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருந்த…

    noelnadesan

    23/08/2012
    Uncategorized
முந்தையப் பக்கம்
1 … 149 150 151 152 153 … 167
அடுத்த பக்கம்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact

பின்னூட்டங்கள் ஏற்றப்படுகின்றன..

    • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
      • Noelnadesan's Blog
      • Join 102 other subscribers
      • Already have a WordPress.com account? Log in now.
      • Noelnadesan's Blog
      • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
      • பதிவு செய்க
      • உள்நுளை
      • Report this content
      • View site in Reader
      • Manage subscriptions
      • Collapse this bar