Noelnadesan's Blog

Just another WordPress.com site

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • Community Story Telling

    Tamil Literature & Arts Society This is to inform you that our organisation Australian Tamil Literature & Arts Society, is organising a ‘Community Story Telling’ event involving the South Asian communities in Melbourne on 16th ( Saturday)August, 2014 at the String Theological College, 44-80 Jackson Road , Mulgrave 3170 at 5 pm. ‘Community Story Telling’…

    noelnadesan

    01/08/2014
    Uncategorized
  • நடேசனின், அசோகனின் வைத்தியசாலை.

    Paiwa Asa அவர்களின் முகநூல்குறிப்பு நடேசனின், அசோகனின் வைத்தியசாலை. படைப்பின் நோக்கமே அதன் வழியாகத் தமிழ்ச்சூழலில் சிந்தனைசார்ந்த ஒருவிழிப்பை உருவாக்குவதைப் பறைசாற்ற வேண்டுமென்பதே.படைப்பாளி எவ்வகையான பின்புலத்திலிருந்து வந்தானென்பது இங்கு முக்கியமல்ல. படைப்புகள் வழியாக தமிழ்ச்சூழலில் சிந்தனைசார்ந்த ஒரு விழிப்பை உருவாக்குவதில் இந்நாவல் பெருவெற்றி கண்டுள்ளது. பேசாதமிருகங்களாலும், அவைகளப் பேசவைக்கும் அல்லது அவைசார்பில் பேசும் மனிதர்களாலும் ஆனதிந்த அசோகனின் வைத்தியசாலை நாவல்.

    noelnadesan

    30/07/2014
    Uncategorized
  • இலக்கியம் – எளிய விளக்கம்

    நடேசன் இலக்கியம் என்பதற்கான நேரடியான ஆங்கில வார்த்தைக்கு லிற்றரிசர் எனவும் கதை சொல்லுவது((Narrative)) என்று விளக்கப்படுகிறது. இங்கு புனைவு, அபுனைவு என்று மேலும் பிரிகிறது. ஆங்கிலத்தில் சரித்திரம் விஞ்ஞானம் எல்லாம் லிற்ரறிசர் என கொள்ளப்படுகிறகு. இங்கே விவிலியநூல் மூல இலக்கியமாக கருதப்படுகிறது அது மட்டுமல்ல ஏராளான இலக்கியத்தின் பிறப்பு விவிலியத்தில் தொடங்குகிறது உதாரணம் மில்டனினின் பரடைஸ் லொஸ்ட். தமிழில் இந்தமாதிரியான வார்த்தைச் சிக்கல் கிடையாது. புனைவே அதிகமாக இலக்கியம் என்ற பெயரில் வெளிப்படுகிறது. அதற்காக கட்டுரைகள் சுயசரிதைகள்…

    noelnadesan

    28/07/2014
    Uncategorized
  • Forum on Migration to Australia

    noelnadesan

    22/07/2014
    Uncategorized
  • மல்லிகை ஜீவாவுக்கு எதிர்வரும் 27 ஆம் திகதி 88 வயது பிறக்கிறது

    முருகபூபதி இலங்கையின் மூத்த எழுத்தாளரும் 45 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து மல்லிகை கலை, இலக்கிய மாத இதழை வெளியிட்ட அதன் ஆசிரியருமான டொமினிக்ஜீவாவுக்கு எதிர்வரும் ஜூன் 27 ஆம் திகதி 88 வயது பிறக்கிறது. 1927 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பிறந்த டொமினிக்ஜீவா முதலில் சிறுகதை எழுத்தாளராகவே இலக்கியத்துறையில் பிரவேசித்தவர். இலங்கை கம்யூனீஸ்ட் கட்சி மற்றும் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு தமக்கு நாளாந்தம் வருவாய்தரும் தொழிலையும்…

    noelnadesan

    23/06/2014
    Uncategorized
  • கடலின் அக்கரை போனவர்களின் கனவுகள் ஆயிரம்

    முருகபூபதி ஒருநாள் குளிர் காலைப்பொழுது. மெல்பன் நகரிலிருந்து விமான நிலையத்திற்கு பிரிஸ்பேர்ண் சென்ற மனைவியை அழைத்துவருவதற்காக பேருந்தில் பயணித்துக்கொண்டிருக்கின்றேன். மனைவி பிரிஸ்பேர்ணிலிருந்து மெல்பனுக்கு புறப்படுவதற்கு முன்னர் எனது கைத்தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொண்டாள். தான் விமானம் ஏறிவிட்டதாக தகவல் சொன்னாள். நானும் மெல்பன் விமான நிலையத்திற்கு வந்துகொண்டிருப்பதாக சொன்னேன். இந்த உரையாடல் சில கணங்களில் முடிந்து எனது கைத்தொலைபேசியை அணைத்தபொழுது எனக்கு முன்னாலிருந்த ஒரு பத்து வயதுச்சிறுமி என்னைப்பார்த்து நீங்கள் தமிழா? எனக்கேட்டாள். நான் திடுக்கிட்டுவிட்டேன். முகத்தில் புன்னகையை…

    noelnadesan

    20/06/2014
    Uncategorized
  • அலுகோசு என்ற பெயரை இலங்கையில் அறிமுகப்படுத்தியது யார்?

    முருகபூபதி அண்மைக்காலங்களில் ஊடகங்களில் அடிபடும் ஒரு பெயர் அலுகோசு. மரண தண்டனையை நிறைவேற்றுபவரை இலங்கையில் அலுகோசு என காலம் காலமாக அழைத்துவருகிறார்கள். அந்தப்பதவிக்கு நியமிக்கப்படுபவரை தமிழில் தூக்குத்தூக்கி என்று சில ஊடகங்கள் எழுதுகின்றன. சில மாதங்களுக்கு முன்னர் லண்டன் பி.பி.சி.யிலும் தூக்குத்தூக்கி என்றே குறிப்பிட்டார்கள். தேனீ இணையத்திலும் அவ்வாறே குறிப்பிடப்பட்டிருக்கிறது. பல வருடங்களுக்கு முன்னர் (1954 இல்) வெளியான சிவாஜிகணேசன் – பத்மினி – ராகினி – லலிதா – பாலையா – காக்கா ராதாகிருஷ்ணன் நடித்த…

    noelnadesan

    16/06/2014
    Uncategorized
  • பேனையும் வாளும் சிலம்படிக்கோலும் ஏந்திய கலைஞர்.

    திரும்பிப்பார்க்கின்றேன் நிழலாக நினைவுகளாக எம்மைத் தொடரும். நீர்கொழும்பூர் முத்துலிங்கம். பேனையும் வாளும் சிலம்படிக்கோலும் ஏந்திய கலைஞர். முருகபூபதி இலங்கையின் மேற்குகரைதனில் இந்து சமுத்திரத்தாயின் அரவணைப்பில் வாழும் நீர்கொழும்பு – ஈழத்து இலக்கிய உலகிலும் இடம்பெற முழுமுதற் காரணமாகத் திகழ்ந்தவர் எழுத்தாளர் நீர்கொழும்பூர் முத்துலிங்கம். இவரது மறைவு எதிர்பார்க்கப்பட்டதே! நீண்ட இடைவெளியின் பின்பு 1997 ஆம் ஆண்டில் இலங்கை சென்ற சமயம் கொழும்பிலும் நீர்கொழும்பிலும் நடைபெற்ற மூன்று இலக்கிய நிகழ்ச்சிகளில் இருவரும் கலந்து கொண்டோம். கொழும்பு நிகழ்ச்சிகளுக்கு இருவரும்…

    noelnadesan

    14/06/2014
    Uncategorized
  • மண்வாசனையை பரவச்செய்த மருதூர்க்கொத்தன்.

    திரும்பிப்பார்க்கின்றேன் கிழக்கிலங்கையின் மண்வாசனையை இலக்கியப்படைப்புகளில் பரவச்செய்த மருதூர்க்கொத்தன் இன்று அவரது பிறந்த தினம் முருகபூபதி பல படைப்பாளிகள் தமது இலக்கியப்பிரதிகளை எழுதும்பொழுது இயற்பெயரை விடுத்து புனைபெயர்களில் அறிமுகமாவார்கள். பலர் தமது பிறந்த ஊருக்குப்பெருமை சேர்க்கும் வகையில் தமக்குத்தாமே ஊருடன் இணைந்த புனைபெயர்களை சூட்டிக்கொள்வார்கள். பின்னாளில் அவர்களின் இயற்பெயரை பிறப்புச்சான்றிதழ் -பதிவுத்திருமண சான்றிதழ் – மரணச்சான்றிதழ்களில்தான் காணமுடியும். இலக்கிய வட்டத்திலும் குடும்ப மட்டத்திலும் புனைபெயரே நிலைத்துவிடும். கிழக்கு மாகாணத்தில் இஸ்மாயில் என்ற பெயரில் ஒரு எழுத்தாளர் இருந்தார் எனச்சொன்னால்…

    noelnadesan

    06/06/2014
    Uncategorized
  • பொலிடோல்

    (சிறுகதை) நடேசன் ஆண் இளைஞனாக இருக்கும் காலத்தில் தனது காமத்தின் வீரியத்தால் தனக்குரிய பெண்ணை வசப்படுத்தி வைத்திருக்கலாம் என நினைக்கிறான். மத்திய வயதில் பணத்தால் அது முடியும் என மனம் சொல்லுகிறது. வயதான காலத்தில் பிள்ளைகள், குடும்பம் என்பன பெண்களை கட்டுக்குள் வைத்திருக்கும் என அவன் தீர்மானிக்கிறான். இப்படியான ஆண்களின் சிந்தனையைத் தாண்டிச்செல்லும் அன்னா கரினாக்கள் ரஷ்யாவில் மட்டுமல்ல இலங்கையின் ஒவ்வொரு கிராமங்களிலும் இருக்கிறார்கள். என்பதை புரிந்து கொள்ளும் சந்தர்ப்பம் எனக்கு எண்பதாம் ஆண்டுகளில் கிடைத்தது. அந்த…

    noelnadesan

    02/06/2014
    Uncategorized
முந்தையப் பக்கம்
1 … 117 118 119 120 121 … 163
அடுத்த பக்கம்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
 

பின்னூட்டங்கள் ஏற்றப்படுகின்றன..
 

    • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
      • Noelnadesan's Blog
      • Join 104 other subscribers
      • Already have a WordPress.com account? Log in now.
      • Noelnadesan's Blog
      • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
      • பதிவு செய்க
      • உள்நுளை
      • Report this content
      • View site in Reader
      • Manage subscriptions
      • Collapse this bar