-
முருகபூபதியின் சொல்லமறந்த கதைகள்
மெல்பனில் முருகபூபதியின் சொல்லமறந்த கதைகள் நூல் வெளியீட்டு அரங்கு படைப்பிலக்கியவாதியும் பத்திரிகையாளருமான மெல்பனில் வதியும் திரு. லெ. முருகபூபதியின் புதிய புனைவிலக்கிய கட்டுரைத்தொகுதி சொல்லமறந்த கதைகள் நூல் வெளியீட்டு அரங்கு எதிர்வரும் 23-08-2014 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 3 மணியிலிருந்து 6 மணிவரையில் மெல்பனில் Dandenong Central Senior Citizens Centre ( No 10, Langhorne Street , Dandenong, Victoria – 3175) மண்டபத்தில் நடைபெறும். கலை, இலக்கிய ஆர்வலர் திரு. கந்தையா…
-
சமூகத்தின் கதை பகிர்வு
பல்லின கலாசார வாழ்வின் வலிகளும் சவால்களும் சாதனைகளும் அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்திய சமூகத்தின் கதை பகிர்வு நிகழ்வு ரஸஞானி அவுஸ்திரேலியா குடியேற்ற நாடாகவும் பல்லின கலாசார நாடாகவும் விளங்குகின்றமையினால் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் இங்கு புகலிடம் பெற்று வாழ்பவர்கள் மத்தியில் சொல்லவேண்டிய கதைகளும் சொல்ல முடியாத கதைகளும் சொல்லத்தயங்கும் கதைகளும் சொல்ல மறந்த கதைகளும் ஏராளமாக இருக்கின்றன. புகலிடம் பருவகால மாற்றம் தொழில் வாய்ப்பு கல்வி தலைமுறை இடைவெளி மனச்சிக்கல்கள் மொழிப்பிரச்சினை குடும்ப உறவுகள்…
-
Sharing stories with your community
Dear Friends I am here as president of Australian Tamil literary and art society and inviting for this story telling event. Any one person can change the way we think -and in changing the way many people think, it can change the world too, because stories touch the heart of many people. We will experience…
-
மலேசியன் ஏர்லைன். 370(சிறுகதை)
நடேசன் காலையில் தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த காஞ்சனாவுக்கு யாரோ வீட்டின் கதவை பலமாகத் தட்டிய சத்தம் கேட்டது. சமயலறையில் நின்றவள் வெளியே வந்தாள். பிள்ளைகள் இருவருக்கும் உணவு கொடுத்து, இளையவளை பாடசாலைக்கும், மூத்தவளைபல்கலைக்கழகத்திற்கும் சில நிமிடங்கள் முன்பாகத்தான் அனுப்பியிருந்தாள். காலை எட்டரைமணிக்கு முன்பாக அதை செய்தால்தான் அவள் தயாராகி தனது வேலைக்குப் போகமுடியும். மருத்துவராக தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் செல்லும் அவசரம் அவளைப் பரபரப்பில் தள்ளியது.. இந்த நேரத்தில் யார் தட்டுகிறார்கள்? செஞ்சிலுவைக்காரரோ இல்லை வேதாகம புத்தகத்தை விற்பவர்களோ?…
-
சிறையில் இருந்து ஒரு காதல் கடிதம் (சிறுகதை )
நடேசன் இளமைப் பருவத்தில நடந்த சம்பவங்கள் வயதான காலத்திலும் நமது நினைவுகளில் கடற்கரையோர மணல் பாதங்களில் ஓட்டிக்கொண்டுவருவதுபோல் நம்முடன் வந்துகொண்டேயிருக்கும். முதல் முத்தம் – திருமணத்திற்கு முன்பான உடலுறவு – சிறுவயதில் குடித்துப் புரைக்கேறிய மதுபானம் – இருமலை உருவாக்கிய முதல் சிகரெட்டு என பல சம்பவங்களை நினைத்துப் பார்ப்போம். அதேபோல் வாழ்வின் நெடும்சாலையில் பலரை எதிர் கொண்டாலும் ஓரு சிலர் அடிமனதில் அழிசாட்டியமாக எமது மனங்களில் ஒட்டிக் கொண்டுவிடுவார்கள். எதுவித முயற்சியாலும் அவர்களை அகற்ற முடியாது…
-
Community Story Telling
Tamil Literature & Arts Society This is to inform you that our organisation Australian Tamil Literature & Arts Society, is organising a ‘Community Story Telling’ event involving the South Asian communities in Melbourne on 16th ( Saturday)August, 2014 at the String Theological College, 44-80 Jackson Road , Mulgrave 3170 at 5 pm. ‘Community Story Telling’…
-
நடேசனின், அசோகனின் வைத்தியசாலை.
Paiwa Asa அவர்களின் முகநூல்குறிப்பு நடேசனின், அசோகனின் வைத்தியசாலை. படைப்பின் நோக்கமே அதன் வழியாகத் தமிழ்ச்சூழலில் சிந்தனைசார்ந்த ஒருவிழிப்பை உருவாக்குவதைப் பறைசாற்ற வேண்டுமென்பதே.படைப்பாளி எவ்வகையான பின்புலத்திலிருந்து வந்தானென்பது இங்கு முக்கியமல்ல. படைப்புகள் வழியாக தமிழ்ச்சூழலில் சிந்தனைசார்ந்த ஒரு விழிப்பை உருவாக்குவதில் இந்நாவல் பெருவெற்றி கண்டுள்ளது. பேசாதமிருகங்களாலும், அவைகளப் பேசவைக்கும் அல்லது அவைசார்பில் பேசும் மனிதர்களாலும் ஆனதிந்த அசோகனின் வைத்தியசாலை நாவல்.
-
இலக்கியம் – எளிய விளக்கம்
நடேசன் இலக்கியம் என்பதற்கான நேரடியான ஆங்கில வார்த்தைக்கு லிற்றரிசர் எனவும் கதை சொல்லுவது((Narrative)) என்று விளக்கப்படுகிறது. இங்கு புனைவு, அபுனைவு என்று மேலும் பிரிகிறது. ஆங்கிலத்தில் சரித்திரம் விஞ்ஞானம் எல்லாம் லிற்ரறிசர் என கொள்ளப்படுகிறகு. இங்கே விவிலியநூல் மூல இலக்கியமாக கருதப்படுகிறது அது மட்டுமல்ல ஏராளான இலக்கியத்தின் பிறப்பு விவிலியத்தில் தொடங்குகிறது உதாரணம் மில்டனினின் பரடைஸ் லொஸ்ட். தமிழில் இந்தமாதிரியான வார்த்தைச் சிக்கல் கிடையாது. புனைவே அதிகமாக இலக்கியம் என்ற பெயரில் வெளிப்படுகிறது. அதற்காக கட்டுரைகள் சுயசரிதைகள்…
-
மல்லிகை ஜீவாவுக்கு எதிர்வரும் 27 ஆம் திகதி 88 வயது பிறக்கிறது
முருகபூபதி இலங்கையின் மூத்த எழுத்தாளரும் 45 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து மல்லிகை கலை, இலக்கிய மாத இதழை வெளியிட்ட அதன் ஆசிரியருமான டொமினிக்ஜீவாவுக்கு எதிர்வரும் ஜூன் 27 ஆம் திகதி 88 வயது பிறக்கிறது. 1927 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பிறந்த டொமினிக்ஜீவா முதலில் சிறுகதை எழுத்தாளராகவே இலக்கியத்துறையில் பிரவேசித்தவர். இலங்கை கம்யூனீஸ்ட் கட்சி மற்றும் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு தமக்கு நாளாந்தம் வருவாய்தரும் தொழிலையும்…