Noelnadesan's Blog

Just another WordPress.com site

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • Children in Detention

    by BINOY KAMPMARK Detaining children in makeshift, harsh facilities has become a feature of global political practice. The grounds are common – inadequate or no documentation; irregular or ‘illegal’ arrivals with their parents. Despite the high minded rhetoric of child protection that surrounds government and civic group initiatives, the mobile child, the refugee minor, is…

    noelnadesan

    28/08/2014
    Uncategorized
  • தமிழக அமைச்சருடன் சந்திப்பு

    எக்ஸோடஸ் 1984-5 நடேசன் காலை எழுந்ததும் எனக்குள் ஒரு அவசரம் ஆவல் பரபரப்பு என பல உணர்வுகள் நோய்க்கிருமிபோல தொற்றிக்கொண்டன. இலங்கையில் அமைச்சர்கள் அதிகாரிகள் என பலருடன் பேசிப் பழகியிருந்தேன். நான் கடமையாற்றும் கால்நடைத் துறைக்குப் பொறுப்பான தொண்டமானை சந்தித்திருக்கிறேன். அநுராதபுரத்தில் பல சிங்கள அமைச்சர்களுடன் நான் பணியிலிருந்த மதவாச்சிய பிரதேசத்தை அபிவிருத்தி செய்வது விடயமாக பேசியிருக்கிறேன். இப்பொழுது சென்னையில் அகதியாக இருக்கும் காலத்தில் ஒரு அமைச்சரை பார்ப்பதற்கு அதுவும் மற்றவர்கள் தேவைக்காக சந்தித்து பேசுவது என்பது…

    noelnadesan

    28/08/2014
    Uncategorized
  • உயிர்ப்புடன் வாழும் தம்பதியர்

    எழுத மறந்த குறிப்புகள் பயிர் வளர் மண்ணில் உயிர்ப்புடன் வாழும் தம்பதியர் தொடர்பாடல்தான் இயந்திர யுகத்தில் ஆரோக்கியத்திற்கு அவசியம் தேவைப்படுகிறது. முருகபூபதி பலரதும் வாழ்க்கை ஏதோ ஒருவகையில் தூண்டுதல்களுடன்தான் தொடருகின்றது. எனது வாழ்வும் அப்படியே சமீபத்தில் நான் வெளியிட்ட எனது சொல்ல மறந்த கதைகள் நூலை வெளியிட முன்வந்தபொழுது அதுதொடர்பாக நான் வழங்கிய வானொலி நேர்காணல் மற்றும் வெளியான விமர்சனங்களையடுத்து அவற்றை செவிமடுத்த – கவனித்த சில இலக்கியவாதிகள் எனக்கு வாழ்த்து தெரிவித்திருந்ததுடன் நூலின் பிரதியும் கேட்டிருந்தார்கள்.…

    noelnadesan

    27/08/2014
    Uncategorized
  • வரலாற்றை எழுதும் முருகபூபதி.

    முருகபூபதியின ‘சொல்ல மறந்த கதை’ நூல் வெளியீட்டடில் நடேசனின் பேச்சு பழய ஏற்பாடு என்ற வேதாகமம் யுத சமூகத்தின் வரலாறு. அந்த இனம் எவ்வாறு நெருக்கடியான காலகட்டதில் காப்பாற்றப்பட்டார்கள் என்பது எழுதப்பட்டிருக்கிறது. மற்ற சமூகங்கள் போல அல்லாது வாழ்வதற்கு இடமற்று பலகாலம் அலைந்து திரிந்தவர்கள.அசிரியர்கள், பபிலோனியர் என பலமான அரசுகளால் அழிக்கப்பட்டவர்கள். மிக குறுகிய காலமே அவர்கள் வரலாற்றில் அரசு உருவாக்கி ஆட்சி செய்தார்கள். இவர்களுக்கு மாறாக நான் எகிப்திற்கு சென்றபோது அங்கு 5000 வருடத் தொடர்ச்சியான…

    noelnadesan

    24/08/2014
    Uncategorized
  • முருகபூபதி யின் சொல்லியே தீர வேண்டிய கதைகள்

    முருகபூபதி யின் சொல்ல மறந்த கதைகள் அல்ல சொல்லியே தீர வேண்டிய கதைகள் முக்காலத்தையும் உணர்ந்துகொள்வதற்கான சிந்தனைப்புலத்துக்கு இட்டுச்செல்லும் சமூகக் கரிசனைக் கதைகள் கருணாகரன் முருகபூபதி எழுதியிருக்கும் “சொல்ல மறந்த கதைகள்“ நம்முடைய சமகால எழுத்துகளில் மிகுந்த கவனத்திற்குரியதாக உள்ளது. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. இந்தக் கதைகள் ஒரு காலகட்டத்தின் உண்மை மனிதர்களையும் உண்மையான நிகழ்ச்சிகளையும் மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளன. நமது சமகால அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டு அம்சங்களை உள்ளடக்கியதாக இவை உள்ளன. அத்துடன்…

    noelnadesan

    22/08/2014
    Uncategorized
  • முருகபூபதியின் சொல்லமறந்த கதைகள்

    மெல்பனில் முருகபூபதியின் சொல்லமறந்த கதைகள் நூல் வெளியீட்டு அரங்கு படைப்பிலக்கியவாதியும் பத்திரிகையாளருமான மெல்பனில் வதியும் திரு. லெ. முருகபூபதியின் புதிய புனைவிலக்கிய கட்டுரைத்தொகுதி சொல்லமறந்த கதைகள் நூல் வெளியீட்டு அரங்கு எதிர்வரும் 23-08-2014 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 3 மணியிலிருந்து 6 மணிவரையில் மெல்பனில் Dandenong Central Senior Citizens Centre ( No 10, Langhorne Street , Dandenong, Victoria – 3175) மண்டபத்தில் நடைபெறும். கலை, இலக்கிய ஆர்வலர் திரு. கந்தையா…

    noelnadesan

    20/08/2014
    Uncategorized
  • சமூகத்தின் கதை பகிர்வு

    பல்லின கலாசார வாழ்வின் வலிகளும் சவால்களும் சாதனைகளும் அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்திய சமூகத்தின் கதை பகிர்வு நிகழ்வு ரஸஞானி அவுஸ்திரேலியா குடியேற்ற நாடாகவும் பல்லின கலாசார நாடாகவும் விளங்குகின்றமையினால் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் இங்கு புகலிடம் பெற்று வாழ்பவர்கள் மத்தியில் சொல்லவேண்டிய கதைகளும் சொல்ல முடியாத கதைகளும் சொல்லத்தயங்கும் கதைகளும் சொல்ல மறந்த கதைகளும் ஏராளமாக இருக்கின்றன. புகலிடம் பருவகால மாற்றம் தொழில் வாய்ப்பு கல்வி தலைமுறை இடைவெளி மனச்சிக்கல்கள் மொழிப்பிரச்சினை குடும்ப உறவுகள்…

    noelnadesan

    18/08/2014
    Uncategorized
  • Sharing stories with your community

    Dear Friends I am here as president of Australian Tamil literary and art society and inviting for this story telling event. Any one person can change the way we think -and in changing the way many people think, it can change the world too, because stories touch the heart of many people. We will experience…

    noelnadesan

    18/08/2014
    Uncategorized
  • மலேசியன் ஏர்லைன். 370(சிறுகதை)

    நடேசன் காலையில் தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த காஞ்சனாவுக்கு யாரோ வீட்டின் கதவை பலமாகத் தட்டிய சத்தம் கேட்டது. சமயலறையில் நின்றவள் வெளியே வந்தாள். பிள்ளைகள் இருவருக்கும் உணவு கொடுத்து,  இளையவளை பாடசாலைக்கும், மூத்தவளைபல்கலைக்கழகத்திற்கும் சில நிமிடங்கள் முன்பாகத்தான் அனுப்பியிருந்தாள். காலை எட்டரைமணிக்கு முன்பாக அதை செய்தால்தான் அவள் தயாராகி தனது வேலைக்குப் போகமுடியும். மருத்துவராக தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் செல்லும் அவசரம் அவளைப் பரபரப்பில் தள்ளியது.. இந்த நேரத்தில் யார் தட்டுகிறார்கள்? செஞ்சிலுவைக்காரரோ இல்லை வேதாகம புத்தகத்தை விற்பவர்களோ?…

    noelnadesan

    06/08/2014
    Uncategorized
  • சிறையில் இருந்து ஒரு காதல் கடிதம் (சிறுகதை )

    நடேசன் இளமைப் பருவத்தில நடந்த சம்பவங்கள் வயதான காலத்திலும் நமது நினைவுகளில் கடற்கரையோர மணல் பாதங்களில் ஓட்டிக்கொண்டுவருவதுபோல் நம்முடன் வந்துகொண்டேயிருக்கும். முதல் முத்தம் – திருமணத்திற்கு முன்பான உடலுறவு – சிறுவயதில் குடித்துப் புரைக்கேறிய மதுபானம் – இருமலை உருவாக்கிய முதல் சிகரெட்டு என பல சம்பவங்களை நினைத்துப் பார்ப்போம். அதேபோல் வாழ்வின் நெடும்சாலையில் பலரை எதிர் கொண்டாலும் ஓரு சிலர் அடிமனதில் அழிசாட்டியமாக எமது மனங்களில் ஒட்டிக் கொண்டுவிடுவார்கள். எதுவித முயற்சியாலும் அவர்களை அகற்ற முடியாது…

    noelnadesan

    03/08/2014
    Uncategorized
முந்தையப் பக்கம்
1 … 116 117 118 119 120 … 163
அடுத்த பக்கம்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
 

பின்னூட்டங்கள் ஏற்றப்படுகின்றன..
 

    • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
      • Noelnadesan's Blog
      • Join 104 other subscribers
      • Already have a WordPress.com account? Log in now.
      • Noelnadesan's Blog
      • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
      • பதிவு செய்க
      • உள்நுளை
      • Report this content
      • View site in Reader
      • Manage subscriptions
      • Collapse this bar