Noelnadesan's Blog

Just another WordPress.com site

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • அசோகனின் வைத்தியசாலை – நடேசன்

    அசோகனின் வைத்தியசாலை – நடேசன் மகிழ் வெளியீடு, கிளிநொச்சி, விலங்கை பக்கம் 402 விலை ரூ.300 ஆஸ்திரேலியாவில் மிருக வைத்தியசாலை ஒன்றைப் பின்புலமாகக் கொண்டு,அங்கு மருத்துவராக பணியில் சேரும் புலம்பெயர்ந்த தமிழன் சிவா சுந்தரத்தின் நோக்கில் விரியும் இந்நாவலில்,மிருக சிகிச்சையின் வரலாறு, மிருகத்திற்கும் மனிதர்களுக்குமான உறவு, அம்மருத்துவமனை நிர்வாகம்,அதன் உள்அரசியல் எனப் பலவும் பேசப்படுகிறது.சிவாவின் எண்ணங்களை மறுத்து உரையாடும் ‘கொலிங்வுட்’ என்னும் பேசும் பூனை,அவனுடைய மனசாட்சியின் தலைகீழ் வடிவமாக நாவல் முழுவதும் வருகிறது.இதில் ஈழப்பிரச்சனை குறித்து ஓரிடத்திலும்…

    noelnadesan

    20/08/2015
    Uncategorized
  • அசோகனின் வைத்தியசாலை -திறனாய்வு

    புத்தகம்பேசுகிறது என்ற இதழில் வந்தது அசோகனின் வைத்தியசாலை

    noelnadesan

    09/08/2015
    Uncategorized
  • ஈழத்தமிழரின் பேசாப்பொருள் ;பெண்களின் மறுமணம்

    நடேசன் அவுஸ்திரேலியாவில் இருந்து கால்நூற்றாண்டுக்கும் மேலாக நண்பர் முருகபூபதி முன்னின்று நடத்தும் இலங்கை மாணவர் கல்வி நிதியம் இலங்கையில் நீடித்த போரினால் பாதிக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெற்றோரை அல்லது குடும்பத்தின் மூல உழைப்பாளியை இழந்த மாணவர்களுக்கு நிதி உதவியளித்து, அவர்கள் தமது கல்வியை தொடர்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. தற்பொழுது நூற்றுக்கணக்கான மாணவர்கள் இந்நிதியத்தினால் பயனடைந்து வருகிறார்கள். சமீபத்தில் இந்நிதியத்தின் ஆண்டுபொதுக்;கூட்டத்தில் கலந்துகொண்டேன். நடந்த கலந்துரையாடலின்போது , போரின் வன்முறையால் விதவைகளாகிய பெண்களுக்கு மறுமணம் நடக்குமாயின் இந்த நிதியத்தின்…

    noelnadesan

    09/08/2015
    Uncategorized
  • போர்ணோ எனும் நீலப்படங்கள்

    நடேசன் கூகுள் தனது இணையத்தில் நடத்திய தேடல்களின்படி இந்தியர்கள் மற்றும் இலங்கையினர் செக்ஸ் என்ற வார்தையை அதிகமாகத் தேடியவர்களாக அறிவித்திருந்தது. தற்போதய தொழில்நூட்ப முறைப்படி எந்த மாவட்டத்தில் அல்லது எந்த ஊரில் இருந்து தேடினார்கள் என்பதைக் கண்டுபிடிக்முடியும். இதன்படி கலாச்சாரம் பண்பாட்டால் மறைபொருளாக இருக்கும் இடங்களில் இந்த தேடல் தொடங்குகிறது. போர்ணோ எனும் நீலப்படங்கள் பெண்களை தரக்குறைவாக காமப் பொருளாக நினைக்கவைப்பதிலும், சில தொகையினர் இதற்கு அடிமையயாகிவிடுகிறர்கள் என்பதிலும் மாற்றுக்கருத்தில்லை. போண் வீடியோ தடை எக்காலத்திலும் உள்ளது…

    noelnadesan

    06/08/2015
    Uncategorized
  • சிறுகதைகளைப் புரிந்து கொள்வது எப்படி ?

    நடேசன் சிறுகதை இலக்கியம் ஐரோப்பிய மற்றும் அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகளில் 19ஆம் நூற்றாண்டுகளில் தோன்றியது. இதில் முக்கியமாக, கோகுல்(Gogol) அலன்போ Edgar Allan Poe) நத்தானியல் ஹாத்தோன்( Nathaniel Hawthorne)அவர்களின் பின்பாக செழுமைப்படுத்தியவர்கள் மாப்பசான்(Guy de Maupassant), செக்கோவ் (Anton Chekhov)ஆகியோர். சிறுகதை மேற்கு நாட்டிலிருந்து வந்த வடிவம் இதில் அலன்போ, கோகுல் அமான்னிசத்தைக் கலந்து படைத்தார்கள். ஆனால் மாப்பசான் , செக்கோவ் போன்றவர்கள் யதார்த்த சித்திரிப்பாக சாதாரண மனிதர்களின் மன நிலைகளைப் பற்றிய கதைகளை…

    noelnadesan

    05/08/2015
    Uncategorized
  • ஆற்றோர கிராமத்தில் அவளொரு துரோகி.

    நடேசன் கடல் நுரை நிறத்தின் மேல் கறுப்பு புள்ளிகளை உடலெங்கும் கொண்ட அந்த பெட்டை நாய் லைட்டு கம்பத்தில் வெண்ணிற கையிற்றினால் இடுப்பிலும் நெஞ்சிலும் பல முறை சுற்றி கட்டப்பட்டிருந்த இளம் வயதுப் பெண்ணின் சடலத்தை முகர்ந்து பார்த்தது.பின்பு அவளது பாதங்களையும் கால்விரல்களையும் நக்கியது. சாலையில் போய்வரும் வாகனங்களினால் வாரியடிக்கப்பட்ட புழதி அவளது தேகத்திலும் அணிந்திருந்த ஆடைமேலும் போர்வையாக போர்த்தி இருந்தது. இடது தோளில் சாhய்ந்திருந்த தலையில் இருந்து தொங்கும் ஒற்றைப்பின்னல்லும் புழதி படிந்து இடைக்கு கீழே…

    noelnadesan

    03/08/2015
    Uncategorized
  • சிறுகதை: உயிர்க் கொல்லிப் பாம்பு.

    நடேசன் கடல் சூழ்ந்த மல்லிகைத்தீவில் வடமேல் பருவக்காற்றால் மழை மேகங்கள் கருக்கட்டி இடியுடன் பயங்கரமான மழையும் பெய்தது.மக்களுக்கு மழைக்காலம் எப்பொழுதும் ஆனந்தமானது. பத்துமாதம் எரிக்கும் கோடை, இரண்டு மாதங்கள் விராடதேசத்தில் ஒளிந்த பாண்டவர்களாக தலைமறைவாகும்.வற்றிய குளங்கள், நிலம் தெரியும் கிணறுகள், புழுதி சிந்தும் நிலங்கள் எல்லாம் நெடுநாளாக தாகத்துடன் பாலைவனத்தை கடந்துவந்த வழிப்போக்கனைப்போல் நீர் வேண்டிக் காத்திருந்தன. வங்காள விரிகுடாவில் காற்றமுக்கம் என்று வானொலியில் கேட்டபோது அசட்டையாக இருந்துவிட்டார்கள். மழை, வேறு இடங்களுக்கு காற்றால் எடுத்து செல்லப்படுவதை…

    noelnadesan

    31/07/2015
    Uncategorized
  • கண்ணாடிச் சட்டத்துள் காட்சியாகிய அப்துல் கலாமின் காசோலை

    ” இளம்தலைமுறையினரே கனவு காணுங்கள் ” என்று அறைகூவல் விடுத்தவரின் நீண்ட கால கனவு நனவாகவில்லை. உலகத்தலைவர்களுக்கும் தேசங்களுக்கும் முன்மாதிரியாக வாழ்ந்த படகோட்டியின் மைந்தன் முருகபூபதி கடல் அலைகள், பொன்மணல், புனிதயாத்திரிகர்களின் நம்பிக்கை, இராமேஸ்வரம் பள்ளிவாசல் தெரு, இவையெல்லாம் ஒன்று கலந்த உருவம் நீ… என் அன்னையே… உன் ஆதரவுக்கரங்கள் என் வேதனையை மென்மையாய் அகற்றின உன் அன்பும் ஆதரவும் நம்பிக்கையும் எனக்கு வலிமை தந்தன. அதைக்கொண்டே நான் இந்த உலகை அச்சமின்றி எதிர்கொண்டேன் என் அன்னையே……

    noelnadesan

    28/07/2015
    Uncategorized
  • ஜெயமோகனின் முதற்கனல்- எனது பார்வை.

    நடேசன். ஜெயமோகனின் முதற்கனலை படித்து முடித்து அதைப் பற்றிய எனது பார்வையை எழுத நினைத்தபோது என்னளவில் அறிந்த ஒரு சிறிய வரலாறும் நினைவுக்கு வந்தது. கடந்த 2014 ஆம் ஆண்டு மார்கழியில் எனது அறுபதாவது பிறந்த தினத்தின்போது எனது மனைவியும் நண்பர் முருகபூபதி மற்றும் எனது உறவினரான சிறிஸ்கந்தராஜாவும் ஒழுங்குசெய்த நிகழ்ச்சிக்கு பல நண்பர்கள் வந்து பல பரிசுப்பொருட்கள் தந்தார்கள். சேர்ட்டுகள் குடிவகைகள் எல்லாம் கொடுத்தார்கள். நண்பர் இளங்கோவும் டொக்டர் ஐமன் ஹாசனும் எனக்கு புத்தகங்களை பரிசளித்தனர்.…

    noelnadesan

    28/07/2015
    Uncategorized
  • அயற்சியை அந்நியப்படுத்திய ஆளுமை ஜெயமோகன்

    முருகபூபதி (அண்மையில் கனடா இலக்கியத்தோட்டம் வழங்கிய இயல்விருதினைப் பெற்றுக்கொண்ட படைப்பிலக்கியவாதி ஜெயமோகனுக்கு கனடா காலம் இதழ் சிறப்பு மலர் வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்ற கட்டுரை.) தமிழ் இலக்கியப்பரப்பில் சமகாலத்தில் என்னை பிரமிப்பில் ஆழ்த்திக்கொண்டிருக்கும் படைப்பாளி திரு. ஜெயமோகன் அவர்கள்தான் எனச் சொல்வதன் மூலம் ஜெயமோகன் வழிபாட்டில் நான் என்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கின்றேன் எனச்சொல்லமுடியாது. வாசிப்பு அனுபவம் காலத்துக்குக்காலம் மாறிக்கொண்டிருப்பது. ஒரு காலத்தில் ஒரே இரவில் சிவகாமியின் சபதம் படித்தவர்தான் ஜெயமோகன். அவருக்கு ஆரம்பத்தில் ஆதர்சமாக இருந்த சுந்தரராமசாமி தமது…

    noelnadesan

    22/07/2015
    Uncategorized
முந்தையப் பக்கம்
1 … 106 107 108 109 110 … 163
அடுத்த பக்கம்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
 

பின்னூட்டங்கள் ஏற்றப்படுகின்றன..
 

    • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
      • Noelnadesan's Blog
      • Join 104 other subscribers
      • Already have a WordPress.com account? Log in now.
      • Noelnadesan's Blog
      • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
      • பதிவு செய்க
      • உள்நுளை
      • Report this content
      • View site in Reader
      • Manage subscriptions
      • Collapse this bar