-
இலங்கையில் இலக்கிய நடை முறைகளை எப்படி ஊக்குவிப்பது?
நடேசன் இலங்கையில் தமிழ் இலக்கியம் கடந்தகாலப் போரினால் ஏற்பட்ட தடைகளையும் மீறி தற்பொழுது துளிர்த்து வருகிறது. பலர் தனிப்பட்ட ரீதியிலும் குழுவாகவும் வெவ்வேறு பிரதேசத்தில் இயங்குகிறார்கள் என்பது, பல இலங்கை நண்பர்களோடு பேசியபோது எனக்குப் புரிந்தது. இந்த இலக்கியச் செடியை உரமீட்டு மேலும் வளம்பெற செய்யவேண்டும் என்ற எனது விருப்பத்தால் பலருடன் கலந்துரையாடியபோது, தொடர்ச்சியான நடவடிக்கைகளால் மட்டுமே அதை ஏற்படுத்தமுடியும் என்பதும் மேலும் இந்த நடவடிக்கைகளுக்கு நிதிவளமும் தேவை என்பதும் புரிந்தது. ஆங்காங்கு நடத்தப்படும் மாநாடுகளையும் இலக்கிய…
-
உண்மை கசப்பாக இருந்தாலும் உண்மை உண்மையே
நடேசன் அவுஸ்திரேலியர்கள் நிறவாத தென்னாபிரிக்க கிரிக்கட் ஆட்டக்காரர்களை முன்பு பகிஷ்கரித்தார்கள். அதில் ஒரு நியாயம் இருந்தது. நிறவாத அரசு அகன்ற பின்னர் தலைவர் நெல்சன் மண்டேலாவை வரவேற்றார்கள். முன்னர் இங்கிருந்த சிங்கள தேசிவாதிகள் அமர்தலிங்கத்தை பகிஷ்கரித்து அட்டைகளை சுமந்து துண்டுப்பிரசுரம் விநியோகித்தார்கள். பிறிதொரு சந்தர்ப்பத்தில் பிரேமதாச வந்தபொழுதும் லலித் அத்துலத் முதலி வந்தபொழுதும் இங்குள்ள தமிழ்த்தேசியவாதிகள் பகிஷ்கரித்து அதேபாணியில் எதிர்ப்புக்குரல் எழுப்பினார்கள். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தற்பொழுது இலங்கை கம்பன் கழகத்தையும் அதன் ஸ்தாபகர் கம்பவாரிதி ஜெயராஜையும்…
-
மீண்டும் ஒரு ஆதாம்.
(சிறுகதை) நடேசன் இறைவன் தனது சாயலில் மண்ணில் இருந்து உருவாக்கிய உருவத்தின் நாசியில் தனது மூச்சை ஊதியபோது மனிதன் உருப்பெற்றான். அந்த மனிதன் ஆதாம் எனப்பெயர் பெருகிறான்- வேதாகமம். ********************** வீதியில் காத்திருப்பது அவனுக்கு கடினமாக இருந்தது. நாற்பது வயது கடந்து விட்ட பின்பு, நல்ல நோக்கமிருந்தாலும், பெண்ணொருத்திக்காக கல்லூரி மாணவன்போல் நடந்துகொள்வது எப்படி…..? வாழ்வில் ஒரே ஒரு முறை மட்டும் சந்தித்த சீனத்து இளம் பெண்ணொருத்திக்காகக் காத்திருப்பது அந்தரமான குற்ற உணர்வைக் கொடுத்தது. எவ்வளவு நேரம்தான்…
-
நடேசனின் ‘வாழும் சுவடுகள்.’
ஆசிரியர்: டாகடர் என்.எஸ்.நடேசன். பதிப்பகம்: மித்ர; டாக்டர் நடேசனின் ‘வாழும் சுவடுகள்’ தமிழ் இலக்கிய உலகிற்கு நல்லதொரு வரவு. புது முயற்சியும் எனலாம். ‘நாலுகால் சுவடுகளே’ ‘வாழும் சுவடுகளான’ தலைப்பு மாற்றத்தினை நூலிற்கான எஸ்.பொ.வின் முன்னீடு தெரிவிக்கின்றது. மனிதரின் மிருக அனுபவங்களை வைத்துப் புனைகதைகள் பின்னப்படும் இக்காலகட்டத்தில் ‘வாயில்லாச் சீவன்ளுடனான’ மனிதரின் அனுபவங்களை மனிதாபிமானக் கண்ணோட்டத்தில் கூறும் ‘வாழும் சுவடுகள்’ இன்னுமொரு விதத்திலும் சிறந்து விளங்குகின்றது. ஆசிரியரின் எழுத்தாற்றல் காரணமாக ஒவ்வொரு அனுபவங்களும் ஈசாப் கதைகளைப் போல்…
-
ஜி. நாகராஜனின் சிறுகதைகள.
நடேசன் சிறுகதைகள் மனித வாழ்வின் தருணத்தை மின்னலாக வெளிச்சமிடுபவை. சிறுகதைகளின் தொடக்கம் ஜாதகக்கதைகள், விவிலியம் ஈசாப் கதைகளிலிருந்து தோன்றினாலும் அமரிக்கா, இரஸ்சியாவில் 19ஆம் நூற்றாண்டிலே இலக்கியமாக வரையறை செய்யப்படுகிறது. சிறுகதைகளை மதிப்பிடுவதில் உள்ளடக்கம், மொழி, அமைப்பு, என்பவற்றுடன் நம்பகத்தன்மை, சர்வதேசியத்தன்மை, வாசிப்போரது உள்ளத்தில் உருவாக்கும் தாக்கம் எனப்பல கூறுகள் அடங்கியது ஜி நாகராஜனின் சிறுகதைகள் அவரது நாவல்கள் போல் உள்மன உணர்வுகளையும், கனவுகளையும் வெளியே கொணர்ந்து மனிதர்களின் மனதை கூறுபோட்டு மேசையில் காட்சிப்படுத்தும். அவருடைய சிறுகதைகளைக் கூர்ந்து…
-
யார் பொறுப்பாளி? யாரது நாய்??
குடும்பங்களில் நாய்கள் பூனைகள் போன்ற செல்லப்பிராணிகள் பல்லாயிரம் ஆண்டு காலமாக வேட்டைத் தோழனாகவும், அதன் பின்பு வேட்டையாடுதல் அருகி தோழமைக்காக என வீட்டின் பின் வளவுகளில் வளர்க்கப்படும். தற்பொழுது சிறிய குடும்பங்கள், பெரிய வீடுகள் என நிலமை மாறிக்கொண்டு வருவதால், செல்லப்பிராணிகள் வீட்டினுள்ளே வந்துவிட்டன. தற்பொழுது படுக்கை அறைவரையும் செல்கின்றன. எங்கள் வீட்டில் படுக்கையின் அருகே எங்களது சிண்டி நாய் படுத்து குறட்டை விட்டு தூங்கும். ஏதாவது கனவு கண்டால் எங்களை நித்திரையில் இருந்து எழுப்பும். தனக்கு…
-
எழுத்தாளர்களும் தேர்தல்களும்
திரும்பிப்பார்க்கின்றேன் அரசியல் அதிகாரம் என்பது மக்களின் நலன்களுக்காகவே மக்களினால் தேர்தலில் தரப்படுகிறது. அத்தகைய ஜனநாயக உலகில் நாம் வாழ்கின்றோம். முருகபூபதி சங்ககாலத்திலிருந்து புலவர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் அரசியல் பேசிவந்தவர்கள்தான். அவர்கள் அரசியல்வாதியாகவில்லையென்றாலும் இவர்களில், சங்ககாலப் புலவர்கள் மன்னர்களை புகழ்ந்து பாடியே வாழ்க்கையை ஓட்டினர். விதிவிலக்காக ” மன்னவனும் நீயோ வளநாடும் உனதோ…” என்று தமது தர்மாவேசத்தை கொட்டிவிட்டு அரசவையை விட்டுப்புறப்பட்டவர்தான் கம்பர் என்றும் சொல்லப்படுகிறது. வள்ளுவரும் இளங்கோவும் அவருக்குப் பின்னர் வந்த பாரதியும் அரசியல், அறம் பற்றியெல்லாம்…
-
அசோகனின் வைத்தியசாலை – நடேசன்
அசோகனின் வைத்தியசாலை – நடேசன் மகிழ் வெளியீடு, கிளிநொச்சி, விலங்கை பக்கம் 402 விலை ரூ.300 ஆஸ்திரேலியாவில் மிருக வைத்தியசாலை ஒன்றைப் பின்புலமாகக் கொண்டு,அங்கு மருத்துவராக பணியில் சேரும் புலம்பெயர்ந்த தமிழன் சிவா சுந்தரத்தின் நோக்கில் விரியும் இந்நாவலில்,மிருக சிகிச்சையின் வரலாறு, மிருகத்திற்கும் மனிதர்களுக்குமான உறவு, அம்மருத்துவமனை நிர்வாகம்,அதன் உள்அரசியல் எனப் பலவும் பேசப்படுகிறது.சிவாவின் எண்ணங்களை மறுத்து உரையாடும் ‘கொலிங்வுட்’ என்னும் பேசும் பூனை,அவனுடைய மனசாட்சியின் தலைகீழ் வடிவமாக நாவல் முழுவதும் வருகிறது.இதில் ஈழப்பிரச்சனை குறித்து ஓரிடத்திலும்…
-
ஈழத்தமிழரின் பேசாப்பொருள் ;பெண்களின் மறுமணம்
நடேசன் அவுஸ்திரேலியாவில் இருந்து கால்நூற்றாண்டுக்கும் மேலாக நண்பர் முருகபூபதி முன்னின்று நடத்தும் இலங்கை மாணவர் கல்வி நிதியம் இலங்கையில் நீடித்த போரினால் பாதிக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெற்றோரை அல்லது குடும்பத்தின் மூல உழைப்பாளியை இழந்த மாணவர்களுக்கு நிதி உதவியளித்து, அவர்கள் தமது கல்வியை தொடர்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. தற்பொழுது நூற்றுக்கணக்கான மாணவர்கள் இந்நிதியத்தினால் பயனடைந்து வருகிறார்கள். சமீபத்தில் இந்நிதியத்தின் ஆண்டுபொதுக்;கூட்டத்தில் கலந்துகொண்டேன். நடந்த கலந்துரையாடலின்போது , போரின் வன்முறையால் விதவைகளாகிய பெண்களுக்கு மறுமணம் நடக்குமாயின் இந்த நிதியத்தின்…