-
நதி நடந்தே சென்றிட வழித்துணைதான் தேவையா…?
” நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் ” தொடருக்கு களம் தந்த ஈழநாடு குகநாதன். அவதூறுப் பசளையிலும் துளிர்த்தெழுந்த ஊடகச்செடியின் நிழலில் சில நினைவுகள் திரும்பிப்பார்க்கின்றேன். முருகபூபதி பாடசாலையில் உயிரியல் படித்தபொழுது ஒரு தாவரம் உயிர்வாழ்வதற்கு என்னவேண்டும்…? என்று ஆசிரியர் சொன்னபோது, மண், நீர், காற்று, சூரியவெளிச்சம் என்று விளக்கினார். எங்கள் வீட்டில் ரோஜாச் செடிகளையும் கத்தரி, தக்காளிச் செடிகளையும் பாட்டியும் அம்மா, அக்காவும் வளர்த்தார்கள். தாத்தா ஒரு மல்லிகைச் செடியை வளர்த்து அதற்கென பந்தலும் போட்டார். அத்துடன்…
-
டொக்டர் பிரமோத் கரன் சேத்தி நினைவுகள்
எக்ஸைல் 1984 நடேசன் தமிழர் மருத்துவ நிதியத்திற்கு சிறிது சிறிதாக பணம் சேர்ந்தபோது எமது நடவடிக்கைகளை அகலப்படுத்த முயற்சித்தோம். அப்போது எனது மனைவி சியாமளா மட்டும் மருத்துவ நடவடிக்கைகளை கவனித்தவண்ணமிருந்தார். அதிகமாக மருத்துவ வசதிகளைப் பயன்படுத்தியவர்கள் எமக்கு அருகில் இருந்த ஈழமக்கள் விடுதலை முன்னணியினர். அதைவிட அந்தப் பகுதியில் இலங்கையில் இருந்து இடம் பெயர்ந்து வந்திருந்த இலங்கைத் தமிழர்களும் சிகிச்சைக்காக வந்தார்கள். அயலில் இருந்த சென்னை வாழ் தமிழர்களும் வரும்போது எமக்கு வேலைப்பளு கூடியது. மருத்துவ அறிவை…
-
பயங்கரவாதம் .
> பாரிசில் இறந்த அப்பாவி மக்களின் இறப்பை நினைவு கூருகிறேன். அதேவேளையில் எதிர்காலத்தையும் எண்ணி அஞ்சவேண்டியுள்ளது. காரணம் நமக்கு பல பாடங்கள் தெரிந்திருக்கிறது. இடதுசாரிகளின் வர்க்கப்போராட்டத்தில் நூறு வருடங்களுக்கு முன்பாகவே பயங்கரவாதத்தை எதிர்த்தவர் லியோன் ரோக்ஸி (Leon Trotsky)) இவர் மூன்று காரணங்களைக் கூறினார். 1. ஏற்கனவே துன்பப்பட்ட, சுரண்டப்பட்ட மக்கள் கொல்லப்படுவதற்கு வழிவகுக்கும். 2. வன்முறையையும் அடக்குமுறையையும் ஆளும் வர்க்கத்திடம் மேலும் மேலும் எதிர்பார்க்கவேண்டிவரும். 3. எல்லாவற்றிலும் முக்கியமாக மக்கள் மத்தியில் தனிமனிதர்களின் செயல்கள் வரவேற்புபெற்று…
-
சாத்திரியின் ஆயுத எழுத்து
படித்தோம் சொல்கிறோம் முருகபூபதி தாயும் இன்றி தந்தையும் இன்றி தான் ஒரு இஸ்லாமியன் என்ற பிரக்ஞையே இல்லாமல் குழந்தைப்பருவத்தில் இவர்களுடன் இணைந்துகொண்டு இயக்க முகாமில் தேநீர் தயாரித்துதரும் கிச்சான் என்ற சிறுவனுக்கும் ஜீகாத்துக்கும் தொடர்பு இருக்கும் என்ற சந்தேகத்தில் கரிகாலன் என்பவர் அவனைக்கொண்டே கிடங்கு வெட்டச்செய்து அவனது தலையில் போடச்சொல்லி உத்தரவு பிறப்பிக்கிறார். கிச்சானின் மரணவாக்குமூலம் இவ்வாறு பதிவாகிறது: ” அண்ணே… எனக்கு அப்பா யாரெண்டே தெரியாது. அம்மாவும் துரத்திவிட்டா. பிறகு எங்கேயெல்லாமோ அலைஞ்சு திரிஞ்சன். ஆனா,…
-
அவுஸ்திரேலியாவில் தமிழ் எழுத்தாளர் விழா 2015
ஆறு கலை – இலக்கிய அரங்குகளில் அவுஸ்திரேலியாவில் தமிழ் எழுத்தாளர் விழா 2015 நூல்களின் கண்காட்சி அரங்கு இலக்கிய கருத்தரங்கு நூல் விமர்சன அரங்கு கவியரங்கு விவாத அரங்கு மகளிர் அரங்கு முருகபூபதி அவுஸ்திரேலியாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் வருடாந்தம் நடைபெற்றுவரும் தமிழ் எழுத்தாளர் விழா இம்முறை மெல்பனில் ஒரே மண்டபத்தில் ஆறு அரங்குகளாக நடைபெற ஏற்பாடாகியுள்ளது. படைப்பு இலக்கியம் – நடனம் – ஓவியம் – ஊடகம் – சமூகம் – பண்பாடு…
-
பொன் விளையும் பூமி.
பிற்க்காலத்தில் மண்டேலா வாழ்ந்த வீடு சுவற்றோக் குழந்தை எங்கள் தமிழ் வழக்கத்தில் பொன் விளையும் பூமி என்ற நாங்கள் கேள்விப்பட்டது நெல் விளையும் வயலைத்தான். ஆனால் உண்மையாக பொன் விளைந்தது மட்டுமல்ல பாதையோரத்தில் குவிக்கப்பட்ட மண்குவியல் தங்கத்துகளை தன்னகத்தே கொண்டு தங்க நிறத்தில் காட்சியளிக்கும் ஒரே நகரம் ஜோகன்ஸ்பேக். அந்த மண்ணில் இருந்து தங்கத்தை எடுப்பதற்கு அதிக செலவாகும் என்பதால் அங்காங்கு மலைபோல் குவிக்கப்பட்டிருக்கிறது. பொன் மண் நாங்கள் போய் இறங்கிய விமான நிலயம் ஆபிரிக்கா காங்கிரஸ்…
-
ரோபின் ஐலண்ட்- தென்ஆபிரிக்கா
சிறைப்பறவையின் விசாலமான மனப்பான்மை. நடேசன் தொடர்ச்சியாக முழங்கியபடி கரையை மோதும் நீல நிறமான அத்திலாந்திக் சமுத்திரத்தில் மேற்கு நோக்கி கேப்ரவுணில் இருந்து ஒரு மணிநேரம் பிரயாணம் செய்தால் நெல்சன் மண்டேலாவை 18 வருடங்கள் சிறைவைத்த ரொபின் ஐலன்ட் என்ற தீவை அடையலாம். பிரயாணசீட்டை பெற்றுக்கொண்டு கேப்ரவுண் துறைமுகத்தில் இருந்து சிறிய படகு, ஆனால் பாதுகாப்பான வசதிகள் கொண்டதில் புறப்பட்டோம். அன்று மழையும் காற்றுமாக பருவகாலம் சோதித்தது. காலையில் குறிப்பிட்ட நேரத்திற்குப் புறப்பட்டு மீண்டும் அதே படகில் வந்து…
-
தமிழினி
தமிழினி என்ற சிவகாமி போரின் பின்னர் கைதாகி விடுதலையாகும் வரையில் அவர் ஒரு பெண்போராளி என்றே பரவலாக அறியப்பட்டிருந்தார். வெளியே வந்த பின்னர் பதிவுகளில் அவர் எழுதிய சிறுகதையின் மூலம் அவருடைய இலக்கிய முகம் தெரிந்தது. அவரைப்போன்ற பல பெண்கள் போரில் தமது இலக்கிய– குறிப்பாக கவிதை முகத்தை தொலைத்திருந்தமையும் அறியக்கூடியது. எனினும் அவர்களின் கவிதைகள் போர்க்காலத்தில் பதிவான வெளிச்சம் போன்ற இதழ்கள் பரவலாக புகலிட நாடுகளில் கிடைக்கவில்லை. தமிழினியின் இலக்கிய முகத்தை அழுத்தமாக பதிவுசெய்துள்ள இந்த…
-
தமிழினியின் பன்முகம்.
நடேசன். ‘இயல்பான மென் உணர்வு கொண்ட மனிதர்கள் வாழ்வின் கடினமான தருணங்களை எப்படிக்கடந்து போகிறார்கள் என்பதை அருமையாக சித்தரிக்கும் இந்தக் கதையுடன் எனது கதையை ஒப்பீடு செய்தமை என்னை மிகவும் நெகிழச் செய்கிறது. புதிய படைப்பாளிகளை ஊக்குவிக்கும் உங்களது வழிகாட்டலுக்கு மிகவும் நன்றி.’ ‘Thamilini Jayakumaran தமிழினினி முகநூல் நண்பராகியது அவரது சிறுகதையை வாசித்துவிட்டு நான் படித்த ஆங்கிலக்கதைபோல் இருப்பதாக பாராட்டி எழுதியதற்கு உடனே நன்றி தெரிவித்து எழுதியிருந்தார். அந்தப் போர்க்காலக் கதையை நான் ஏன் இரசித்தேன்…