-
என் பர்மிய நாட்கள் 2
(நடேசன்) பர்மா பல இனங்கள், பல மொழிகள் மற்றும் ஆதிவாசிகள் என இந்தியாபோன்ற ஜனப்பரம்பலைக் கொண்ட நாடு. இதனால் பர்மாவில் வாழும் சிறுபான்மை சமூகத்தினர் அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதப்போரை பல வருடங்களாகச் செய்தனர். தற்பொழுது யுத்த நிறுத்தம் அமுலில் உள்ளது. எல்லா சிறுபான்மையினரும் ஒரே அமைப்பின் கீழ் இனிவரும் புதிய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கின்றனர். புதிய அரசாங்கம் எப்படி இதை கையாளும் என்பது காத்திருந்து பார்க்கவேண்டிய விடயம் இராணுவ ஆட்சியினர் பர்மாவின் சுதந்திரத்திற்கு முன்னோடியாகவும் திகழ்ந்து…
-
புலிப் பெண்கள்
சோமீதரன் விடுதலைப்புலிகளுடைய அரசியல்துறையின் மகளிர் பொறுப்பாளராக இருந்த தமிழினி எழுதிய “ஒரு கூர்வாளின் நிழலில்” என்ற தன்வாழ்க்கைக் குறிப்பு புத்தகத்தை முன்வைத்து, சில நினைவுகளையும் கருத்துகளையும் பகிர்ந்துகொள்கிறார் சோமீதரன் 2003 மற்றும் 2004ல் கிளிநொச்சியில் நடைபெற்ற மகளிர் தினங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஒரு ஊடகக்காரனாக எனக்கு அப்போது வாய்த்திருந்தது. ஊர்வலம், பொதுக்கூட்டம், கலைத்துவ வெளிப்பாடுகள் என போராளிப் பெண்களும், பொதுப் பெண்களும் கூடி எழுந்துநிற்கும் நிகழ்வு. இதுபோன்ற மற்றுமொரு எழுச்சி நிகழ்வு, மாலதி படையணி கிளிநொச்சி மைதானத்தில்…
-
தமிழினியின்; சுயசரிதை. “ ஒரு கூர்வாளின் நிழலில்“
நடேசன் இளம் வயதில் வெதரிங் ஹைட் ஒரே நாவலை தந்துவிட்டு இறந்த எமிலி புரண்டே ஆங்கில இலக்கியத்தில் முக்கியமான இடம் வகிக்கிறார் (Wuthering Heights – Emily Brontë’) அதுபோல் தமிழினியின் சுயசரிதையும் ஈழத் தமிழர்களால் பலகாலம் பேசப்படும். அரசியல் போராட்டத்தை இப்படி எடுத்துக் கொண்டு போகக்கூடாது என்பதோடு நமக்கு தவறுகளைப் புரிந்து கொள்ளும் பாலபாடமாக இருக்கவேண்டும் என விரும்புகிறேன் அரசியல் முப்பது வருடகால தமிழ் விடுதலைப் போராட்டத்தை மகோன்னத போராட்டமாகவும் அதன் தலைவரை கடவுளுக்கு நிகராகவும்…
-
அகில உலக பெண்கள் தினவிழா
மெல்பனில் பெண்ணிய கருத்துக்கள் சங்கமித்த அகில உலக பெண்கள் தினவிழா அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் அகில உலகப்பெண்கள் தினவிழா கடந்த 6 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மெல்பனில் பிரஸ்டன் நகர மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் ஆ.சி. கந்தராஜாவின் தலைமையில் நடந்தது. சங்கத்தின் துணைச்செயலளார் திருமதி சாந்தினி புவனேந்திரராஜா ஒருங்கிணைத்த நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. திரு. கணநாதன், திருமதி சகுந்தலா கணநாதன் தம்பதியினர் மங்கல விளக்கேற்றி நிகழ்ச்சிகளை தொடக்கிவைத்தனர். திரு. நாகராஜாவின் வாழ்த்துப்பாடலும் கலைஞர் சந்திரசேகரத்தின் நடனமும்…
-
நல்லதைக் கூறும் குத்துப்பாடல்
லண்டனில் வாழும் எனது நண்பன் டாக்டர் சாம் ஜெபகுமார் (ரஞ்ஜித்சிங்) உருவாக்கப்பட்ட குத்துப்பாடல் இதை கேட்பதுடன் மறறவர்களுடன் பகிரவும்.
-
அசோகனின் வைத்தியசாலை
Ponniah Karunaharamoorthy உலகின் முதலாவது விலங்கு வைத்தியசாலையை அசோகச்சக்கரவர்த்திதான் போரில் காயமடைந்த விலங்குகளைக் குணப்படுத்துவதற்காக அமைத்தாரென்பது சரித்திரத்திலிருந்து கிடைக்கும் ஒரு தகவல். அவுஸ்ரேலியாவில் கருணையுள்ளமும், செல்வச்சம்பத்தும் வாய்த்த ஒரு பெண்மணி மெல்பனின் ஒரு பகுதியில் ஸ்தாபித்த இவ்வைத்தியசாலைதான் நாவலின் பிரதான களமாகத் திகழ்கிறது. இலங்கையிலிருந்து செல்லும் ஒரு தமிழ் மிருகவைத்தியர் தான் பணிபுரியும், அம்மிருகவைத்தியசாலைச்சூழல், அங்குள்ள விலங்குகளின் நோய்கள், பிரச்சனைகள், வைத்தியமுறைகள்; அவற்றின் பழக்கவழக்கங்கள், அவற்றுக்கும் அவற்றின் எஜமானர்களுக்குமான உறவுகள், ஊடாட்டங்கள், பற்றிய விவரணங்களை ஆசிரியர் புதினம்…
-
ஸ்ரில் அலிஸ்.(Still Alice)
அவுஸ்திரேலியாவிற்கு வந்தபோது 50 டாலர் ஒற்றை நோட்டுடன் வந்தேன். மனத்தில் இருந்த நினைவுகளாக கல்வியை பயன்படுத்தமுடியும் என நம்பிக்கையிருந்தது. அவை எனக்கு மொழியால் அறிந்த விடயங்கள். ஆங்கிலம் அல்லது தமிழாக இருக்கலாம். இங்கு வந்த சிறிது காலத்தில் எனது மூளை தொழிலைச் செயற்படும் ஆற்றலை மறந்திருந்தால் எப்படி இருக்கும் ? யாராவது அப்படி நினைத்துப் பார்கிறோமா? பணம், உறவுகள் எனபனவற்றிலும் பார்க்க எனது நினைவுகளே முக்கியம் என நினைத்துப் பார்க்க வைத்த ஒரு படம் ஸ்ரில் அலிஸ்.…
-
என் பர்மிய நாட்கள்-1.
நடேசன் இலங்கைக்கு மிக அருகில் இருக்கும் தேசம் மட்டுல்ல கலாச்சாரம், மதம் என்பவற்றால் மிகவும் நெருங்கிய தேசம் (மியான்மார்) எனப்படும் பர்மா. பர்மாவை நினைத்தவுடன் இராணுவ அரசுக்கு எதிராக போராடி வருடக்கணக்கில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த பெண்மணி அங் சான் சூ கி யும் நினைவுக்கு வருவார். தற்போது ராக்கின் மாநிலத்தில் இருந்து அகதிகளாக வந்து வங்காளக்கடலிலும், தாய்லாந்திலும் துன்பப்படும் ரொகிங்கா முஸ்லீம் மக்களை நினைக்கத் தோன்றும். இதற்கும் அப்பால் பர்மாவில் இருந்து வெளியேறிய தமிழர்களால் சென்னையில் உருவாகிய…
-
மெல்பனில் தென்னாசிய கவிஞர்களின் சங்கமம்
கண்காட்சியும் கவிதா நிகழ்வும் இலங்கை – இந்தியா – பாக்கிஸ்தான் – பங்களாதேஷ் – நேபாளம் – பூட்டான் – மாலைதீவு – ஆப்கானிஸ்தான் முதலான எட்டு நாடுகளின் பிரதிநிதிகள் அங்கம் வகிக்கும் SAPAC (South Asian Public Affairs) என்னும் தென்னாசிய விவகாரங்களுக்hகன அமைப்பு கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மெல்பனில் தொடங்கியது. பல்லின கலாசார நாடாக விளங்கும் அவுஸ்திரேலியாவில் இதுபோன்ற பல தேசிய அமைப்புகள் இயங்குகின்றன. பொருளாதாரம் – விளையாட்டு –…
-
அவுஸ்திரேலியத்தமிழ் இலக்கிய கலைச்சங்கம்
அகில உலக மகளிர்தினத்தை முன்னிட்டு எமது அவுஸ்திரேலியத்தமிழ் இலக்கிய கலைச்சங்கம், எதிர்வரும் மார்ச் மாதம் 06 ஆம் திகதி ( 06-03-2015) ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிமுதல் மெல்பனில் பிரஸ்டன் நகர மண்டபத்தில் கருத்தரங்கு – கவியரங்கு – விவாத அரங்கு – நினைவரங்கு முதலான அமர்வுகளில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிரும்பும் எழுத்தாளர்கள் – கலைஞர்கள் – பெண்ணியச்சிந்தனையாளர்கள் மற்றும் அன்பர்களின் வரவை பெரிதும் எதிர்பார்க்கின்றோம். அண்மையில் மறைந்த பெண்ணிய ஆளுமைகளான படைப்பாளிகள் அருண்…