பகுப்பு: Uncategorized
-
கலாநிதி கார்த்திகா கணேசர்.
பவளவிழாக்காணும் நாட்டிய நர்த்தகி கலாநிதி கார்த்திகா கணேசர் ஆய்வாளராகவும் அயராது இயங்கும் கலைஞர் ! முருகபூபதி இலங்கையின் மூத்த பரத நாட்டிய நர்த்தகியும், தமிழ்க்கலை உலகப்புகழ்பெற்ற நடனக்கலைஞர் ( அமரர் ) பத்மபூஷன் வழுவூர் இராமையா பிள்ளை அவர்களின் சிரேஷ்ட மாணவியுமான கலாநிதி கார்த்திகா கணேசர் அவர்கள் இந்த ஆண்டு பவளவிழாக் காணுகிறார். அவுஸ்திரேலியா சிட்னியில் வதியும் இவர், இங்கும் தனது ஆற்றல்களை அடுத்த தலைமுறையினரிடம் கடத்தியவாறு நடனம் தொடர்பான ஆய்வுக்கட்டுரைகளையும் நூல்களையும்…
-
ராஜேஸ் பாலாவின சிறுகதைகளில் பெண்ணிய வெளிப்பாடு
நவஜோதி ஜோகரட்னம் லண்டன் கிழக்கிலங்கை கோளாவில் கிரமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி பாலசுப்ரமணியத்தை என் தந்தை அகஸ்தியரின் மூலமாகவே அறிய வந்தேன். பாரிசில், எங்கள் வீட்டில் தங்கியிருந்து முற்போக்கு இலக்கியம், அரசியல் விவகாரம் குறித்து நீண்ட நேரம் உரையாடி மகிழ்ந்திருக்கிறார்கள். ஜேர்மனியில் நடைபெற்ற இலக்கிய சந்திப்பின்போது அகஸ்தியருக்கு வழங்கப்பட்ட கௌரவ நிகழ்ச்சியில் ராஜேஸ் பாலாவும் கலந்து கொண்டு சிறப்பித்திருக்கிறார். அதே போன்று லண்டனில் அகஸ்தியர் நூல் வெளியீட்டின்போதும் ராஜேஸ் பாலா அந்த வெளியீட்டுக் கூட்டங்களை ஒழுங்குபடுத்துவதில் முன்னின்று…
-
துரோகி என்று என்னை வர்ணித்த ஈழமுரசு பத்திரிகை
22 கரையில் மோதும் நினைவலைகள். நடேசன் “ உங்கள் பத்திரிகைக்கு எதிராக ஏன் சட்ட நடவடிக்கை எடுக்கக்கூடாது..? “ இது நான் எனக்குத் தெரிந்த ஒரு சட்டத்தரணி ஊடாக மற்றும் ஒரு பத்திரிகையான ஈழமுரசுவுக்கு அனுப்பிய கடிதத்தின் சாராம்சம். அவுஸ்திரேலியாவில் நான் ஆரம்பித்து 12 வருடகாலம் நடத்திய உதயம் பத்திரிகை வெளிவந்த காலத்தில் நடந்த முக்கியமான நிகழ்வு அது. அதனையொட்டி நடந்த பல விடயங்கள் தொடர்ந்தும் நிழலாடுகின்றது . அந்தக்கடிதத்தை அந்த ஈழமுரசுவுக்கு அனுப்புவதா வேண்டாமா…
-
சுனாமி– கானல்தேசம்
கார்த்திகா முல்லைத்தீவில் இருந்து இரண்டு நாட்களுக்கு முன்பாக கிளிநொச்சி முகாமுக்கு வந்திருந்தாள். அங்கு அவள் கண்ட காட்சிகள், பிணங்களில் இருந்து வந்த துர்நாற்றம், பாதிக்கப்பட்டவர்களின் அழுகுரல்கள் என்பன அவள் மனதில் ஆழமாக பதிந்து கனவிலும், நினைவிலும் கரப்பான் பூச்சிகளாக தொடர்ந்தன. விலகிச் செல்ல முடியவில்லை. சதாமுகத்தை மொய்த்தன. இரண்டு நாட்கள் மட்டுமல்ல எத்தனை வருடங்கள் கடந்தாலும் அவை அவளை விட்டு தொலையாது என்ற உணர்வைக் கொடுத்தன. இது போன்ற அனுபவம் அவள் வாழ்க்கையை எதிர்கொள்ளவரும் என அவள்…
-
இராஜெஸ்வரி பாலசுப்ரமனியனின் கதைகளில் இருக்கும் பெண்ணியப் பார்வை.
ராஜேஸ் என்று நான் நேசத்துடன் அழைக்கும் ராஜேஸ்வரியின் எழுத்து ஒரு அலாதியான எழுத்து . புலம்பெயர்ந்து மேற்கு நாடுகளில் வசிக்கும் இலங்கை தமிழ் எழுத்தாளர்களில் விஷேசமான பெண்ணியப்பார்வை கொண்டவர். இந்திய தமிழ் நாட்டுப்பெண் எழுத்தாளர்களின் எழுத்துக்களிலிருந்து இலங்கை பெண் எழுத்தாளர்கள் வேறுபட காரணங்கள் உண்டு. அவர்களின் பிரச்சினைகள் உள ரீதியாக மன ரீதியாக மாறுபட்டவை. இந்திய தமிழ் பெண்கள் உணராத பாதிப்புகளையும் , ஆறாத வடுக்களையும் சுமப்பவர்கள்: இனக்கலவரத்தையும், பயங்கரவாத அத்துமீறல்களையும், போர்காலத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை…
-
“ஏன் ஒரு இலக்கியவாதியை நாம் கொண்டாடவேண்டும் ? “
மெல்பனில் மல்லிகை ஜீவா நினைவுரை. நடேசன் ( ஆஸ்திரேலியா மெல்பனில் கடந்த 19 ஆம் திகதி ஞாயிறன்று நடைபெற்ற மல்லிகை ஜீவா நினைவரங்கில் நிகழ்த்தப்பட்ட உரை ) காட்டில் வசிக்கும் யானை தாகம் தணிக்க நீர் நிலைகளையும் , தனக்குத் தேவையான உணவையும் தேடி நடந்த பாதையிலேயே ஏனைய மிருகங்களும் நடக்கும் என்பதால் யானைகளே உலகில் முதல் பாதை அமைத்த சிவில் எஞ்ஜினியர்கள். அதேபோன்று நமது வாழ்வு இலக்கியங்களின் வழியே நடக்கிறது. ஒரு இலக்கிய புத்தகத்தை…
-
ஹாங்கிங் ரொக். விக்டோரியா
நடேசன் – நடேசன் ஒரு சமூகத்தின் வணக்கத்தலமொன்றை உல்லாசப்பயண சுற்றுலா இடமாக மாற்றுவது இக்காலத்தில் அரிது. நடந்தால் உலகம் முழுவதும் கண்டிக்கும். மனித உரிமைக்கு எதிரான விடயமென ஜெனிவாவில் தீர்மானம் போடுவார்கள். 19 ஆம் நூற்றாண்டில் அவுஸ்திரேலிய காலனி ஆட்சியாளர்களுக்கு அந்தப் பிரச்சினையில்லை. இலகுவாகச் செய்ய முடிந்தது. மெல்பனில் இருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் ஹாங்கிங் ரொக்ஸ் ( Hanging Rocks) எனப்படும் இடம், 26000 வருடகாலமாக அவுஸ்திரேலிய ஆதிவாசிகளால் வணக்கத்துக்குரிய இடமாக இருந்தது. அவர்களது…
-
சத்தியம் மீறியபோது – சிறுகதை- திறனாய்வு
சத்தியம் மீறியபோது என்ற V S கணநாதனது சிறுகதை, தொகுப்பில் உள்ள பிரதான கதை மட்டுமல்ல. அது அது ஒரு நெடுங்கதை என்பதுடன் அதுவே கதைத்தொகுப்பின் பிரதான கதையாக உள்ளது . இந்தக்கதை உண்மைச் சம்பவத்தைத் தழுவி எழுதப்பட்ட கதையாக இருந்தாலும் அந்தக்கதை எழுதப்பட்ட விதத்தில் நான் கவரப்பட்டேன். முக்கியமாகக் கதைசொல்லியான பாட்டியின் பாத்திரம் முழுமையானதாக அமைந்திருக்கிறது. சிறுகதை மட்டுமல்ல, நாவல் எழுதுவதற்குமே மொழி அதிக அளவு தேவையில்லை . ஜப்பானிய மொழியில் பல சித்திர நாவல்கள்…
-
எழுத்தாளர் இராஜேஸ்வரி சிறுகதைகளுடாக பெண்ணிய வெளிப்பாடு
நம்மவர் நிகழ்வு எழுத்தாளர் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் சிறுகதைகளுடாக பெண்ணிய வெளிப்பாட்டை எடுத்துப் பேசுவதே நமது நிகழ்வின் நோக்கம். பல நாடுகளில் பெண்ணியம் என்பது கல்வித்துறை மற்றும் சமூக வரலாற்றின் ஒரு பகுதியாகி விட்டது. அதன் விளைவை நமது சகோதரிகள், பெண் குழந்தைகள் அனுபவிக்கிறார்கள். பல நாடுகளில் அரசியல் கட்சிகள், பெரிய நிறுவனங்கள் பெண்களுக்காக முக்கிய இடங்களை ஒதுக்கியுள்ளார்கள். இவை மரத்தில் தானாக இருந்து உதிரும் கனிகளாக விழவில்லை. பலர் உயிர், மற்றும் உழைப்பைக் கொடுத்தபின் விளைந்த அறுவடையைத்தான்…
-
புதுவையின் ரத்த புஷ்பங்கள்
ரத்த புஷ்பங்கள்-ஒரு விமர்சனம் புதுவை இரத்தினதுரையின் மூன்றாவது கவிதை நூலாக ‘இரத்த புஷ்பங்கள்’ வெளிவந்துள்ளது. ஒரு தோழனின் காதல் கடிதம், வானம் சிவக்கிறது ஆகியவை முன்னர் வெளிவந்த அவரது கவிதை நூல்கள். விருப்பான சொற்களில் கோஷம் எழுப்புவதே இவரது கவித்துவப் பாணி. இத்தகைய’கோஷ நடையை’ ஒட்டிய கவிதைகளே இரத்த புஷ்பங்களிலும் காணப்படுகின்றன. இவற்றுட் பல இடதுசாரி அரசியல் சார்பான கோஷங்களாகும். இவரது அதி தீவிர இடதுசாரிக் கோஷங்கள், இவருக்கு முற்போக்கு கவிஞர் என்ற புகழைப் பெற்றுக் கொடுத்தன.…