பகுப்பு: Uncategorized
-
முதுமையின் எல்லை
நடேசன் ‘அம்மாவுக்கு அல்சைம்மேர் வியாதி வந்து விட்டது. நானும் எனது சகோதரியும் மாறி மாறி இரவில் அவரது வீட்டில் தங்கி இருக்கிறோம்.’‘நான் இரண்டு கிழமைக்கு முன்பாகத்தானே ‘ஒலி’யை பார்க்க வீட்டுக்கு சென்றேன். என்னால் எதையும் கண்டு கொள்ள முடியவில்லை. அம்மாவை எனக்கு எட்டு வருடங்களாக தெரியும் ‘அம்மா தன்னை வயோதிபர் இல்லத்துக்கு அனுப்பிவிடுவோம் என்ற பயத்தில் நோயை மறைப்பதில் கெட்டிக்காரி.’எண்பது வயதான போலின் சான்லியின் இரண்டாவது மகள் லீசா. தாயின் நாயான ஒலியை என்னிடம் கொண்டுவந்தபோது எங்களுக்கு…
-
கருணையால் மட்டும் அல்ல.
நடேசன் இலங்கை அரசியல்வாதிகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக இருந்த புலம் பெயர்ந்த தமிழர்களும் விடுதலைப்புலிகளுக்கு எதிரான ஆனந்தசங்கரி மற்றும் புளட் அமைப்பினர் கூட கே. பத்மநாதனை எதிர்ப்பதில் தீவிரம் காட்டுகிறார்கள். இது ஏன் என்பது புரியவில்லை.. விடுதலைப்பலிகளையும் தனி ஈழக்கோட்பாட்டையும் கருத்தியல் ரீதியாக எதிர்த்த எனக்கு, வெறுப்புக்கலந்த பார்வையுடன் கே. பி. யை எதிர்ப்பதன் காரணம் புரியவில்லை. இந்த எதிர்பாளர்கள் எல்லோரும் வேறு காலத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனையும் அவரது கோட்பாட்டையும்…
-
உறவுகள் பலவிதம்.
-அனுபவ பகிர்வு —நடேசன் மெல்பனில் புறநகரான டண்டினொங்கில் இருந்து எனது மிருக வைத்திய நிலயத்திற்கு வந்த இந்திய இளைஞனுக்கு இருபத்தைந்து வயது இருக்கும். ஆறு அடி உயரமான அவனுக்கு முகத்தில் சிறிய தாடி. பெயரைக் கேட்ட போது பஞ்சாபி இனத்தவன் போல் இருந்தது. அவன் இந்து பஞ்சாபியாக இருக்கலாம் அல்லது தலைப்பா கட்டாத சீக்கியனாக இருக்கலாம். அதைப் பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால் அவன் ஜக் ரஸ்ஸல் இனத்தைச் சேர்ந்த அந்த சிறிய நாயை தூக்கிக் கொண்டு…
-
உன்னையே மயல் கொண்டு இரண்டாவது பகுதி
சிட்னியின் மேற்குப்பகுதியில் இருக்கும் அந்த பல்கலைக்கழகம் ஆரம்பத்தில் உயர் கல்விக்கூடமாக இருந்தது. இங்கு விவசாயிகளுக்கு செய்முறை பயிற்சி கிடைக்கும். அந்த இடத்தில் ஆறு ஓடுவதால் பல கால்நடைப் பண்ணைகள் இருந்தன. சிட்னியின் சனத்தொகை பெருகி மேற்குப்புறமாக வீடுகள் கட்டப்பட்டதால் விவசாய பண்ணை நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டது. ஜனத்தொகை வளர்ச்சியுடன் இந்த கல்வி நிலையம் பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டது. மற்றைய பல்கலைக் கழகங்களைப் போல் கொங்கிறீட் மாடிக்கட்டடங்கள் கட்டப்படவில்லை. மரங்களுக்கு இடையில் தனிகட்டடங்கள் இயற்கைசூழலின் தன்மையை இழக்காமல் அமைந்தன. நுழைவாசலின் வலப்…
-
உன்னையே மயல் கொண்டு –நாவல்.
நடேசனின் நாவல் பாலின்பத்தின் அகச்சிக்கல்களையே பேசுகின்றது. இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து ஆஸ்திரேலியாவிற்கு புகலிடம் தேடி சென்ற ஒரு ஆணின் பார்வையில் அவனது உடலின்பம் குறித்த சிக்கல்களும் அதன் விளைவுகளும் விவரிக்கபடுகின்றன. -எஸ் .ராமகிருஸ்ணன் எல்லோருக்கும் தெரியவேண்டிய ஒரு முக்கிய விடயத்தைச்சொல்லும் நாவல். இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் உனையே மயல் கொண்டு என்ற நாவல் குடும்பம் என்ற அமைப்புக்கூடாக புலம்பெயர்ந்தவர்களின் உளவியல் பிரச்சினைகளை ஒரளவு அக்கறையோடு அணுகுகின்றது. – தமிழன் —————————- சந்திரன் படுக்கையை விட்டு எழுந்து, திறந்திருந்த யன்னலை நோக்கிச்…
-
சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு 2011
– நடேசன் “நாளைக்கு நான் செத்தாலும் சந்தோசமாக சாவேன். இதுபோன்ற நிகழ்ச்சிகளை வழக்கமாக யாழப்பாணத்தவர்தான் நடத்தி முடிப்பது வழக்கம். ஆனால் இந்த முறை ஒரு நீரகொழும்பான் (லெ. முருகபூபதி) நடத்திவிட்டது எனக்கு மனச்சந்தோசமாக இருக்கு” என்று கண்களில் கண்ணீpர் திரையிட மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா என்னிடம் கூறினார். சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் இறுதிநாள் மாலை கலை நிகழ்ச்;சி வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடந்தபோது, மண்டபத்திற்கு வெளியில் நான் நண்பர்களுடன் உரையாடிக்கொண்டு நின்ற போதுதான்…
-
விலங்குப்பண்ணை’ வெளியீடும், பதிப்பக முயற்சிகள் பற்றிய கலந்துரையாடலும்.
விலங்குப்பண்ணை’ வெளியீடும், பதிப்பக முயற்சிகள் பற்றிய கலந்துரையாடலும்! “விலங்குப் பண்ணை” மொழிபெயர்ப்பு நாவல் வெளியீடும், தமிழில் புதிய பதிப்பக முயற்சிகளை ஊக்குவிப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்றும் சிகரம் ஊடக இல்லத்தில் 16/12/2011 ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெற்றது. சிகரம் ஊடக இல்லத்தின் விரிவுரை மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த எழுத்தாளர்களான வைத்திய கலாநிதி நோயேல் நடேசன், லெ.முருகபூபதி, பிரித்தானியாவைச் சேர்ந்த எழுத்தாளர் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், யாழ் பல்கலைக்கழக பொறியியல் பீட இணைப்பாளர் பேராசிரியர்…
-
எமக்கான தனித்துவம் தேடும் காலம் உருவாகவேண்டும்
– நடேசன் . எம்மிலும் பார்க்க பலசாலியால் நாம் பாதிக்கப்பட்டாலோ அல்லது, அடிவாங்கினாலோ எமது கோபத்தை அருகில் உள்ளவர்கள் மீது காட்டுவது பாமரத்தனமானது. இதனை ஆங்கிலத்தில் misdirected anger என்பார்கள். இப்படியான பாமரத்தன்மை சமூகமட்டத்தில் பரவிவிடுகிறபோது அந்தத் தன்மைக்கு எதிராக அறிவாளிகள் போரிடவேண்டும். அந்தப்போராட்டம் ஊடகங்களால் சமூகத்தின் மூலை முடுக்கெங்கும் எடுத்துச் செல்லப்படவேண்டும். இப்படி இல்லாத பட்சத்தில் மட்டரகமான அரசியல்வாதிகள் இந்த பாமரத்தன்மையை பயன்படுத்துவார்கள். இது சமூகத்திற்கு பாரிய அழிவை ஏற்படுத்தும். ஆங்கிலேயரின் காலனி ஆதிக்கத்தின் விளைவாக…
-
Possums.

Nadesan The newly varnished wooden steps of the staircase reflected my face. I was pleased that Niyaasi, a Turkish painter, had done a good job in painting the house.I hired him to repaint again after not being satisfied with the builders work As I was climbing-up the steps I was taken aback. I stopped. There…
-
பறவைகள் பலவிதம்
நடேசன் அவுஸ்திரேலியாவிற்கு வந்த பின்னர் பறவைகளுக்கு வைத்தியம் செய்வதற்கு தயங்கியதற்கு பல காரணங்கள் இருந்தன. இலங்கையில் கோழிப்பண்ணையில் நோய் வந்தால் நோயுற்ற கோழியை கருணைக்கொலை செய்து அதனை போஸ்மோட்டம் பண்ணியதும் நோயை புரிந்து கொள்வதால் மற்றைய கோழிகளுக்கு வைத்தியம் பண்ண முடியும். தடைமருந்து ஏற்றிவிடலாம். போஸ்மோட்டத்தில் நோய் தெரிந்து கொள்ளப்படாத போது பரிசோதிப்பதற்கு லாபோரட்டரிக்கு அனுப்பிட்டால் நோயைத் தெரிந்துகொள்ளமுடியும். இங்கு செல்லமாக பறவை வளர்ப்பவர்களின் பறவைககளுக்கு நோய் பீடித்து என்னிடம் கொண்டு வருபவர்களிடம் பறவை வைத்தியம்…