பகுப்பு: Uncategorized
-
ராமசாமி கோனாரின் கவலைக்கு மருந்து
– நடேசன் தமிழ் நாட்டில் -மகாபலிபுரத்திற்கும் தாம்பரத்திற்கும் இடையே பசுமை கொழிக்கும் அயனாவரம் என்ற சிற்றூர். ஒரு பக்கத்தில் சிறிய மலைத்தொடர். மறுபக்கத்தில் நீர் நிரம்பிய ஏரி. இச்சிற்றூரில் சுமார் 150ஏக்கரில் மாடுகள் ஆடுகள் – கோழிகள் பராமரிக்கப்படும் பெரிய பண்ணை. மாரிகாலத்தில் ஏரியில் நீர் நிரம்பினால் பண்ணை வீ;ட்டு வாயிலை ஏரி மீன்கள் வந்து கவ்வும். இயற்கை அழகு செழித்த அந்த ஊரில் 86ஆம் ஆண்டளவில் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்தப் பண்ணையின் சொந்தக்காரர்…
-
ஹோமோசெக்சுவாலிற்றி
ஒரு பால் உறவுகள் ( பல காலத்தின் முன்பு எழுதியது) நடேசன் உடல்நலக் குறைவான பூனையொன்றை கொண்டு இரு இளைஞர்கள் வந்தார்கள். பூனையை பரிசோதித்து நோய்கான மருந்துகளை கொடுப்பதற்கு எனது நர்சான ஜேன் உதவினாள். எனது அறையை விட்டு இரு இளைஞர்கள் போனபின்பு ஜேன் என்னிடம் ”what a waste ?” என கூறினாள். அழகான இளைஞர்கள் இருவரும் Gays என புரிந்ததால் நான் பதில் கூற முன்பு எனது பின்னாலே இருந்து ஒரு குரல் கேட்டது.…
-
முன்பட்டமும் பின்பட்டமும் -நடேசன்
இதுவரையில் ஓர் பட்டமும் பொன்னாடையும் கிடைக்காத கவலையில் பல வருடங்களுக்கு முன்னால் எழுதியது. எனது எழுத்தாள நண்பர் ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்தார். எழுத்தாளர் ஜெயகாந்தனுக்குத் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கருணாநிதி தொலைபேசியில் ”கலைஞர் பேசுகிறேன்” என்றபோது ஜெயகாந்தன் ”கருணாநிதி பேசுகிறேன்” என்று கூறுங்கள் என்றாராம். இப் பட்டங்களின் மேல் உள்ள வெறுப்பை ஜெயகாந்தன் தெரிவித்திருக்கிறார் என நான் நினைத்தேன். இந்தியாவில் முக்கியமாகத் தமிழ்நாட்டில் இப்படியான பட்டங்கள் கொடுப்பதையும் வாங்குவதையும் ஒரு கலையாகவே செய்கிறார்கள். ”கவியரசர்”…
-
உரத்துப் பேச…ஆழியாளின் கவிதைக் குறிப்பு.
பலகாலத்திற்கு முன்பு எழுதியது – Noel Nadesan . தமிழர்கள் வாழ்க்கையில் இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக கவிதை வடிவங்கள் ஒட்டி உறவாடின. சராசரியான தமிழ் அறிவு கொண்ட என்போன்றவர்களுக்கு கவிதைகளைப் படிக்கப் பொறுமை இல்லை. மேலெழுந்தவாரியாக பார்க்கும் போது சில கவிதைகளின் வரிகள் மனத்தில் நெருடும். சில வரிகள் குற்றவுணர்ச்சியை தூண்டும். பல மீண்டும் மீண்டும் வாசிக்க வைத்தன. இப்படிப்பட்ட ஒரு கவிதைத் தொகுப்பு ஆழியான எழுதிய உரத்துப் பேச… இந்த கவிதைத் தொகுப்பில் இருந்த கவிதைகள்…
-
யானைகள் தேடும் சவக்காலை
நடேசன். காட்டில் வாழும் மற்றைய மிருகங்களிலும் பார்க்க யானைகள் பற்றிய விடயங்கள் எனக்கு ஆவலானவை. அதற்குக் காரணம் அவற்றைப்பற்றி அரைகுறையாக தெரிந்ததால்தான் என நினைக்கிறேன். மிருக வைத்தியராக இலங்கையில் யானைகளை பற்றி படித்திருப்பதுடன், அவற்றிற்கு வைத்தியம் பார்க்கும் வேலைகளையும் ஓரளவு செய்திருக்கிறேன். தந்தத்திற்காக கொலை செய்த யானைகளை பிரேத பரிசோதனை செய்திருக்கிறேன். குட்டிகளை பிடிப்பதற்காக, வெட்டிய குழிகளில் விழுந்த ஓரிரு மாதங்களேயான, யானைக் குட்டிகளை இலங்கையில் பொலிஸ் பாதுகாப்பில் எடுத்தால், அவற்றை வளர்ப்பதற்கு உதவுவது மிருகவைத்தியர்களான எங்கள்…
-
மூத்த படைப்பாளி அன்புமணி
திரும்பிப்பார்க்கின்றேன். பல்துறை ஆற்றலுடன் பதிப்பாளராகவும் விளங்கிய மூத்த படைப்பாளி அன்புமணி சமூகநலன் சார்ந்த பணிகளிலேயே தனது வாழ்நாளை செலவிட்டு விடைபெற்ற கர்மயோகி முருகபூபதி “ஒருவன் என்னவாக இருக்க வேண்டும் என்பதை அவன் மனமோ அல்லது அவனின் அறிவோ தீர்மானிப்பதில்லை, அவனின் ஆன்மாதான் தீர்மானிக்கிறது” என்ற மகாபாரத தத்துவத்தை சமீபத்தில் படித்தேன். இந்தத்தத்துவத்தை நெஞ்சத்துக்கு நெருக்கமானவர்களுடன் ஒப்பிட்டுப்பார்க்கையில் அதிலிருக்கும் உண்மை புலப்படுகிறது. வயது செல்லச்செல்ல நெஞ்சத்துக்கு நெருக்கமானவர்கள் யார்…? என்ற தெரிவு எம்மையறியாமலேயே மனதிற்குள் உருவாகிவிடுகிறது. அவர்களில் பலருடைய…
-
உயிரையும் காதலையும் காப்பாற்றிய டொக்டர் கெங்காதரன்
நடேசன் டாக்டர் கெங்காதரன் மரணமடைந்துவிட்டார் என்றதும், அவரை பற்றி பலவிதமான எண்ணங்கள் மனதில் தோன்றியது. அவர் ஒரு புல்லங்குழல் வித்துவான். பலதடவை எனது சிறுவயதிலும் பின்னர் எனது ரீன் ஏஜ் பருவத்திலும் எனக்கு வைத்தியராக சிகிச்சையளித்தவர். அவரது மகளை பல்கலைக்கழகத்தில் நன்கு பரிச்சயமான எனது நண்பர் குமரன் தங்கராஜா மணம்முடித்து மெல்பனில் வாழ்கிறார். டொக்டர் கெங்காதரன் 95 இடப் பெயர்வில் இருந்து இறுதியுத்தம் முடிவுற்றவரையில் வன்னிமக்களிடையே தனது மருத்துவசேவையை மேற்கொண்டவர். தனது வாழ்க்கையில் பெரும்பகுதியை மற்றவர்களுக்காக செலவிட்டும்…
-
இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் பட்டதாரி மாணவர்கள்
அவுஸ்திரேலியாவில் இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவி பெற்ற கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் பட்டதாரியாகினர். விரைவில் பட்டமளிப்பு விழா. சிலர் தொழில் வாய்ப்பு பெற்றனர், சிலர் மேற்கல்வி தொடருகின்றனர். பயனடைந்த மாணவர்கள் கல்வி நிதியத்திற்கு பாராட்டு இலங்கையில் நீடித்த முப்பது ஆண்டுகால போரினாலும் 2004 ஆம் ஆண்டு இறுதியில் கிழக்கிலங்கையில் நிகழ்ந்த சுனாமி கடற்கோள் அநர்த்தத்தினாலும் பெரிதும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பலர் கிழக்கிலங்கை பல்கலைக்கழகத்தில் பயின்றவாறு அவுஸ்திரேலியாவில் இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின்…
-
நற்செய்தி
அவுஸ்திரேலியாவில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக இயங்கிய இலங்கையில் நீடித்த போரில் பாதிக்கப்பட்ட ஏழைத்தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவி வரும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவி பெற்ற மாணவி செல்வி பாமினி செல்லத்துரை தமது பட்டப்படிப்பை நிறைவு செய்துகொண்டு கொழும்பில் கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தில் பணியாற்றினார். தொடர்ந்தும் மேற் கல்வி கற்று தற்பொழுது பிரதி கல்விப்பணிப்பாளராக நுவரேலியா பிராந்தியத்திற்கு தெரிவாகியுள்ளார். தாம் மேலும் முதுகலை (M . A) பட்டப்படிப்பினை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த நற்செய்தியை…
-
வரிக்குதிரை வதக்கல் வேண்டுமா…?
நடேசன் 2005 இல் தென்னாபிரிக்காவில் எடுக்கப்பட்ட ஒரு ஹொலிவூட் படம் ரேசிங் வித் ஸ்ரைப்பிஸ் (Racing with stripes). மிருகங்களைப் பேசவைத்து குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் குதிரைகள், சேவல்கள் ,ஆடுகள் முதலானவை தோன்றின. இத்திரைப்படம் ஒரு இளம் வரிக்குதிரையையும் அதன் மீது பாசம் கொண்ட தாயற்ற இளம் பெண்ணையும் முக்கிய பாத்திரங்களாகக் கொண்டது. சூறாவளி திடீரென்று மையம் கொண்டதால் அவசரம் அவசரமாக தாங்கள் தங்கிய இடத்தில் இருந்து மூட்டை முடிச்சுகளுடன் புறப்பட்டுச் செல்கிறது ஒரு சர்க்கஸ் குழு.…