ஆசிரியர்: noelnadesan
-
ஜல்லிக்கட்டும் அதன் பின்னணியும்
நடேசன் மிருகவைத்தியர் அவுஸ்திரேலியா தாய்லாந்து போனபோது என்னுடன் வந்தவர்கள் யானையில் ஏறி சவாரி செய்தார்கள். நான் ஏறவில்லை. அதற்குக் காரணம் யானைகளை சவாரிக்குப் பழக்கும்போது அவற்றை அடிபணிய வைக்க துன்புறுத்துவார்கள். அதற்கான ஆதாரங்கள் யானைகளில் வெள்ளைத் தழுப்புகளாக அதன் உடலில் பல இடத்தில் இருக்கும். அதேவேளையில் ஆசிய நாடுகளில் யானைகள் பல்கிப் பெருகியுள்ளன. அதற்குக் காரணம் அவை மனிதர்களுக்கு வழிபாட்டிற்க்கும்; தொன்மக் கதையாடல்கள் அரசபடை மற்றும் கூலியற்ற வேலையாள் எனப் பல வகைகளில் பயன்படுகின்றன. ஆனால் ஆபிரிக்க…
-
அடிநிலைமக்களின் குரலாகத் தெணியான்
அடிநிலைமக்களின் குரலாக ஒலித்த தெணியான் இன்று அவருக்கு 75 வயது முருகபூபதி கந்தையா நடேசன் என்ற இயற்பெயர்கொண்டவரும், இலக்கிய ஊடகத்துறைகளில் தெணியான் என அழைக்கப்பட்டவருமான ஈழத்தின் மூத்த இலக்கிய ஆளுமையின் பிறந்த தினம் இன்றாகும். வடமராட்சியில் பொலிகண்டியில் கந்தையா – சின்னம்மா தம்பதியருக்கு 06-01-1942 இல் பிறந்த நடேசு, இலக்கிய உலகில் பிரவேசித்ததும் தெணியான் என்ற பெயரில் எழுதத்தொடங்கியவர். தான் கல்வி கற்ற கரவெட்டி தேவரையாளி இந்துக்கல்லூரியிலேயே நீண்டகாலம் ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள தெணியான் மற்றும் ஒரு…
-
The Multi Faceted Tamil Writer
Arjunan Puveendran Last (2015) year, the Australian Tamil community lost Arun Vijayarani, who was a well-regarded Tamil writer and community worker. As a humble woman, she preferred to remain out of the limelight. However, the celebration of her life since her passing has served as an ideal to many in the Tamil community of a…
-
தனித்துவம் மிக்க சோ
அரசியல் தலைவர்களினால் ஏற்கவும் இழக்கவும் முடியாத தனித்துவம் மிக்க துக்ளக் சோ நாடகத்தில் – திரைப்படத்தில் – இதழியலில் அங்கதச்சுவையை இயல்பாக இழையவிட்டவரின் சகாப்தம் நிறைவடைந்தது முருகபூபதி ” நான் ஒரு பத்திரிகை தொடங்கப்போகின்றேன். நீங்களும் ஆதரவு தரவேண்டும்.” என்று 35 வயதுள்ள அவர், நடிகர்திலகம் சிவாஜிகணேசனிடம் கேட்கிறார். நகைச்சுவை நாடகங்களிலும் சில திரைப்படங்களிலும் அறிமுகமாகியிருந்த அவர், சட்டமும் படித்திருந்தார். உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றினார். சில வர்த்தக நிறுவனங்களின் சட்ட ஆலோசகராகவும் விளங்கினார். எதனையும் தர்க்கரீதியில்…
-
சிறுகதை:வெம்பல்.
இருபத்தைந்து வருடங்களின் பின்பாக யாழ்ப்பாணம் செல்ல முடிந்ததற்கு ரோஜாவிற்குப் போர் முடிந்தது மட்டுமல்ல. பலகாரணங்கள். வேறு எவைகளாக இருக்கும்? காரணங்களை அவள் மனத்தில் உருவகித்துப் பார்த்தாள். சில வருடங்கள் முன்பாக கணவன் இறந்தது பெரிய வெற்றிடத்தை வாழ்வில் உருவாக்கியது. அது மட்டுமா? இவ்வளவு காலமும் மகனும் மகளும் குழந்தைகள் எனப் பொத்திப் பொத்தி பொக்கிசமாக வளர்த்தபின் பெரியவர்களாக கிழமைக்கும் மாதத்திற்கும் ஒரு தடவை வந்து அம்மாவைப் பார்க்கிறார்கள். அவர்களைப் பிழைசொல்லமுடியாது. இறகுகள் முளைத்த பின்பு புதிதான…
-
கதைகதையாம் காரணமாம்.சுட்டுச்சொற்களின் திசைவழிப்பாதை.
அ.ராமசாமி வாசிப்புக்கான பாதையைக் காட்டும் எழுத்தே கவனிக்கப்படுகிறது. கிராமங்களில் அந்த விளையாட்டை இப்போதும் விளையாடுகிறார்கள். நெட்டுவாக்கில் குவிக்கப்பட்ட மணலுக்குள் மறைத்து வைக்கப்படும் திரியைக் கண்டுபிடிக்கும் விளையாட்டு. ஒருவர் மறைத்துவைத்துவிட்டுக் கையால் மூடிக் கொள்வார். இன்னொருவர் அந்தத் திரியைக் கண்டுபிடிக்கவேண்டும். மறைத்துவைப்பவர் தனது கைக்குள்தான் வைக்கவேண்டும் என்பதில்லை. மணல் கவிப்பில் கூட எங்காவது வைக்கலாம். அதைச் சரியாக யூகித்து எடுத்துவிட்டால் வெற்றிதான். கைக்குள் இருப்பதாக நினைத்தால் மூன்று தடவை ஆள்காட்டிவிரலால் மணலைக்கோரி எடுக்கும்போது திரி வெளியே வந்துவிட்டாலும் வெற்றிதான்.…
-
தமிழ் மொழியில் எழுதப்பட்ட பன்னாட்டு சிறுகதைகள்
– இமையம். “வாழ்வின் துயரங்கள் வாழச் சொல்கின்றன” போர், அரசியல் காரணங்கள், கல்வி, வணிகம், வேலை, உயிர் பிழைக்க என்று பல்வேறு காரணங்களுக்காக, பல்வேறு காலங்களில் புலம்பெயர்தல் நடந்திருக்கிறது. இன்றும் உலகெங்கும் நடந்துகொண்டிருக்கிறது. இந்த கட்டுரை புலம்பெயர்தலுக்கான காரணங்களையோ, புலம்பெயர்ந்தவர்கள், புகலிடத்தில் சந்தித்த கொடூரங்களையோ ஆராயாது. புலம்பெயர்ந்தவர்கள் – புகலிடத்திலிருந்து எழுதிய சிறுகதைகளில் – பன்னாட்டு வாழ்வை, பண்பாட்டை, கலாச்சாரத்தை, அரசியலை, நிலவியலை எவ்வாறு எழுதியிருக்கிறார்கள் என்பதை மட்டுமே ஆராயும். தமிழ்நாட்டிலிருந்து, அமெரிக்கா, பிரான்ஸ், மலேசியா, சிங்கப்பூர்…
-
அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம்
அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் புதிய நிருவாகிகள் தெரிவு அவுஸ்திரேலியாவில் பலவருடங்களாக இயங்கிவரும் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஆண்டுப்பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் (26 ஆம் திகதி) சனிக்கிழமை மெல்பனில் மல்கிரேவ் Neighborhood House மண்டபத்தில் மாலை 4 மணிக்கு நடைபெற்றது. சங்கத்தின் துணைத்தலைவர் திரு. லெ.முருகபூபதியின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் , உலகெங்கும் போர் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களுக்காகவும் கடந்த ஆண்டு இறுதியில் மறைந்த முன்னாள் தலைவரும் எழுத்தாளருமான திருமதி அருண். விஜயராணியை நினைவுகூர்ந்தும் மெளன…
-
நாவல்: சல்மாவின் மனாமியங்கள்.
நடேசன்எஸ்கிலஸ்(Aeschylus)எழுதிய புராதன கிரேக்க நாடகத்தில் ஒரு காட்சி வரும். ரோய் (Troy)மேல் படை எடுத்து வென்ற அகமனான்(Agamemnon) என்ற கிரேக்கத்தளபதி திரும்பித் தனது மாளிகைக்கு வெற்றிவீரனாக வரும்போது அவரது மனைவி(Clytemnestra) கொலை செய்து விடுகிறாள். அதற்காக மகனாகிய ஒரீஸ்ரஸ்(Orestes) தாயை(Clytemnestra) கொலை செய்கிறன். இந்த வழக்கு ஏதன்ஸ் நீதிமன்றத்திற்கு செல்கிறது. ஒரேஸ்ரஸ் தனது தாயை கொலை செய்ததை ஒப்புக்கொள்கிறான். கிரேக்க கடவுளான அப்போலோ போரில் வென்ற தளபதியை கொலை செய்தது தாயான பெண்ணைக் கொன்றதிலும் பார்க்க பாரதூரமான…
-
திரு. லெ.முருகபூபதி – நேர்காணல்
01. ‘அரசியலைத் தெரிந்து வைத்துக் கொண்டு எழுதும் எழுத்தாளர்களில் நீங்கள் குறிப்பிடத் தகுந்தவர்’ – எனது இந்தக் கருத்துப் பற்றி நீங்கள் என்ன சொல்ல விரும்புகின்றீர்கள் ? முருகபூபதி : மனிதர்களிடத்தில் நாகரீகம் பரவத்தொடங்கிய காலம் முதலே அரசியலும் அறிமுகமாகிவிட்டது. அரசியல்தான் தேசங்களின் தலைவிதி. மக்கள் தேர்தலில் யாருக்கோ வாக்களிக்கிறார்கள். யாரையாவது ஆதரிக்கின்றார்கள். அத்துடன், அரசியல் கருத்தியல் சார்ந்தது. எனவே எவருமே தனக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை எனச்சொல்லமுடியாது. நான் பத்திரிகையாளனாக உருவாகி படைப்பாளியாக மாறியவன். பத்திரிகையாளனுக்கும்…