ஆசிரியர்: noelnadesan
-
நினைவில் வாழும் விசுவானந்ததேவன்
நடேசன் 77 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் மார்ஸ் மண்டபத்தில் தங்கியிருந்தேன். நான் கலகா வீதியைக்கடந்து எதிர்ப்பக்கமாக புகையிரதநிலையம் அமைந்த பகுதியில் உள்ள மிருகவைத்தியத்துறைக்கு செல்லும்போது பலதடவைகள் விசுவானந்ததேவனைக் கண்டிருக்கிறேன். துணிப்பையை தோளில் கொழுவியபடி குறைந்தது இரண்டு நண்பர்களுடன் எதையோ தொலைத்துவிட்டதுபோல் புற்களோ அல்லது ஊர்வனவோ நசிந்துவிடாதிருக்கவேண்டும் என்பதுபோல் கால்களை எட்டி எட்டி வைத்தபடி சிரிப்பைத் தழுவ விட்டபடி என்னைக்கடந்து நடக்கும் விசுவானந்ததேவன் எப்பொழுதும் நினைவில் நிற்கிறார். அவரது உருவம், முகம், அவரது புதுமையான…
-
அவலங்கள்:சாத்திரியின் சிறுகதைத்தொகுதி.
நடேசன். ரோமர்கள் சாபோ மலை உச்சியில் மிருகங்களைப் பலி கொடுத்து, அதை எரிக்கும்போது அங்கிருந்து வந்த மரக்கரியும்(KOH) மிருகக்கொழுப்பும் மழையில் கழுவி அருவியுடன் சேர்ந்தது. அந்த அருவியுடன் கலந்த நீரோடையில் மிதந்து வந்த மிருக எச்சங்கள் கலந்த இடத்தில் ரோமன் மகளிர் துணிகள் துவைக்கும் போது அவை எதிர்பாராமல் பிரகாசமாக வந்தன. இதுவே சவர்க்காரம் உருவாகிய கதை. இன்னமும் சவர்க்காரம் செய்வதை சபோனிபிக்கேசன் (Saponification) என்பார்கள். விடுதலைப்புலிகளால் முன்னெடுக்கப்பட்ட தமிழ் ஈழப்போராட்டத்தில் ஏற்பட்ட அழிவுகள் தவிர்த்து, போராட்ட…
-
3. கரையில் மோதும் நினைவலைகள்
மெல்பன் கரையில் மோதும் நினைவலைகள் 3 நடேசன் எனது வாழ்வில் அதிக காலம் மெல்பனில் வாழப்போகிறேன் என அக்காலத்தில் நான் எண்ணவில்லை. மனைவியின் சகோதரர்கள் இருவர் இங்கு இருந்தபோதும் மனைவிகூட அதைப்பற்றிச் சிந்திக்கவில்லை. நாட்டை விட்டு வாழ்வுதேடி ஓடியவர்களில் ஒருவனாக இருந்தேன். ஆனால் என்னையறியாமல் வாழ்வின் பெரும்பகுதி உலகத்தின் சிறந்த நகரங்களில் ஒன்றான மெல்பனில் அமைந்துவிட்டது. இந்தியாவில் இருந்து வந்து ஒரு மாதகாலம் மட்டும் சிட்னியிலிருந்தோம். எனது மனைவியின் இளைய சகோதரன் ரவி, மெல்பனில் மருத்துவராக இருந்தார்.…
-
பூமராங் இணைய இதழ்
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் இணைய இதழ் பூமராங் உங்கள் பார்வைக்கு வருகிறது. http://www.atlasonline.org சங்கத்தின் உத்தியோகபூர்வ ஏடாக இதனை உங்கள் முன்னிலையில் சமர்ப்பிக்கின்றோம். எமது சங்கத்தின் வளர்ச்சியின் ஊடாக மற்றும் ஒரு பரிமாணத்தில் பூமராங் இணைய இதழில் சங்கமிக்கின்றோம். சங்கத்தின் செய்திகள், சங்க உறுப்பினர்களின் படைப்புகள் மற்றும் அவுஸ்திரேலியத் தமிழ் கலை இலக்கிய ஆளுமைகள் பற்றிய கட்டுரைகள், அகில உலகரீதியான தமிழ் கலை, இலக்கிய ஆக்கங்கள், படைப்பிலக்கிய மொழிபெயர்ப்புகள் , நூல் மதிப்பீடுகள், வாசகர் பக்கம்,…
-
அசோகமித்திரன் நினைவுகள்
தமிழ் நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கிற்காக இலங்கை வந்திருக்கும் படைப்பாளி. முருகபூபதி சென்னையில் வாழும் ஒரு நடுத்தரக்குடும்பம். மனைவி கடைத்தெருவுக்குப் போய்விட்டாள். கணவன் குழந்தையுடன் வீட்டில். தெருவில் சென்ற ஒரு ரிக்ஷாவை காணும் குழந்தை, ” அப்பா ரிஷ்க்கா ” என்று சொல்கிறது. உடனே தகப்பன், ” அது ரிஷ்க்கா இல்லையம்மா…. ரிக்ஷா” என்று திருத்திச்சொல்கிறார். குழந்தை மீண்டும் ரிஷ்க்கா எனச்சொல்கிறது. தகப்பன் மீண்டும் திருத்துகிறார். ஒவ்வொரு எழுத்தாக சொல்லிக்கொடுக்கிறார். ” ரி… க்…ஷா…” குழந்தையும் அவ்வாறே, ”…
-
லாபிரடோரும் சீனக்குடும்பமும்
ஒரு லாபிரடோர் நாயை வீட்டுக்குள் வைத்து வளர்க்கும் எனக்குத் தெரியும் அதனது நிபந்தனையற்ற அன்பு, விசுவாசம் மற்றும் தோழமை. ஆனால் வற்றாத நதியில் குளிக்கும்போது வேகமாக இழுத்துச் செல்லும் நதியின் சுழல்போல் சிக்கல்களையும் பொறுத்துக்கொள்ள வேண்டும். நமது வாழ்வில் ஏற்படும் காதல் பாசத்திற்குக் கொடுக்கும் விலை போன்றது. என்ன 12 அல்லது 13 வருடங்கள் மட்டுமே நீடிக்கும். அதில் முக்கியமானது வீட்டின் தரையில் தினம் தினம் புதிதாக முளைக்கும் உரோமங்கள். தரையில் மட்டுமல்ல வீட்டில் உள்ள கட்டில்,…
-
வாழும் சுவடுகள்
By Pon Vasudevan கடந்த இரண்டு நாட்களாக ஒரு புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தேன். படிக்கப்படிக்க மிகவும் பிடித்துப்போய் இதைப்பற்றி அவசியம் எழுத வேண்டும் என்று தோன்றியபடி இருந்தது. இன்று படித்து முடித்துவிட்டேன். எழுதலாம் என்று யோசித்தால், ‘ஆகா, ஓகோ, பிரமாதம், பேஷ் பேஷ்’ என்ற மாதிரியான வார்த்தைகளை மாற்றிப்போட்டு ‘உணர்வுகளை, ரசனையைத் தூண்டும் எழுத்து, சகல உயிரினங்களின் மீதும் உருவாகும் மனிதாபிமானம், நுண்ணுணர்வால் மனிதர்களை அடிமைப்படுத்துகிற செல்லப் பிராணிகள், அழகாகச் சித்தரிக்கப்பட்ட உறவுச்சிக்கல்கள்’ என்றெல்லாம் எழுத வேண்டி வருமோ…
-
பார்த்தோம், ரசித்தோம், புசித்தோம்
காலச்சுவடு நாட்காட்டி “அடிசில்” பேசும் நளபாகத்தில் இலக்கிய ஆளுமைகளின் அர்த்தமுள்ள வரிகள் முருகபூபதி ” ஒரு காலைக்காட்சி. வெள்ளைச்சட்டையில், இரட்டைப்பின்னல் போட்ட இரண்டாம் வகுப்பு மாணவி நான். சைக்கிள் மிதித்து விரைகிறேன். வேம்பும் வாகையும் பனையும் நிழல்தர, மா, பலா, வாழை, தென்னை, கனிகள் நிறைந்து செழித்த ஊர் அது. பாடசாலை போகும் பாதை. ஒவ்வொரு வீட்டைக்கடக்கும்போதும் காற்றில் ஒவ்வொரு வாசம். ஒருவீட்டில், தேங்காய்ப் பாலில் எலுமிச்சை பிழிந்துவிடும் வாசம். – அது ‘பாற்சொதி’. இன்னொரு வீட்டில்,…
-
2.கரையில் மோதும் நினைவலைகள்.
கரையில் மோதும் நினைவலைகள் ஒருவர் நமக்கு நல்லவராகவும் மற்றவருக்கு வில்லனாகவும்இருப்பதை பல தடவை பார்த்துள்ளேன். 2011ல் இலங்கையில் கட்டுநாயக்கா ஏர்போட்டால் வந்து இரவு ஒரு மணியளவில் நீர்கொழும்பிலுள்ள ஒரு கடற்கரையோர ஹோட்டலில் படுத்தேன். அதிகாலை நேரம். கடல் அலைகள் கரைமீது மோதும் ஓசை சங்கீதமாக இருந்தது. ஆனாலும் அவுஸ்திரேலிய நேரத்திற்குப் பழக்கமான உடல் என்பதால் கண் விழித்துவிட்டேன். ஆனால் உடல் அயர்வாக இருந்தது. எனது மோபைல் சத்தமிட்டது. நான் இலங்கைக்கு வந்த காலத்திலே எனது மகனோடு எனது…
-
சரோ என்றால் லயன்
இதுவரையும் வர்த்தக விளம்பரங்களைப் படமாக்கிக் கொண்டிருந்த அவுஸ்திரேலியன் டைரக்ரரின்(Garth Davis) படம் லையன். முதல் படத்திலே ஓஸகாருக்கு பரிந்துரைக்கப்பட்டது என்பதற்கு அப்பால் அறச்சீற்றத்துடன் புதிதான கருத்தை எடுத்து அன்னியமான கலாச்சாரத்தில் உள்ள கதையை படமெடுப்பதற்கு மிகுந்த துணிவு வேண்டும். நாவலில் இருந்து உருவாக்கப்பட்ட திரைப்படம். மிகவும் நேரடியான கதை. அனாதையாகச் சிறுவன் தத்தெடுக்கப்பட்டு அன்னிய கலாச்சாரத்தில் வளர்ந்த பின்பு தனது குடும்பத்தை தேடுதலே இந்தப்படம். உள்ளுணர்வுகளின் தேடுதலே தொடர்ச்சியாக படமாக்கப்பட்டுள்ளது சிலம் டக் மிலியனரில் வந்த தேவ்…