ஆசிரியர்: noelnadesan
-
தென்னிந்திய நினைவுகள் 2; யாழ்ப்பாணம் இந்துக்கல்லுரி
அடுத்த நாள் மாலையில்தான் சென்னைக்கு ரயிலில் பிரயாணம் செய்ய முடியும் என்பதால் இரவு இராமேஸ்வரத்தில் தங்க வேண்டும். பத்து ரூபாய்க்கு ஒரு ஹோட்டல் அறை அந்த இரவு தங்குவதற்கு கிடைத்தது மிகவும் ஆச்சரியமானது. இலங்கையில் சாமானியர்கள் தங்குவதற்கு வசதியான இது போன்ற ஹோட்டல்கள் இல்லை. எங்கள் காலத்தில் யாழ்ப்பாணத்தில் தங்கும் வசதியுள்ள ஹோட்டல்கள் இருந்ததாகத் தெரியாது. இராமேஸ்வரத்தில் அன்று எனக்குக் கிடைத்த அந்த அறை குளியல் அறையுடன் சுத்தமானதாக இருந்தது. படுப்பதற்கு சிறிய கட்டிலும் எனது தேவைக்கேற்றபடியாக…
-
தென்னிந்திய நினைவுகள்
1 )நாட்டை விட்டு வெளியேறுதல் 84 ஏப்பிரலில் எனக்கு குருட்டுப் பூனை இருட்டில் பாய்வது போன்றது இந்தப் பயணம். நாட்டை விட்டு வெளியேறும் பலர் வியாபாரம், உல்லாசப்பணம் முதலான காரணங்களால் பிரியும்போது அந்தப்பயணம் உணர்வு கலந்தது அல்ல. ஆனால் நான் இப்போது வெளியேறும்போது எனது நாடு, மக்கள், உறவினர் முதலான பந்தங்கள் அறுபடுகிறது. எட்டு மாத கர்ப்பிணியான மனைவியையும் இரண்டு வயதே நிரம்பாத மகனையும் விட்டு எதற்கு பரதேசம் போகிறோம் என்பது தெரியாமல் எனது பயணம் தொடங்குகிறது.தலைமன்னாரில்…
-
எக்சைல் 84 :மீண்டும் வெளியேறுதல்.
ஈழத்திலிருந்து இந்தியா வந்த அகதி மக்களுக்காகவும், ஈழ விடுதலை இயக்கங்களின் தேவைக்காகவும் அமைந்த எமது நிறுவனம், மேலும் போரில் அங்கங்களை இழந்தவர்களுக்கும் உதவ விரும்பினோம். காலிழந்தவர்களுக்கான சேவையை அளிப்பதற்காக ஜெய்ப்பூர் காலை உருவாக்க,அதைத் தயாரித்த மருத்துவர் சேத்தியை சந்தித்து செய்த உடன்படிக்கையில் ஜெய்ப்பூர் வைத்தியசாலையில் பல இளைஞர்களுக்கு செயற்கைக் கால்களை செய்வதற்குப் பயிற்றுவித்தோம். அவர்களில் பலரை அழைத்துக்கொண்டு ஜெய்ப்பூர் சென்றோம். ஆனால் நானும் டாக்டர் சிவநாதனும் அக்காலத்தில் பலதடவை சென்றபோது கூட ஜெய்ப்பூர் நகரத்தில் எந்த இடத்தையும்…
-
எக்சைல் 84 : தமிழ் மக்கள் விடுதலைக் கழகத்தின் பிடிபட்ட ஆயுதங்கள்..
சென்னையின் வெப்பகாலம் . ஒரு மதிய நேரத்தில் டாக்டர் சிவநாதன் வேர்வை முகத்தில் சிந்தியபடி வந்து, “இவன் முகுந்தனோடு பெரிய கரைச்சல் ” என்றபோது அவரது முகம் அட்டகோணத்தில் இருந்தது. ஆரம்பத்தில் புரியவில்லை. தமிழ் மக்கள் விடுதலை இயக்கத்தின் தலைவர் உமா மகேசுவரனைக் குறிப்பிடுகிறார் எனப்புரிந்ததும் “ஏன் என்ன நடந்தது?’ என்று விசாரித்தேன் “புளட் – ஒஃபீசில் வேலை செய்த பிள்ளையொன்று இங்கு வந்து வேலை கேட்கிறது. அங்கே இருக்கமுடியாது என்று அழுகிறது. ” “நாமள் அதுக்கு…
-
எக்ஸைல் :1984 கெடுகுடி சொற்கேளாது.
ஜனநாயகமான கட்டமைப்பற்ற ஆயுத அமைப்புகள் தங்களுக்குள் பிரிவதும் அழிவதும், தாயின் வயிற்றில் குறைபாடான கருவொன்று அபோர்சனாக வெளியேற்றப்படுவது போன்ற இயற்கைச் செயல்பாடாகும். அது போல் இயற்கையின் வலிமையானவை நிலைப்பதும், நலிந்தவை அழிவதுமான டரர்வினியன் தத்துவமாகும் . இப்படியான டார்வினியன் பரிணாம தத்துவம் இலங்கை தமிழ் அரசியலுக்கும் பொருந்தும். சகோதரஇயக்கங்கள் விடுதலைப்புலிகளால் அழிக்கப்பட்டது என்று பலராலும் கூறப்பட்டாலும், அது மிகையானது. ஆனால் அந்த இயக்கத்தில் இருந்தவர்கள் விடுதலைப்புலிகளால் வேட்டையாடப்பட்டார்கள் என்பதே உண்மையாகும். இரண்டிற்கும் என்ன வித்தியாசம் எனக் கேட்கலாம்.…
-
அவளும் ஒரு பாற்கடல்.
எஸ்.எல். எம்.ஹனிபா (அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியச் சங்கத்தின் வாசிப்பனுபவ அரங்கில் வாசிக்கப்பட்டது) சிறுகதை வாழ்வின் ஒரு தருணத்தை காட்டுவது என்கிறார்கள். மேலே போய் உதாரணம் சொல்வதானால் காட்டில் ஒரு மின்னல் ஒளியில் நாம் காணும் தரிசனம் போன்றது . சிறுகதை, கவிதை மற்றும் நாவலுக்குப் பின்னாக வந்த இலக்கிய வடிவம். முக்கியமாக அமரிக்காவில் மாத வாரச் சஞ்சிகைகள் உருவாகியபோது அதற்கு ஏற்றதான இலக்கிய வடிவம் இந்தச் சிறுகதை . விஞ்ஞானம்போல் இலக்கியத்திற்குத் திட்டமான விதிகள் இல்லாத போதிலும்…
-
அவுஸ்திரேலிய ஆதிவாசி இளைஞனுடன் ஒரு நாள்
இமயமலை சிறு குழந்தைபோல் ஒவ்வொரு வருடமும் வளர்ந்து வருகிறது.இமயமலையின் வயது 50 மில்லியன் வருடங்கள் அவுஸ்திரேலியாவின் மத்தியில் 348 மீட்டர் உயரமான கல் மலையுள்ளது. அதனது வயது 500 மில்லியன் வருடங்கள்.அது வளரவில்லை. மத்திய அவுஸ்திரேலியாவில் உள்ள இந்த மலை ஐயேர் கல்மலை(Ayers Rock) ஒரு காலத்தில் என்று கூறப்பட்டது. இந்துக்களுக்கு இமயமலை எப்படி புனிதமானதோ,அப்படி அவுஸ்திரேலிய ஆதிவாசிகளுக்கு உலறு கல்மலை புனிதமானது . அனன்கு(Anangu) என்ற அவுஸ்திரேலிய ஆதிவாசிகள் இனக்குழுவிற்கு சொந்தமான பிரதேசத்தில் இந்த உலறு…
-
பிரேசிலில் சம்பா நடனம்
பிரேசிலில் ரியோ டி ஜெனிரோவோடு சென்ற போது ஒலிம்பிக் நடந்து ஒரு மாதமாகியிருந்தது. லத்தீன் அமரிக்காவில் மட்டுமல்ல உலகத்திலே பெரிய நகரங்களில் ஒன்று ரியோ டி ஜெனிரோ. அதிகமாக உல்லாசப்பிரயாணிகள் செல்லும் இடம். ஆனால் பல மேற்கத்திய ஊடகங்கள் நகரம் பாதுகாப்பற்றதும், வன்முறையும், போதைமருந்துகளும் மலிந்த இடமென்பதால் இவர்கள் எப்படி ஒலிம்பிக்கை நடத்துவார்களென சொல்லிக்கொண்டிருந்தபோதே வெற்றிகரமாக ஒலிம்பிக்கை நடத்தி முடித்தார்கள். ஊடகங்களின் வெருட்டலால் நாங்கள் கொப்பகானா என்ற பிரபலமான இடத்தில் தங்கினோம். மேல்தட்டு உல்லாசப் பிரயாணிகள் நிற்பதுடன்…
-
தங்கோ நடனம்
புவனஸ் அயர்ஸ் நகரத்தின் மத்தியில் உள்ள மெற்றப்போலிட்டன் தேவாலயத்திலிந்து வீதியைக் கடந்து சென்றபோது, எதிரில் உள்ளது மே சதுக்கம் ( Plaza de Mayo) இதை அன்னையர்களின் சதுக்கம் என்பார்கள். ஆர்ஜன்ரீனா மே மாதத்தில் ஸ்பானியர்களிடம் இருந்து சுதந்திரமடைந்ததை நினைவுகொள்ளும் பொருட்டு அரசகாரியாலயங்கள் முன்பாக இந்தச் சதுக்கம் அமைக்கப்பட்டது. பிற்காலத்தில் முக்கியமாக இராணுவ ஆட்சிக்காலத்தில் ஆட்சிக்கு எதிரானவர்களாக கருதியவர்களைக் கடத்தி கொலை செய்யப்பட்டவர்களின் தாய்மார் கூடி ஆர்ப்பாட்டம் செய்யும் போராட்டமையமாக மாறியது. தாய்மார்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தியதால்…
-
நாவல்: சங்கிலியன் தரை.
நடேசன். ஆங்கில நாவல் வரலாற்றில் போர் நாவலாகச் சொல்லப்படுவது த ரெட் பாட்ஜ் ஒஃப் கரேஜ் (The Red Badge of Courage is a war novel by American author Stephen Crane ). இதை எழுதியவர் அமரிக்காவின் உள்நாட்டுப் போர் நடந்து ஆறு வருடத்திற்கு பின்னர் பிறந்தவர். இது மிகவும் சிறிய நாவல். உள்நாட்டுப் போரில் பங்கு பற்றிய ஒரு சாதாரண வீரனின் கதையைச் சொல்கிறது. ஆரம்பத்தில் போர்முனையில் பயந்தவன் பின்பு எப்படி…