ஆசிரியர்: noelnadesan
-
வண்ணாத்திக்குளம்.; வியாபாரிமூலை
விடுதியில் சமையல் என் பொறுப்பானதால் குசினிக்குச் சென்று அரிசியை அளந்தபோது குணதாச எதிரில் வந்தார். ‘இன்றைக்கு எத்தனை பேர் சாப்பாட்டுக்கு’? என்றேன். ‘ஜே.வி.பி காரர் வராவிட்டால் ஆறு பேர் எதற்கும் இரண்டு பேருக்குச் சேர்த்து போடுங்கள்’ என கூறியபடி குணதாச சிகரெட்டை பற்ற வைத்தார். எங்கள் விடுதியில் சுப்பையாவுக்கு அடுத்ததாக வயதில் மூத்தவர். இவரது குடும்பம் கம்பளையில் வசிக்கிறார்கள். இவர் மேல் எல்லோருக்கும் மரியாதை உண்டு. ‘அதுசரி ஏன் சுப்பையா மாத்தையா வேலைக்கு வரவில்லை? இன்றைக்கு புதன்கிழமை…
-
முள்ளுள்ளபுதர்களின் மத்தியில்;அத்தியாயம் 9
ரெரன்ஸ் அந்தோனிப்பிள்ளை பழையபுலிகளின் அனுபவப்பகிர்வு எனது நினைவுகளை இரண்டுவருடம் பின் நோக்கி இழுத்துச் சென்றது. வன்னியில் அப்பொழுது மாத்தையா கொடிகட்டிபறந்தகாலம். TRO அப்பொழுதுதான் அங்கே காலூன்ற ஆரம்பித்தது. ஒருநாள் காலைஅப்போதைய TRO பொறுப்பாளன் என்னைசந்திப்பதற்காகஅவசரஅவசரமாக வந்தான். ‘சேர் இண்டைக்குமத்தியானம் ஒரு கூட்டம் இருக்கு நீங்கள் கட்டாயம் வரவேணும,; மாத்தையாஅண்ணையும் வாறார்’என்றான் கதையோடுகதையாக. ‘என்னடாப்பா என்ன கூட்டம் என்றுகொஞ்சம் விபரமாகச் சொலலுமன்’என்றேன் சற்றே சந்தேகத்துடன்.‘ஒண்டும் பெரிசாய் இல்லை சேர்….சில நிறுவனங்களைஅவர் சந்திக்கவேணுமென்றார.; நான் உடனே உங்கட நிறுவனத்தைத்தான் நினைச்சனான்’என்றான்.…
-
வண்ணாத்திக்குளம்.; கால்வாய்க்கரையில்
நான் வெகுவாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த கடிதம் வந்திருந்தது. அது சித்திராவின் கடிதம். அந்தக்கடிதத்தை மட்டும் சட்டைப்பையில் வைத்து விட்டு மற்றைய கடிதங்களை விரைவாக வாசித்து முடித்தேன். சின்னவயதில் ‘மஞ்சி’ பிஸ்கட் பெட்டியில் முக்கோண வடிவமான பிஸ்கட் எனக்கு பிடிக்கும். ஆகவே அதைத் தனியாக எடுத்து வைத்து விட்டு வட்டமான, நீளமான பிஸ்கட்டுகளை முதலில் சாப்பிடுவேன். சுpன்ன வயது நினைவுக்கு வந்தது. என் பிடித்தமான கடிதத்தை வாசிப்பதற்கு முன் கதவை மூடி விட்டு வந்தேன். முன்னறையில் யாருமில்லை எனினும்…
-
முள்ளுள்ளபுதர்களின் மத்தியில் ;அத்தியாயம் 8
அக்கினிஞானஸ்நானம் பழையபுலிகள் மனம் திறந்துகதைப்பதுஅரிது. தங்களின் இயக்கநடவடிக்கைகள் குறித்துவாயேதிறக்கமாட்டார்கள். எமது நிறுவனத்தில் இரண்டு வருடங்களாகப் பணிபுரியும் முன்னாள் ‘பளைப்பொறுப்பாளரும்,மல்லாவிப் பொறுப்பாளரும்’ இதற்குவிதிவிலக்கல்ல. நான் சிலசமயங்களில்,அவர்கள் பங்குபற்றிய தாக்குதல்கள்,மறக்கமுடியாததாக்குதல்கள் மற்றும் ஏன் அவர்கள் இயக்கத்தைவிட்டு வெளியேறினார்கள் என்றுபவ்வியமாகக் கேட்பேன். ‘பெரிசாய் சொல்வதற்க்குஒன்றும் இல்லை தம்பி இயக்கத்திலசேர்ந்திட்டன். அம்மா தனிச்சுப்போனா.குடும்பத்தைப் பார்க்க ஒருதரும் இல்லை…’போன்ற சாட்டுக்களைக் பட்டும்பாடாமலும் கூறுவார்கள். நானும் ஒன்றையும் விடுத்துவிடுத்துக்கேட்கமாட்டேன். அவர்கள் இயக்கத்தைவிட்டுவெளியேறுகையில் இயக்கநடவடிக்கைகளைப்பற்றி வெளியில் வாய் திறக்கக்கூடாது என்ற கடும் நிபந்தனை அவர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் என்பது…
-
ஆனந்தவிகடனின் மூன்றாம் தர ஜனரஞ்சக வியாபாரம் .
எழுதியவர் யாரோ ஆனந்தவிகடன் பற்றி மேலும் எனக்குத் தெரிந்த தகவல்கள் சில: ஒரு காலகட்டத்தில் அதன் நிறுவனர் ஜெமினிவாசன் ஆசிரியராகவிருந்தபோது பல தரமான சிறுகதைகள் அதில் வெளிவந்தன. ஜெயகாந்தனின் சில சிறந்த சிறுகதைகளும் “ முத்திரைக்கதை “ அந்தஸ்துடன் வெளிவந்தது. அவ்வேளையில் அச்சிறுகதைகளுக்கு ஆனந்தவிகடன் 500/ = இந்திய ரூபாவும் சன்மானமாக வழங்கியது. ஜெயகாந்தனின் அக்கினிப்பிரவேசம் அதில் ஒன்று.பின்னாளில் ஆனந்தவிகடனின் போக்குப்பிடியாமல், ஜெயகாந்தன் அதில் எழுதுவதை நிறுத்தினார். அதற்காக தனக்கு ஆனந்தவிகடன் வழங்கிய சன்மானங்களை அவர் திருப்பிக்கொடுக்கவில்லை…
-
வண்ணாத்திக்குளம் ;பன்றி வேட்டை
காமினியும் நானும் வெள்ளி இரவு வேட்டைக்குச் செல்ல தீர்மானித்தோம். காமினி நண்பனின் காரையும் இரண்டு துப்பாக்கிகளையும் இரவலாகப் பெற்று வந்தான். செட்டிகுளத்துக்கு அருகில் உள்ள ராமன் குளம் என்னும் இடத்தில் பெரும்பாலும் முஸ்லிம் மக்கள் வாழ்கிறார்கள். அந்த கிராமத்தினை சுற்றி அடர்ந்த காடு உண்டு. இந்த காடுகளும் வில்பத்து வனவிலங்கு சரணாலயத்தின் எல்லை வரை செல்வதால் பல மிருகங்கள் அதிக அளவில் வரும். காட்டுப் பன்றிகள் கிராமத்தில் பயிர்களை அழித்து விடும். முஸ்லிம் விவசாயிகள் காட்டுப்பன்றிகளைச்சுட விரும்பாததால்…
-
முள்ளுள்ள புதர்களின் மத்தியில்; அத்தியாயம் 7
ரெரன்ஸ் அந்தோனிப்பிள்ளை முல்லைத்தீவு இராணுவமுகாம் தாக்கி அழிக்கப்பட்டதன் களிப்பு அடங்குவதற்க்கு முன்னரே கிளிநொச்சி இடம்பெயரவேண்டிய நிலை ஏற்படுமோ என்ற பீதி மக்களை ஆட்கொள்ளத்தொடங்கிவிட்டது. குண்டுச்சத்தங்களும் துப்பாக்கி வேட்டுகளும் உரத்து ஒலிக்கத் தொடங்கிவிட்டன. கிளிநொச்சி வைத்தியசாலை நோயாளர்களால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. மாலை வேளைகளில் மக்கள் வெளியில் வரத்தயங்கினர். ஒரு சில வியாபாரிகள் தங்கள் பொருட்கனை லொறிகளிலும் ரைக்டர்களிலும் ஏற்றிக்கொண்டு ஏ9 வீதிக்கு கிழக்காகவும் மேற்காகவும் கொண்டு சென்றனர். சேர சோழ பாண்டியர்கள் ( புலிகளின் வியாபார நிலையங்கள்)…
-
வவனியா தகனம்
சித்திரா வவனியாவுக்கு போவதாக சொன்ன வெள்ளிக்கிழமை காலையில் நான் சுறுசுறுப்பாக இயங்கினேன். அலுவலகத்தில் மெனிக்கவிடமும் சமரசிங்கவிடமும் அன்று செய்யவேண்டிய வேலைகளைக்கூறி நான் யாழ்ப்பாணம் நோக்கிய பயணத்தைத்துவங்கினேன். நடந்து வரும் வழியில் ஒருவர் தன் நாய்குட்டிக்கு புழு கண்டிருப்பதாகவும் அதற்கு மருந்து வேண்டும் என கேட்டார். ‘நல்லவேளை நான் பஸ்ஸில் ஏற முதல் கேட்டீர்கள்’! சிறு துண்டில் புழுவுக்கான மருந்தை எழுதிக் கொடுத்து விட்டு மனதுக்குள் ஆத்திரம் வந்தாலும் சிரித்தபடியே அந்த மனிதருக்கு விடை கொடுத்தனுப்பி பஸ் நிலையத்தை…
-
முள்ளுள்ள புதர்களின் மத்தியில் ;அத்தியாயம் 6
——- எமது வாகன தொடரணி புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள்வர இருண்டு விட்டது. வழமை போல் உட்பிரவேசிக்கும் வரிசையில் பதிவுசெய்வதற்க்காக காத்துநின்றேன். எனக்கு முன்னால் நின்ற கிறிஸ்தவ பாதிரியார் தனது முறை வர பதிவு செய்பவரிடம் அடையாள அட்டையைக்கொடுத்து விட்டு அவனின் கேள்விகட்கு பதிலளிக்க ஆரம்பித்தார். ‘ உங்கள் பிரயாணத்தின் நோக்கம்’ ‘தேவ பணி’ என்றார் அந்தப்பாதிரியார். கஸ்டப்பட்டு எனக்கு வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டேன். அதற்கிடையில் அந்த பாதிரியார் மறைந்துவிட்டார். என்னையும் வழமையான கேள்விகளை கேட்டுவிட்டு ஒரு துண்டை…
-
வண்ணாத்திக்குளம் -மீண்டும் பதவியா
அலுவலகத்தில் அன்று வந்த கடிதங்களை படித்துக் கொண்டிருந்;தேன். ஒரு கடிதம் தனிச்சிங்களத்தில் எழுதப்பட்டதாக இருந்ததால் மெனிக்கேயிடம் கொடுத்து வாசிக்கிச்சொன்னேன். மெனிக்கே படித்து விட்டு ‘பதவியா மகாவித்தியாலயத்தில் கால் நடை விவசாயம் பற்றி இம்மாதம் பதினைந்தாம்; திகதி மாணவர்களுக்கிடையில் பேச முடியுமா என பாடசாலை அதிபர் கேட்டிருக்கிறார் ‘ என்றாள். பதவியா மகாவித்தியாலயத்தில்தான் சித்திரா வேலை செய்கிறாள் என்ற நினைப்பு வந்தவுடன் சந்தோஷத்தில் சிரித்து விட்டேன். ‘என்ன மாத்தையா சிரிக்கிறீர்கள்?’, என்றாள் மெனிக்கே. ‘இல்லை, நான் வருகிறேன், என்று…