ஆசிரியர்: noelnadesan
-
Wanted: A New Tamil Leader For Peace In Sri Lanka.
SUNDAY, NOVEMBER 30, 2008 LEAVE A COMMENT by Dr. Noel Nadesan. Editorial in chief of the Uthayam, community paper based in Melbourne (November 30, Melbourne, Sri Lanka Guardian) What no Tamil thought would happen in Jaffna is now shocking the world: the Tamils are carrying the Sri Lankan flag and hailing the victory of the…
-
மக்கத்துச்சால்வை மண்ணும் மக்களும்
படித்தோம் சொல்கின்றோம் : சௌந்தர்ய உபாசகரின் எளிமையான வாழ்வை பேசும் சிறப்பு மலர் முருகபூபதி பல வருடங்களுக்கு முன்னர் ஈழத்தின் மூத்த எழுத்தாளர் செ. கணேசலிங்கனின் மண்ணும் மக்களும் என்ற நாவல் வெளிவந்தது. அந்த நாவலை, அது அதிதீவிரவாதம் பேசுகிறது என்ற காரணத்தினால் தடைசெய்தார்கள். சில வருடங்களுக்கு முன்னர் ஈழத்தின் மற்றும் ஒரு இலக்கிய ஆளுமை எஸ். எல். எம். ஹனீபா எழுதிய மக்கத்துச்சால்வை என்ற கதைத்தொகுப்பு வெளியானது. ஹனீபாவின் எழுத்துக்களை பிடிக்காத சில அதிமேதைகள் அவரை…
-
16 . கரையில் மோதும் நினைவலைகள்;முதல் ரயில் பயணம்.
நடேசன் பேராதனைப் பல்கலைக்கழகம் செல்லும் பயணமே எனது முதல் ரயில் பயணம் என்பதால், அந்தப் பயணம் புதிய அனுபவமாக இருந்தது. ஏற்கனவே பிரச்சினைப்பட்டதால், எனது அப்புவுடனான பேச்சு வார்த்தைகள் கஞ்சத்தனமாக இருந்தது. கனைப்புகளும் தலையாட்டலும், தந்தையினதும் மகனதும் தொடர்பாக இருந்தது. அதைப்பற்றி இருவரும் கவலைப்படவில்லை. கொடிகாமத்தை ரயில் தாண்டியதும் கைப்பையில் வைத்திருந்த உணவின் வாசம், நாசியால் சென்று , இரைப்பைக்கும் சிறுகுடலுக்கும் மத்தியில் போரை உருவாக்கியது . வீரகேசரிப் பத்திரிகையால் மடித்துக் கட்டித் தந்த பார்சலை திறந்தேன். உள்ளே…
-
கொலையாளிகளின் இரண்டாவது முயற்சி!
1984-85ம் ஆண்டுகளில் இந்தியாவில் இருந்தபொழுது எனது உடல்நிறை 56மப. அக்காலத்தில் எனக்கு அறிமுகமானவர்களில் ஒல்லியானவர்களை நான் காணவில்லை. சென்னையில் ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் தோழர் என கேதீசை எனக்கு அறிமுகப்படுத்தினார் இரஞ்சன் எனும் பத்மநாபா. தடிப்பான மூக்குக்கண்ணாடி (இந்திய தமிழில் சோடாபுட்டி), மிகவும் தீர்க்கமான பார்வை, ஒல்லியாக உயரமான அவரது தோளில் சிவப்பு கோடிட்ட சேட் ஒரு ஹங்கரில் தொங்குவதுபோல் தொங்கியது. ஒரு 48 கிலோ இருப்பார். ‘தோழர்’ என என்னை விளித்தார். இவரை பார்த்தது…
-
சோமநாத் ஆலயம் – குஜராத்
நடேசன் எனது குஜராத் பயணத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது சோமநாத் ஆலயத்திற்குச் செல்வதே. ஆனால் தெய்வ நம்பிக்கையோ அல்லது மத நம்பிக்கையோ இல்லாத நான் ஏன் போகவேண்டும் ? தற்போதைய இந்திய இந்துத்துவா அரசியலின் வரலாறு அங்கே தொடங்குகிறது. இந்தியாவின் முக்கிய தலைவர்களாக மகாத்மா காந்தி, வல்லபாய் பட்டேல், மோதி என்பவர்கள் ஒரு மாநிலத்திலிருந்து வந்தார்கள். வரலாறு என்பது வலை போன்றது. விரித்தபின் விரும்பியபோது வெளிவரமுடியாது. வரலாற்றால் சிறைபிடிக்கப்பட்ட பல நாடுகள் உலகில் உள்ளன. அதில் ஈராக்,…
-
பாதை தவறிய பைத்தியம்
கதையாசிரியர்:இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் (ஒரு கிழக்கிலங்கைக் கிராமம் 1986?) ஊரைத் தழுவி ஓடிக்கொண்டிருந்த ஆற்று நீர், மதிய வெயிலில்,அலுமினியத் தகடாய்ப் பள பளத்துக்கொண்டிருந்தபோது,அவள் தனது சேலையை முழங்காலுக்கு மேல் உயர்த்திப் பிடித்துக்கொண்டு ஆற்றைக் கடந்து வந்தாள். வைகாசி மாதமென்றபடியால்,ஆற்றில் பெரிய வெள்ளமில்லை.ஆறு ஒடுங்கிய கரைகளில்,உயர்ந்து வளர்ந்திருந்த நாணல்களுக்கிடையில் பல்நூறுன கொக்குகள் தங்கள் கழுத்தை வெட்டி வெட்டிக் குனிந்து மீன்பிடித்துக் கொண்டிருந்தன. மெல்லிய சிவப்புக் கால்களுடன்,மிக நீண்ட கழுத்துடைய கொக்குகள் இரை பிடிப்பதை,சேற்றுக்குள் புதைந்து கிடக்கும் காட்டெருமைகள் சோம்பேறித்தனமாகப் பார்த்துக்…
-
முருகபூபதி என்ற நதி !
வற்றாத ஜீவநதி அதன் கரைகளை நனைத்து ஈரலிப்பாக்கி பயிர்களை வளர்க்கும் !! சட்டத்தரணி செ. ரவீந்திரன் அரசியல் தலைவர்களைப்பற்றியோ அல்லது சில வரலாறுகளையோ எழுதலாமா? என்று அண்மைக் காலமாக நான் யோசித்துக்கொண்டிருந்தபோது, நான் வதியும் அவுஸ்திரேலியாவில் எம்மத்தியில் வாழ்ந்துகொண்டு தமிழ் மக்களின் நன்மைக்கு குறிப்பாகவும் சமுதாயத்திற்கு பொதுவாகவும் தங்கள் வாழ்நாளை செலவிட்டுக்கொண்டிருப்பவர்கள் பற்றியும் முதலில் எழுதினால் பிரயோசனப்படும் என்று யோசித்தேன். அத்தகையவர்களைப்பற்றி சிந்தித்தபோது பலர் மனத்திரையில் வந்தார்கள். ஆனால், அவர்கள் எல்லோரையும் முந்திக்கொண்டு எழுத்தாளரும் ஊடகவியலாளரும்…
-
வவ்வால்கள்- கருத்து
எழுத்தாளர் சுதாராஜ். முதலில் பிங்கோவுக்கு மேற்கொள்ளும் சத்திர சிகிச்சையை வாசிக்கும்போது மனப்பதட்டமாயிருந்தது. ஏனெனில் உங்களைப்போலவே சக பிராணிகளை நேசிக்கும் மனது கொண்டவன் நான். அடுத்த கட்டத்தில் அடிக்காவின் நடவடிக்கைகள்! அவளுக்கு மனோவியாதியில்லை… மனக்கசிவு என நினைக்கிறேன். பிங்கோவின் சிகிச்சையின்போது தவறான நூலைக் கொடுத்துவிட்டேனோ என மனம் கலங்குகிறாள். அந்த சீவனுக்கு தன் காரணமாக ஏதும் மோசம் நடந்துவிடக்கூடாதே என்றும், தனது மனதை ஆற்றுவதற்காகவேனும் அதை உறுதி செய்துகொள்ள முயல்கிறாள். பின்னர் கதை இன்னொரு பக்கம் திரும்புகிறது! கணவர்…
-
15.கரையில் மோதும் நினைவலைகள்: மெல்பன் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு
நடேசன் யாழ்ப்பாணம் ஐந்து வருடங்கள் படித்த மிருக வைத்தியக் கல்வி , நாற்பது வருடங்கள் செய்த தொழில், அதனாலடைந்த வாழ்வு, அம்மா ஆனந்தராணியின் கழுத்தில் தாலியாகத் தொங்கியது என்ற உண்மையை நான் இங்கு சொல்ல வேண்டும். 1975 ஆண்டு சித்திரை மாதத்தில் இலங்கையில் பல்கலைக்கழகத்தில் அனுமதியிருந்த காலமது. இலங்கையில் பேராதனை மட்டுமே மிருக வைத்திய பீடம் உள்ள ஒரே பல்கலைக்கழகம் என்பதால், நான் செல்லாத இலங்கையின் மத்திய மலைப்பகுதிக்குச் செல்கிறேன் எனச் சந்தோசத்தில் மிதந்த நாட்கள்…
-
அ.ஆ.இ
— சிறுகதை இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் (கிளிநொச்சி பிராந்திய கிராமம்-இலங்கை) அது ஒரு சாதாரண மாலைப் பொழுது. கணேஸ் மாஸ்டர் தனது சின்ன மகள் மாலதிக்கு அ,ஆ.இ சொல்லிக் கொண்டிருந்தார்.மனைவி குசினியில் சமைத்துக்கொண்டிருந்தாள்.அவர்களின் கேற்றைத் திறந்துகொண்டு யாரோ வருவது போலிருந்தது.மாஸ்டர் தனது படிப்பித்தலை நிறுத்திக்கொண்டு வந்தவர்களை நிமிர்ந்து பார்த்தார். நான்கு பேர் வந்து நின்றார்கள் அவர்களில் மூவர் துப்பாக்கி வைத்திருந்தார்கள் நாலாவது பேர்வழி அவர்களுக்குத் தலைவர்கள்போல் எடுப்பாக நின்றான்.அவன் துப்பாக்கி கையிலில்லாமல் இடுப்பிற் சொருகப் பட்டிருந்தது. அவன் மாஸ்டரைப்…