ஆசிரியர்: noelnadesan
-
பெரியம்மா
சொல்ல மறந்த கதைகள் -20 முருகபூபதி – அவுஸ்திரேலியா ஈழத்தமிழர் தாயகத்தில் மட்டுமல்ல அவர்கள் புலம்பெயர்ந்த நாடுகளிலும் வழக்கமாகச்சொல்லப்படும் ஒரு வார்தைப்பிரயோகம் இருக்கிறது. “சும்மா பேக்கதை கதையாதை…” இந்தப்பேச்சுவழக்கு தமிழகத்திலிருக்கிறதா என்பது தெரியவில்லை. அதென்ன பேக்கதை? பேய்க்கதைதான் காலப்போக்கில் பேக்கதையாக மருவியதா? “பேயன்” என்ற சொல்லும் எம்மவரிடம் வழக்கத்திலிருக்கிறது. சுந்தரமூர்த்திநாயனார் சிவபெருமானை ‘பித்தா’ என விளித்து தேவாரம் பாடினார். பித்தன் – பேயன் இரண்டு சொல்லும் ஒரே கருத்தைக்கொண்டவையா? என்பதை தமிழ்கற்றுத்தேர்ந்த பண்டிதர்கள்தான் சொல்லவேண்டும். பேய்க்கதைகள் தமிழர்களிடம்…
-
மெல்பேனில் குதிரை பந்தயம்
This article was written few years ago and reproduced here for the cup day Noel Nadesan கார்த்திகை மாதத்து முதலாவது செவ்வாய்க்கிழமை அவுஸ்திரேலியாவில் காற்றுவீசும். கடல் அலைமோதும். நதிகள் ஓடிக்கொண்டிருக்கும். ஆனால் மனிதர்களின் ஓட்டம் சில நிமிடங்களில் ஸ்தம்பித்துவிடும். ஏன் அவுஸ்திரேலியாவில் இப்படி நடக்கிறது என குடியேற்றவாசியான எனக்கு ஆரம்பத்தில் புரியவில்லை. எனக்கு நடந்துகொண்டிருந்த பரிட்சை ஒருமுறை நிறுத்தப்பட்டு அனைத்து பேராசிரியர்களும் என்னை தனியேவிட்டு ரி.வி. பார்க்க போய்விட்டார்கள். நான் என்ன…
-
கண்டம்
சொல்லமறந்த கதைகள் – 19 முருகபூபதி – அவுஸ்திரேலியா “ நீந்தத்தெரியுமா?” சுஜாதாவின் சிறுகதையொன்று இந்தக்கேள்வியுடன் ஆரம்பித்து, இந்தக்கேள்வியுடனேயே முடிவடையும். பல வருடங்களுக்கு முன்னர் படித்தது. ஒரு காதலனும் காதலியும் இறப்பதற்கு முன்னர் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்ளும் கேள்விதான் “ நீந்தத்தெரியுமா?” இருவருக்கும் தெரியாது. அதனால் நீரில் மூழ்கி இறந்துவிடுவார்கள். சுஜாதா கதையை இப்படி முடிப்பார். இறுதியாக அவர்கள் பேசிய வார்த்தைகள் “ நீந்தத்தெரியுமா?” என்னிடம் இதே கேள்வியைக்கேட்டால், பதில் “தெரியாது” இத்தனைக்கும் இந்துசமுத்திரத்தாயின் அரவணைப்பில் வாழ்ந்த நீர்கொழும்பில்…
-
TAMIL ASYLUM SEEKER FACING DEPORTATION ATTEMPTS SUICIDE IN MELBOURNE
A Tamil asylum seeker scheduled who faced deportation to Sri Lanka today (Wednesday) has attempted suicide in the early hours of this morning. It is understood that ambulances were called to the Maribynong Detention Centre in Melbourne and that the man has been transported to the Royal Melbourne Hospital. The 42 year old Tamil man,…
-
மனிதம்.
சொல்ல மறந்த கதைகள் – 18 முருகபூபதி – அவுஸ்திரேலியா போர்க்காலம் கொடுமையானது. மனித உயிர் அழிவுகளையும் சொத்தழிவுகளையும் இடப்பெயர்வுகளையும் அகதிவாழ்வையும் அதிகபட்சமாக ஒப்பாரி அழுகுரல்களையும் வேதனை, விரக்தி, இயலாமை என்பவற்றையும் தன்னகம் கொண்டிருப்பது. இலங்கையில் ரணில் விக்கிரமசிங்கா பிரதமராக பதவியிலிருந்த காலப்பகுதியில் சமாதான காலம் வந்தபோது, போரின் கோரமுகங்களை சந்தித்த ஈழ மக்களும் புலம்பெயர்ந்த தமிழர்களும் நிம்மதிப்பெருமூச்சு விட்டனர். வெளிநாடுகளில் சுகபோகத்துடன் வாழ்ந்த ஆயுதத்தரகர்களும் ஆயுத வியாபாரிகளும் இலங்கையில் கொழும்பு உட்பட ஏனைய பிரதேசங்களில் சவப்பெட்டிகள்…
-
Revisiting crimes in the North-East
This is translation of my Tamil article with few addition and Edited version appeared in Ceylon daily news in 2 parts Dr. Noel Nadesan, EX Editor of Melbourne-based UTHAYAM newspaper After my recent visit to Mullativu I came away with the distinct feeling that the Tamil leadership is playing the same old game of the three…
-
விடுதலைப்புலிகள் யாவருக்கும் மன்னிப்பு ?
விடுதலைப்புலிகளை சேர்ந்தவர்கள் யாவரையும் ஒட்டு மொத்தமாக மன்னித்து விடுதலை செய்ய வேண்டும் என்ற கருத்து பலரிடம் உளளது. இங்கே எனது கருத்து மன்னிப்பது மன்னிக்காதது அல்லது பழி வாங்குவதோ இல்லையோ என்பது சம்பந்தமான பிரச்சனை இல்லை. வெளியே வருபவர்கள் சமூகத்தில் நல்ல பிரஜைகளாக இருக்கவேண்டும் என்பது தான். இதற்கு தயாராக எல்லோரும் இருக்கிறார்களா எனபதே? புலிகளால் எனக்கு தெரிந்த 500 பேர் கொல்லப்பட்டிருப்பார்கள். பொட்டு அம்மானையும் பிரபாகரனையும் தவிர்ந்த சகலரையும மன்னிக்கும் நிலையில் உள்ளேன் . மேற்காணும்…
-
மரணதண்டனை தீர்ப்பு ?
சொல்லமறந்த கதைகள் – 17 முருகபூபதி – அவுஸ்திரேலியா இலங்கையில் இனப்பிரச்சினை தொடர்பான அரசியல் நெருக்கடிகள் உக்கிரமடைந்தபின்பு ஏராளமான கொலைச்சம்பவங்கள் நடந்துவிட்டன. அரசியல் தலைவர்கள், இயக்க, மற்றும் தொழிற்சங்கத்தலைவர்கள், மதகுருமார், அரச அதிபர்கள், அதிகாரிகள், படைத்தளபதிகள், கல்விமான்கள், பத்திரிகையாளர்கள், சாதாரண அப்பாவிப்பொதுமக்கள்…. என்று அந்தப்பட்டியல் நீளும். இது ஒரு புறமிருக்க பாதாள உலகக்கோஷ்டிகளின் படுகொலைகளும் தொடர்ந்தன. ஆனால் இந்தப்படுகொலைகள் தொடர்பான நீதிவிசாரணைகள் பரபரப்பை ஏற்படுத்தவில்லை. தொடர்ச்சியான நீதிமன்ற விசாரணைகள், அவசரகால சட்டத்தின் கீழும், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழும்…
-
கிரிகையில் முத்தி பெறுவோம்.
நடேசன் ”நான் ஒரு பிசினஸ் ஆரம்பிக்க உத்தேசித்துள்ளேன். இதற்கு உதயத்தில் விளம்பரம் செய்ய வேண்டும்”” என தொலைபேசியில் ஒருவர் கேட்டார். எங்கிருந்து பேசுகிறீர்கள்? என்ன வியாபாரம்?” ”கோயில் ஒன்னு புதிதாக சிட்னியில் கட்டவிருக்கிறேன்.” எனக்கு சிறிது அதிர்ச்சியாக இருந்தாலும் தொடர்ந்து தொலைபேசியில் பேசி முடித்தேன். சமீபத்தில் நண்பர் ஒருவரிடம் பேசும் போது பேச்சுக்கிடையே ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு ”உங்களுக்குத் தெரியுமா”? குறிப்பிட்ட நபர் தான் ஆரம்பித்து வைத்த ஆலயத்தை தன்னாலே அழிக்கவும் ஆக்கவும் முடியும் என குறிப்பிட்டார்.’அவர்…
-
இருதுளி கண்ணீர்.
மிருகங்களுக்கு வைத்தியம் செய்பவர்களும் மருத்துவர்கள் போல் உணர்வுகளுக்கு அப்பால் தம் தொழிலை செய்யவேண்டும் என்பது விதி. விதிகளை மீறும் சந்தர்ப்பம் எவருக்கு ஏற்படுவதுண்டு. அன்று ஒருநாள். இரவு நேரத்தில் எமது மிருகவைத்தியசாலை பலமாக தட்டப்பட்டது, ஏதோ ஒருவர் ஏமேர்ஜன்சியாக வந்து நிற்கிறார் என்ற எண்ணத்தில் கதவைத் திறந்தேன். இரண்டு பொலிஸ்காரர்கள் ஒரு நாயை அழைத்து வந்திருந்தார்கள். இல்லை..இழுத்து வரப்பட்டிருந்தது, சங்கிலியால் கட்டி. மனோகராப் படத்தில் சிவாஜிகணேசன் அரசசபைக்கு சங்கிலியால் கட்டி இழுத்து வரப்பட்ட காட்சியை நினைவூட்டியது. வசனம்…