ஆசிரியர்: noelnadesan
-
Expat expressions
Sirimavo Ediriweera On April 27, the Hume Global Learning Centre in Craigieburn, Victoria became the venue of a book launch. In the midst of a fair gathering of invitees, family and friends, two novels written by Dr Noel Nadesan and a short story collection compiled by Letchumanan Murugapoopathy were launched. The event was organised by…
-
காணாமல் போன கடிதங்கள்
– நடேசன் (written 2004 Nov) ‘தம்பி, மற்றவர் கடிதங்களை பார்த்தல் கூடாது என உங்கம்மா உனக்கு சொல்லித்தரவில்லையா’? இப்படி ஒருவர் என்னோட என் அம்மாவையம் குற்றவாளிக் கூண்டில் ஏற்றினார். அப்பொழுது எனக்கு ஏழு அல்லது எட்டு வயது இருக்கும். எழுத்துக் கூட்டித்தான் பத்திரிகையோ பத்தகமோ வாசிப்பேன். கடிதத்தின் எழுத்துக்கள் புரியாதகாலம். எங்கள் வீட்டில்தான் தபால் கந்தோர். எனது அம்மா நான் போஸ்ட் மாஸ்டர். (பெண்ணென்றால் போஸ் மிஸ்ரஸ் என்பார்கள்) கேட்டவர் என்னை சீண்டத்தான் கேட்டார் ஆனால்…
-
நோயல் நடேசனுடைய “அசோகனின் வைத்தியசாலை“ என்ற புதிய நாவல்
– கருணாகரன் நோயல் நடேசனுடைய “அசோகனின் வைத்தியசாலை“ என்ற புதிய நாவல் அவருடைய Noelnadesan’s Blog என்ற இணைத்தளத்தில் தொடராக வெளியாகிக் கொண்டிருக்கிறது. இணையத்தில் இந்த நாவல் பிரசுரமாவதற்கு முன்பு, முழுமையாக வாசிக்கக் கிடைத்தது நல்லதோர் வாய்ப்பே. மின்னஞ்சல் மூலமாக இதை அனுப்பி வைத்திருந்தார் நடேசன். புலம்பெயர் சூழலிலிருந்து புதிதாக ஏதாவது வரும் என்று எதிர்பார்க்கப்பட்டதற்கு ஏற்றமாதிரி, வேறுபட்ட கதைக்களத்தையும் நிகழ்ச்சிகளையும் பாத்திரங்களையும் கருவையும் கொண்டு தமிழில் எழுதப்பட்ட இன்னொரு நாவலாக “அசோகனின் வைத்தியசாலை“ இருக்கிறது. வாழ்க்கை…
-
அசோகனின் வைத்தியசாலை- 22
மெல்பேனில் நகரின் மத்தியில் உள்ள ஒரு பிரபலமான மதுச்சாலைக்கு அன்ரூவின் பிறந்தநாள் அழைப்பை ஏற்று மாலை ஆறரை மணியளவில் வந்து சேர்ந்த சுந்தரம்பிள்ளைக்கு வாசலுக்கு சென்ற பின்பு தனியாக உள்ளே செல்ல தயக்கமாக இருந்தது. பல தடவைகள் நண்பர்களுடன் சேர்ந்து சென்றிருந்தாலும் மதுச்சாலைக்கு தனியாக செல்வது என்பது இன்னமும் பழக்கத்தில் வரவில்லை. ஒரு கலாச்சாரத்தில் வளர்கப்பட்ட பின்பு மற்றய கலாச்சாரத்தில் மாறுவது ஓடும் இரயிலில் இருளில் ஒரு கம்பாட்மென்ரில் இருந்து மற்றதற்கு செல்வது போன்று இருந்தது. இலகுவான…
-
காலத்தால் மறையாத கோகிலாம்பாள்.
பயணியின் பார்வையில் 17முருகபூபதி பலஆண்டுகளுக்குமுன்னர் வெளியான சிவாஜிகணேசன் நடித்த தூக்குத்தூக்கிபடத்தில் வரும் வசனம் கொண்டுவந்தால் தந்தை,கொண்டுவந்தாலும் வராவிட்டாலும் தாய்,சீர்கொண்டுவந்தால் சகோதரி,கொலையும் செய்வாள் பத்தினி,உயிர்காப்பான் தோழன். எல்லாம் சரி அது என்ன கொலையும்செய்வாள் பத்தினி ? என்றுஅம்மாவிடம் கேட்டேன். மனைவிகொலைசெய்வாளா? ம்மாஅதற்குபதில்சொல்லாமல் வீரகேசரிபத்திரிகையில் ஒருசெய்தியை காண்பித்தார். அப்பொழுதுஎனக்கு12 வயதிருக்கும். நான் பத்திரிகைகளும் கல்கியும் படிக்கத்தொடங்கியகாலம். அன்றுநான் படித்தசெய்திநடந்த இடத்தைப்பார்ப்பதற்குசுமார் ஐம்பதுவருடங்கள் காத்திருந்தேன். உருத்திரபுரம்என்றவுடன் எங்கள் ஈழத்துதமிழ்சமூகத்தின் மூத்ததலைமுறையினருக்குஉடனடியாகஞாபகத்திற்குவருவதுஉருத்திரபுரம் கோகிலாம்பாள்தான். அந்தக்கொலைச்சம்பவம் நடந்துஅரைநூற்றாண்டுகாலமாகிவிட்டது. ஆனாலும் கோகிலாம்பாள் இன்றும் பேசப்படுகிறாள். எழுதப்படுகிறாள்.…
-
அசோகனின் வைத்தியசாலை 21
மூன்றாவது பாகம் ரிமதி பாத்தோலியஸ் விலகியதும் ஆதர் அல்பிரட் என்ற இளைப்பாறிய மிருக வைத்தியர் வைத்தியசாலை மனேஜராக நியமிக்கப்பட்டார். இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பாக இந்த வைத்தியசாலையில் இளைஞராக வேலை செய்தவர். அதன் பின்பு சொந்தமாக வைத்தியசாலை வைத்து பல வருடங்களாக நடத்திக் கொண்டு இருந்தபோது அவரது இதயம் ஒரு நிமிடம் துடிப்பதற்கு மறந்து விட்டது. அந்த விடயம் அவரது கிளினிக்கில் நடந்ததால் உடனே அம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டார். வைத்தியசாலையில் அவரது இதயத்திற்கு உபரியாக பேஸ்மேக்கரை வைத்து இன்னும்…
-
இறந்தவர்களுக்கான சர்வமத பிரார்த்தனை
முப்பது வருட போரில் இறந்தவர்களுக்காக இப்படியான சர்வமத பிரார்த்தனையை ஒழுங்கு செய்திருப்பவர்களுக்கு என நன்றிகள். இந்த போர் வேற்று நாடுகளுக்கு எதிராக நடந்தது அல்ல. சொந்த மக்களிடையே ஏற்பட்ட, மிக நீண்டகாலமாக இரத்தம் சிந்திச் செய்த போர். இத்துடன் 1971, 87 நடந்த உயிர்ச்சேதங்களையும் சேர்த்துகொள்ளும் போது மிகவும் துன்பகரமானது . ஒரு உயிரை இழப்பது கடினமானது ஆனால் இலங்கையில் ஏராளமான உடல் உறுதியான, திறமையான இளைஞர்களை இழந்திருக்கிறோம். இது ஏற்பதற்கு மிகவும் கடினமானது. தனிபட்டமுறையில் 500…
-
அசோகனின் வைத்தியசாலை-20
ஒன்று விட்ட ஒரு வெள்ளிக்கிழமைகளில் காலோஸ், சுந்தரம்பிள்ளை இருவரும் அடுத்தடுத்த தியேட்டர்களில் ஆபிரேசன் செய்வார்கள். அன்று வெள்ளிக்கிழமை காலோஸ் ஒரு ஆபரேசன் தியேட்டரிலும் மற்றைய தியேட்டரில் சுந்தரம்பிள்ளை சாமுடனும் ஆபரேசன்களை செய்து கொண்டிருந்தார். வெள்ளிக்கிழமைகளில் வேலை செய்யும் நொறல் விடுப்பு எடுத்ததால் மருத்துவ ஆலோசனை அறையில் ரிமதி பாத்ததோலியஸ்ஸோடு வேலை செய்து வந்த ஜெனற், காலோஸ்சுக்கு உதவி செய்து கொண்டிருந்தாள். காலோஸ் அவளுடன் வழக்கம் போல் ஆபாச ஜோக்குகளை சொல்லியபடி ஆபரேசனை செய்து கொண்டிருந்தார். சாம் அடிக்கடி…
-
No more tears for Tamil By Dr. Noel Nadesan-, Australia
This article published may and July 2009 Daily mirror (only article published twice in short space in history) The Sri Lankan President, Mahinda Rajapaksa, deserves the congratulations of all Sir Lankan regardless of their ethnicity. More than any other community, the Sri Lankan Tamils owe him their thanks for ending their misery. As everybody knows…
-
பயணியின் பார்வையில் — 16
எழுவைதீவு படகுத்துறையும் உருத்திரபுரம் மாமரமும் முருகபூபதி கிளிநொச்சி மகா வித்தியாலயத்திலும் உருத்திரபுரம் மகா வித்தியாலயத்திலும் எமது கல்வி நிதியத்தின் உதவிபெறும் மாணவர்கள் இருந்தார்கள். யாழ்ப்பாணம் செல்லும் வழியில் முல்லைத்தீவு, கிளிநொச்சி நிகழ்ச்சிகளை முடித்துக்கொள்வது என்பது எனது பயணஒழுங்கு. 1960 களில் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி கல்லூரியில் ( தற்போது கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்) புலமைப்பரிசில் பெற்று படிக்கச்சென்ற காலத்தில் அப்பா ஒரு கம்பனியில் விநியோக பிரதிநிதியாக பணியாற்றினார். அந்தக்கம்பனிக்குச்சொந்தமான வேனில் என்னையும் எனது உறவினர்களின் மகன்மாரையும் குடும்ப…