பகுப்பு: Uncategorized
-
மல்லிகை ஜீவா மறைந்து ஓராண்டு
ஜீவாவை நினைவுகூரும் புதிய இரண்டு நூல்கள் ! ! யாழ்ப்பாணத்தில் சாதாரண மத்திய தரக் குடும்பத்தில் பிறந்து, உயர்கல்வியை பெறுவதற்குரிய வாய்ப்பு வசதிகளை இழந்து, அறிஞர்களினதும் முற்போக்கு எழுத்தாளர்களினதும் நூல்களை வாசித்துப்பெற்ற அனுபவங்களினாலேயே மேதையாக வலம்வந்து, ஈழத்து தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு கடுமையாக உழைத்திருக்கும் மல்லிகை ஜீவா, கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28 ஆம் திகதி கொழும்பில் தமது 93 வயதில் மறைந்தார். ஜோசப் – மரியம்மா தம்பதியருக்கு 1927 ஆம்…
-
இதயம் பேசுகிறது.
ஐந்தறிவு பிராணிகளின் குரலோசை ஆக்கிரமித்தவாறே அந்த மிருகவைத்தியசாலை தனது கடமையை அந்த காலைப்பொழுதில் ஆரம்பிக்கிறது. அன்று செவ்வாயக்கிழமை. படுபிஸியான நாள். ‘வார்ட்டு’களில் அனுமதிக்கப்பட்டிருந்த நாய்களையும் பூனைகளையும் பரிசோதித்துவிட்டு வெளிநோயாளர் பிரிவு அறைக்கு வருகின்றேன். ஏற்கனவே அனுமதிக்கப்பட்டிருந்த சில பிராணிகளின் இரத்தம் சோதிக்கவேண்டியிருந்தமையால் – வெளிநோயாளர் பிரிவுக்கு வருவதற்கு சற்று தாமதமாகிவிட்டது. ஒலிவாங்கி மூலம் – முதலாவதாக சோதிக்கவேண்டிய நாயின் பெயரையும் அதன் சொந்தக்காரரையும் அழைத்தேன். சிலகணங்களில் இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க அழகான யுவதி கருப்புநிற டோபர்மான் (…
-
கருத்து : மனநோய்களும் திருமணங்களும்
Dr. Madhan Kumar. N இந்த கட்டுரையில் (கட்டுரை என்று சொல்வதற்கு காரணம் இருக்கு. இக்கட்டுரையில் நிறைய தகவல்கள் அடங்கியுள்ளது) மூன்று முக்கிய விடயங்களை உற்று நோக்க வேண்டியுள்ளது. முதலாவது மக்களின் சமயம் சார்ந்த நம்பிக்கைகளும் அதை அணுகும் விதமும். அடித்தட்டில் உள்ள மக்கள் வேற்று சமயத்தையும் தங்களின் குறைகளுக்காக எந்தவித பாகுபாடின்றி அணுகியுள்ளனர். இது மத சகிப்புத்தன்மை என்று எடுத்துக்கொள்வது தவறு. யாரும் எதையும் சகித்து வாழவில்லை எல்லாவற்றையும் சமமாக பார்க்கிறார்கள். இது தான் ‘தெய்வம் என்பதோர்’…
-
தேனீ இணைய இதழின் ஆசிரியர்
ஜெமினி கெங்காதரன் ஓராண்டு நினைவேந்தல் 22-01- 2022 ) சனிக்கிழமை கொரோனோ பெருந்தொற்று உலகடங்கிலும் உக்கிரத்தாண்டவம் ஆடத் தொடங்கிய காலப்பகுதியில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் திகதி தேனீ இணைய இதழின் ஆசிரியர் ஜெமினி கெங்காதரனையும் அது ஜெர்மனியில் காவுகொண்டுவிட்டது. புங்குடுதீவில் 1965 ஆம் ஆண்டு கணேஷ் – மங்கையற்கரசி தம்பதியரின் புதல்வனாகப்பிறந்த ஜெமினி கெங்காதரன் யாழ். இந்துக்கல்லூரியின் முன்னாள் மாணவர். 1980 களில் அய்ரோப்பாவுக்கு புலம்பெயர்ந்த அவர், 1989 ஆம் ஆண்டு தொடக்கத்தில்…
-
மனநோய்களும் திருமணங்களும்.
நடேசன். இந்திராணி சில்வா 45 வருடங்களுக்கு முன்பு இலங்கையில் என்னுடன் படித்த பெண். அவரை சமீபத்தில் ஒரு மெய்நிகர் நிகழ்வில் சந்தித்தேன். அந்த நிகழ்வில் கலந்துகொண்ட ஒருவர் அந்தப் பெண்ணை “ அங்கொடை சில்வா “ என்றார். அது ஒரு நகைச்சுவை எனப் பலரும் சிரித்தார்கள். நான் சிரிக்கவில்லை, ஆனால், அந்த வார்த்தையின் உள்ளர்த்தம் என்னைச் சிந்திக்கப் பண்ணியதால் இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது. அங்கொடை என்ற இடம் இலங்கையில் பிரதான மன நோய் வைத்தியசாலை அமைந்துள்ள கொழும்பின்…
-
எக்ஸைல்
” ஈழப்போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்குகொண்டவர்கள் எல்லோரும் தோல்வியைத்தான் தழுவினார்கள். ஒருவருமே வெல்லாத அந்தப்போராட்டத்தில் பலர் காலம் கடந்து தங்களை சுதாரித்துக்கொண்டார்கள். வேறும் பலர் கிடைத்த நன்மைகளோடு வாரிச்சுருட்டினார்கள்” இந்த வரிகளை நடேசனில் எக்ஸைல் நூலில் படித்தபோது, கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப்பின்னர் பலராலும் எழுதப்பட்ட நூல்கள், கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள்தான் நினைவுக்கு வந்தன. ஜெயமோகன்
-
23 கரையில் மோதும் நினைவலைகள்.
ஈழமுரசில் எனக்கெதிராக பிரசுரிக்கப்பட்ட வாசகர் கடிதம் தொடர்பான சமாதான பேச்சுவார்த்தை குறிக்கப்பட்ட நாளில் கிளன்வேவளியில் உள்ள விடுதலைப்புலிகளது ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமாரது வீட்டில் நடக்கவிருந்தது. நாங்களும் நண்பர்கள் கொண்ட ஒரு குழுவாகச் சென்றோம். அந்தக் குழுவில் நானும் என்னுடன் நண்பர்களான லோயர் ரவீந்திரன் மற்றும் சிவநாதன் உடன் வந்தனர். மாலை மயங்கிய நேரத்தில் அங்கு சென்றபோது எனது கண்ணில் தெரிந்தது கல்லூரி நண்பன் ஒருவனது சிரித்த முகம் , என்னுடன் இந்துக்கல்லூரியில் உயர்தர வகுப்பில் படித்த இரத்தினகாந்தனது, இருபது…
-
ஊடகவியலாளர் சிதம்பரப்பிள்ளை சிவகுமார்:அஞ்சலி
ஊடகவியலாளர் சிதம்பரப்பிள்ளை சிவகுமார் விடைபெற்றார் ! முருகபூபதி “ வாழ்க்கையின் மீதான விமர்சனத்திலிருந்தே ஒரு படைப்பு உருவாகிறது. சுய அனுபவத்தின் மெய்த்தன்மை படைப்பில் தென்படுமானால் அந்தப்படைப்பு வாசகரின் நம்பிக்கையை பெற்றுவிடுகிறது. நம்பிக்கையைப் பெற்று நம்மை பாதிக்கிறது. இந்தப்பாதிப்பே இலக்கியத்துக்கும் சமூகத்துக்குமான உறவின் அடிப்படையாக அமைகிறது. நல்ல எழுத்து – அனுபவம் சார்ந்து வாழ்க்கையின் சிக்கலைப்பற்றி விவாதிக்கும். வாழ்க்கை இப்படி…இப்படி இருக்கிறது என்று கவனப்படுத்துவதன் மூலம், நமக்கும் வாழ்க்கைக்குமான உறவை ஒழுங்கு செய்யமுயலும், வாழ்க்கையை எதிர்கொள்ளுவதற்கான ஒரு…
-
கானல்தேசத்தில் மெல்பேன்
“மெல்பேன் தமிழ் உறவுகளிடமிருந்து வரும் போராட்ட நிதி யுத்த நிறுத்தத்தின் பின் குறைந்து விட்டது. பலர் ஊரில் தங்கள் உறவினர் மூலமாக விடுதலைப்புலிகளிடம் கொடுத்துவிடுவதாகச் சொல்கிறார்கள். மற்றவர்கள் இனி சமாதானம் வந்து விட்டது. பணம் ஏன் கொடுக்க வேண்டும் என்கிறார்கள். இந்த நிலை நீடித்தால் மண்ணில் போராடுபவர்களுக்கு எப்படி பணம் அனுப்புவது? மற்ற நாடுகளைப் போல் இலங்கைக்கு விடுமுறையில் செல்பவர்களிடம் விசா மாதிரி பணம் அறவிட்டால் தான் சரிவரும் ” என்று ஒருவர் கவலையுடன் தெரிவித்தார். “நீங்கள்…
-
எஸ். பொன்னுத்துரையின் எழுத்துகள்.
நடேசன் ————————————————- எஸ் . பொ. என்ற எழுத்தாளரை நாம் நினைவு கூருகின்றோமோ இல்லையோ, அவரது எழுத்துகளை இலங்கைத் தமிழர்கள் நினைவு கூரவேண்டும் – முக்கியமாக இலக்கியத்தை நேசிப்பவர்கள் . இதைச் சொல்லும்போது அதற்கான விளக்கம் தேவை இல்லையா? அவர் எனது நான்கு நூல்களைப் பதிப்பித்தவர். என் கையைப் பிடித்துக் கதை எழுதுபவனாக அழைத்துச் சென்றவர். அவர் இல்லையென்றால் ஆஸ்திரேலியாவில் ஒரு மிருக வைத்தியனாகவும் ஓய்வு வேளைகளில் கையில் விஸ்கி கிளாசுடனும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பொரித்த…