பகுப்பு: Uncategorized
-
பொங்கும் எரிமலைகளின் நிலம்.
நோயல் நடேசன். சிறு வயதிலே இந்தோனேசியாவிலிருந்தே பற்றிக் சாரங்கள் ( லுங்கிகள்) சேட்டுகள் வருமென்பதை அறிந்திருந்தேன். அப்படியான சேட்டுகள் சாரங்கள் சிங்கப்பூர் வழியாக இலங்கை வந்திருந்தன. அவற்றை உடுத்திருந்தவர்களை ஆவென வாய் பிளந்தபடி பார்த்தோம். பிற்காலத்தில் இலங்கையிலும் பற்றிக் துணிகள் செய்தார்கள். இலங்கை மக்களில் ஒரு வீதமானவர்கள் மலே இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இந்தோனேசியாவை, டச்சுகாரர் ஆண்டபோது இலங்கை வந்து சேர்ந்தவர்கள். இந்தோனேசிய அரச வம்சங்களில் பலரை, டச்சு காலனி அரசு இலங்கைக்கு நாடு கடத்தியபோது ஒரு பகுதியினர்…
-
தைலம் “ அவுஸ்திரேலியக் கதைகள் அறிமுகம்
புகலிட இலக்கியத்தின் மற்றும் ஒரு வரவு “ முருகபூபதி “ எமது முன்னோர்கள் ஐவகைத் திணைகளை எமக்கு அறிமுகப்படுத்தினர். குறிஞ்சி – மலையும் மலைசார்ந்த நிலமும் / முல்லை – காடும் காடு சார்ந்த நிலமும் / மருதம் – வயலும் வயல் சார்ந்த நிலமும் / நெய்தல் – கடலும் கடல் சார்ந்த நிலமும் / பாலை – மணலும் மணல் சார்ந்த பகுதிகளும் தமிழர்களின் அந்நிய நாடுகளை நோக்கிய புலப்பெயர்வையடுத்து அவர்களின் வாழ்வை பிரதிபலிக்கும் இலக்கியங்கள் அறிமுகமானதும் அந்தப்பிரதேசங்களின் நிலங்களும் பருவகாலங்களும் ஆறாவது திணையை அறிமுகப்படுத்தியிருக்கிறது. பனியும் பனிசார்ந்த நிலங்களுமே அந்த ஆறாம் திணையாகியிருக்கிறது. “ கடந்த ஜனவரி…
-
பண்ணையில் ஒரு மிருகம்:நடேசனின் நாவல்.
– நோயல்.நடேசனின் நாவல் குறித்த பார்வை – – யசோதா.பத்மநாதன் – 84 – 86 க்கிடைப்பட்ட தமிழகக் கிராமம் ஒன்று பற்றிய அந் நாடல்லாத ஒருவரின் வரிகளில் விரிந்த ஒரு பார்வைப் புலம் இந்த நாவல். இலங்கையரான அவுஸ்திரேலியாவில் வாழும் மிருகவைத்தியராகத் தொழில் புரியும் சிறுகதைகள், நாவல்கள், பயண இலக்கியம், தொழில் அனுபவங்களை தமிழுக்குத் தந்திருக்கும் நோயல் நடேசனின் ஐந்தாவது நாவல் இது. காலச்சுவடு பதிப்பாக 2022 மேயில் இந் நாவல் வெளிவந்திருக்கிறது.சுமார் அறிமுகம்,…
-
நைல் நதிக் கரையோரத்தில்.
கவிஞர் சல்மா. சமீபத்தில் ஒரு வார காலப்பயணமாக எகிப்து சென்று வந்த அனுபவங்களை சிறு கட்டுரையாக எழுதினேன். தற்செயலாக இந்த புத்தகம் பற்றி அறிந்து வாங்கி வாசித்த பிறகு என் பயணத்திற்கு முன்பாக இந்த புத்தகத்தை வாசித்து விட்டு செல்லவில்லையே என்கிற வருத்தம் மேலிட்டது. எகிப்தின் வரலாறு, நிலம், வளம், வாழ்க்கை என சகலத்தையும் கவனமாக வும் சுவராஸ்யமாகவும் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர் நோயல் நடேசன். யாரேனும் இனி எகிப்து பயணத்திற்கு திட்டமிடுவீர்கள் எனில் இந்த புத்தகத்தை…
-
டாக்டர் சியாமளா நடேசன் புற்றுநோய் உதவி நிறுவனம்
புற்றுநோய் சிகிச்சைக்கு உதவி வழங்கும் மருத்துவர் சியாமளா நடேசன் தன்னார்வத் தொண்டு நிறுவனம் கண்டியில் அங்குரார்ப்பணம் இலங்கையில் புற்றுநோய்ச் சிகிச்சைக்கு தேவைப்படும் உதவிகளை ஏழை மக்களுக்கு வழங்கும் நோக்கத்துடன், அவுஸ்திரேலியா மெல்பனில் வதியும் மருத்துவர் சியாமளா நடேசன், தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். இதன் அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த 26 ஆம் திகதி கண்டி, ரீஜன்னர் விடுதியில் நடைபெற்றது. குறிப்பிட்ட புற்றுநோய் சிகிச்சைக்கு உதவி வழங்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் இணையத்தளத்தை, மகப்பேற்று மருத்துவ…
-
Cancer Welfare Foundation launched.
http://www.cancerwelfarelanka.com My name is Noel Nadesan, living in Melbourne, a retired veterinarian and also a husband of a cancer survivor. It was a sudden realisation similar to someone hitting me on the head on a dark night, that my wife and partner over 45 years turned out to be a cancer patient and her life…
-
தாத்தாவின் வீடு. நாவல்.
கருணாகரன். முன்னுரை அனுபவங்களையும் அறிந்த தகவல்களையும் வைத்து எழுதுவது ஒரு வகை. இது எளிதானது. அனுபவங்களை எவ்வளவுதான் சிறப்பாக எழுதினாலும் அவை வெறும் பதிவுகளாகச் சுருங்கி விடக்கூடிய வாய்ப்புகளே அதிகமுண்டு. அனுபவங்களையும் நுண்ணிய அவதானிப்புகளையும் சரியாகக் கலந்து புதிய சிந்தனையோடு எழுதும்போது சிறந்த படைப்புகள் உருவாகின்றன. இதற்கொரு கலைப் பயிற்சி வேண்டும். அப்படித்தான் தகவல்களைத் திரட்டி அதையே மையப்படுத்தி எழுதினால் அது தகவற் திரட்டாகி விடக் கூடிய நிலையே அதிகம். இந்த மாதிரி எழுத்துகள் தினம் தினம்…
-
பாலியின் தொன்மங்கள்.
இயற்கையை மனிதன் தெய்வமாக உலகத்தின் பல பாகங்களிலும் வழிபட்டான் என்ற செய்தி நமது இந்து மதத்தில் மட்டுமல்ல எல்லா மதங்களிலும் உள்ளது. கிரேக்கர்களின் தெய்வங்கள் எல்லாம் ஒலிம்பஸ் மலையில் வாழுகின்றன. அதுபோல் யப்பானில் ஃபியுஜி மலை புனிதமானது. நமது சிவனொளிபாதமலை மற்றும் ஒரு உதாரணம். இவ்வாறு மலைகள் தெய்வமானதற்கு உலகெங்கும் பல உதாரணங்கள் உள்ளன. பாலித்தீவில், மலைகள், ஆறுகள், கடல், அருவிகள் எல்லாம் கடவுள் மயப்படுத்தப்பட்டுள்ளன எனச் சொன்னேன் அல்லவா? எனினும் இது புதுமையல்ல. ஆனால், வியப்பாக…