பகுப்பு: Uncategorized
-
வெங்கட் சாமிநாதன் – அஞ்சலி
பேராசிரியர் கைலாசபதியின் தமிழ் நாவல் இலக்கியம் நூலுக்கு ” மாக்ஸீயக்கல்லறையிலிருந்து குரல் ” – என்று எதிர்வினையாற்றியவரும் விடைபெற்றார். இலக்கிய முகாம்களில் பேசுபொருளான அந்த ஆளுமையின் மதிப்பீடுகள் காலத்தையும் வென்றுவாழும் முருகபூபதி – அவுஸ்திரேலியா நேற்று 21 ஆம் திகதி மெல்பனில் சிறிய பயணத்தில் இருந்தேன். நண்பர் நடேசன் தொடர்புகொண்டு, ” இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதனும் மறைந்துவிட்டார் ” என்ற அதிர்ச்சியான தகவலைத்தந்தார். இதில் கவனிக்கவேண்டியது, ” வெங்கட்சாமிநாதனும் ” என்ற பதம்தான். வெ.சா. மறைந்தார்…
-
தென்னிந்திய நடிகர் சங்கத்தேர்தல்
அரிதாரம் பூசியவர்கள் ஆடி முடித்த தென்னிந்திய நடிகர் சங்கத்தேர்தல் திரையுலகில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நடிகர்கள் கூட்டம் செய்தது என்ன…? பதுக்கும் பணத்தை உரியமுறையில் பயன்படுத்தியிருந்தால் நான்கு கோடி ரூபா கடன் வந்திருக்காதே….!!!! முருகபூபதி – அவுஸ்திரேலியா தென்னிந்திய நடிகர் சங்கத்தேர்தல் மிகுந்த பரபரப்புக்கு மத்தியில் ஒருவாறு நடந்து முடிந்திருக்கிறது. என்றைக்கும் இல்லாதவாறு இந்தத் தேர்தல் செய்திகள், தமிழக ஊடகங்களில் ஊதிப்பெருகியமைக்கு களத்தில் இறங்கிய சரத்குமார் அணியும் பாண்டவர் அணியென்று வர்ணிக்கப்பட்ட விஷால் அணியும்தான் காரணம். ஊர் இரண்டுபட்டால்…
-
சிட்னியில் பாஸ்கரனின் “முடிவுறாத முகாரி ” வெளியீடு
படித்தோம் சொல்கின்றோம் சர்வதேசம் எங்கும் ஒலிக்கும் பாதிக்கப்பட்ட மக்களின் முடிவுறாத முகாரி ஈழத்து புங்குடுதீவிலிருந்து அவுஸ்திரேலியா சிட்னிவரையில் தொடர்ந்து வரும் ஒரு கவிஞனின் ஆத்மக்குரல் முருகபூபதி மாறிவிட்ட நம்தேசத்தில் இன்னம் எவ்வளவு காலம்தான் இசைத்துக்கொண்டிருக்கும் இந்த முகாரி நெஞ்சில் உருண்ட கேள்வியோடு என் பிஞ்சுக்குழந்தையைப் பார்க்கிறேன். முகாரி அறியாத மகிழ்வோடு நீலாம்பரி இசைத்துக்கொண்டிருக்கிறது. இலங்கையில் கடலை அண்டிய புங்குடுதீவிலிருந்து கடல் சூழ்ந்த கண்டம் அவுஸ்திரேலியாவுக்கு வந்து, கடந்த அரைநூற்றாண்டுக்கும் மேலாக இலக்கியப்பிரதிகளை எழுதிவரும் செ. பாஸ்கரனின் முதலாவது…
-
டேவிட் அய்யா
டேவிட் அய்யாவைத் தெரிந்த பலர், அவர் வாழ்வையும் பணிகளையும் தெரிந்த பலர் அவுஸ்திரேலியாவில் இருக்கின்றனர். ஆனால், இங்குள்ள தமிழ் வானொலிகளில் எத்தனை அவரைப்பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொள்கின்றன….? தமிழ் அமைப்புகள் இந்த மாமனிதரை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தினாலும் எத்தனைபேர் வருவார்கள்….? அவர் வாழ்வை விமர்சனத்துடன் பார்த்தாலும் அவர் மேற்கொண்ட பணிகளை மறந்துவிட முடியாது. முருகபூபதி
-
தமிழ் ஈழக்கனவுடன் இறுதிவரை வாழ்ந்து மறைந்த டேவிட் ஐயா
எக்சைல் 1984 நடேசன் மறைந்த கட்டிடக்கலைஞரும் இலங்கை காந்தீயம் அமைப்பின் ஸ்தாபகருமான டேவிட் ஐயாவை நாம் நினைவு கூரவேண்டும். அதை எப்படி என்பதுதான்…? என் முன்னால் நிற்கும் கேள்வி. இறந்தவர்களை நினைவில் நிறுத்துவது நமது கலாச்சார விழுமியத்தை சேர்ந்தது. உறவினர்கள், பழகியவர்கள் ஒருவரது பிரிவை துயராக கருதுவார்கள். நன்றாக முதுமையடைந்து முனிவர்போல் வாழ்ந்து இறந்தவர் டேவிட் ஐயா. மரணத்தை வெல்லமுடியாத நிலையில் இதில் துயரப்படாமல் அவர் செய்தவற்றை நினைக்கவேண்டும். அவர் இலங்கைத் தமிழராக திருமணம் செய்யாது பொது…
-
அந்தரங்கங்கள் (சிறுகதை)
நடேசன் தேவகுமார (தேவ்) என்ற டேவிட்டின் கதை எமது திருமணமாகி முப்பது வருட நிறைவு நாளுக்காக பிள்ளைகளால் ஒழுங்கு செய்யப்பட்ட அந்த விருந்திற்கு, நானும் மாலினியும் சென்றபோது எதிர்பாராமல் எனது வாழ்கையில் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பாக, இரண்டு வருட காலம் என்னுடன் உறவில் இருந்த எமிலியை சந்திக்க வேண்டிய சந்தர்ப்பம் வருமென நான் எதிர்பார்க்கவில்லை. பழையனவாக நினைத்து புதைத்தது, துளிர்த்து மீண்டும் செடியாகியதுபோல், எதிர்பாராமல் நிகழும் சம்பவங்களின் கோர்வைதானே இந்த மனித வாழ்க்கை. சிட்னியில் ஜுலை மாதம்…
-
தமிழ்த்திரையுலகில் ஒரு பொம்பிளை சிவாஜி மனோரமா ஆச்சி.
நாடக உலகிலிருந்து திரையுலகம் வந்து 65 ஆண்டுகளுக்குமேல் நிலைத்து நின்ற கின்னஸ் சாதனையாளர். நடிப்பு, ஆடல், பாடல், பேச்சாற்றல் யாவற்றிலும் தனது முத்திரைகளை பதித்தவர் நிரந்தரமாக மௌனமானர் – முருகபூபதி – அவுஸ்திரேலியா திரையுலகில் நடிக்கும்பொழுது தான் இணைந்து நடிக்கப்பயந்த மூன்று கலைஞர்களைப்பற்றி நடிகர்திலகம் சிவாஜி கணேசன் ஒரு சந்தர்ப்பத்தில் கூறியிருந்தார். அம்மூவரும்: நடிகையர் திலகம் சாவித்திரி, நடிகவேள் எம்.ஆர். ராதா, சகலகலா ஆச்சி மனோரமா. இன்று இவர்கள் அனைவரும் திரையுலகை விட்டு விடைபெற்றுவிட்டனர். இறுதியாக கடந்த…
-
Let My People Go In Peace
“Today we are facing the biggest humiliation in our history. We are on the verge of being defeated in a war that has brought no benefit to our people. Our people are forced to sacrifice their lives for what? Our people are far safer and much better off if we do not have a war.…
-
போர் குற்றங்களும் விசாரணைகளும்
நாமெல்லாம் செம்மறியளாக இருப்பது எமது தவறல்ல குறைந்த பட்சம் நல்ல இடையர்களையாவது எப்பொழுது தேடுவது? நடேசன் பதினாறு வயது சிறுவனாக யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் படிக்கும் காலத்தில் இரவுநேர கடைசி பஸ்ஸ_க்காக காத்திருந்தேன். அக்காலத்தில் படபஸ் எனப்படும் அந்தபஸ் காங்கேசன்துறை வீதிவழியாகப் போகும். அதில் இறங்கி விடுதிக்கு செல்லவேண்டும். அந்த இரவில் தனித்து நிற்பதால் பயம்வேறு வாட்டியது. அப்பொழுது சாறமணிந்த இருவர் அதனை உயர்த்தி கட்டியவாறு ஒருவரோடு ஒருவர் தர்க்கமிட்டனர். இருவரது வாரத்தைகளிலும் அதிகம் தூசணம் மற்ற தமிழ்…