பகுப்பு: Uncategorized
-
இலக்கியவாதி, சமூகப்பணியாளர் திருமதி அருண். விஜயராணி
ஈழத்து இலக்கிய உலகில் 1970 இல் பிரவேசித்த கலை இலக்கியவாதியும் சமூகப்பணியாளருமான எழுத்தாளர் திருமதி அருண் விஜயராணி, நேற்று ஞாயிற்றுக்கிழமை 13 ஆம் திகதி மதியம் அவுஸ்திரேலியா மெல்பனில் காலமானார். இலங்கை வானொலியிலும் அவுஸ்திரேலியா தமிழ் வானொலிகளிலும் நிகழ்ச்சிகளை நடத்தியும் உரைகள் நிகழ்த்தியும் சிறுகதைகள் கட்டுரைகள் பத்தி எழுத்துக்கள் எழுதியும் தமிழ் கலை இலக்கியப்பங்களிப்பு நல்கியவரான அருண்.விஜயராணி அவுஸ்திரேலியாவில் தமிழர் ஒன்றியம் – தமிழ் இலக்கிய கலைச்சங்கம் மற்றும் இலங்கை மாணவர் கல்வி நிதியம் ஆகியனவற்றில் பெரும்…
-
சிங்காரச் சென்னை சீரழிந்தது எப்படி???? – கலாநிதி சந்திரிகா சுப்ரமண்யன்
Courtesy BBC மா மழை போற்றுதும்! மா மழை போற்றுதும்! என்ற மழையை போற்றிய தமிழர் வரலாற்றில்மழை பிழைத்த காரணத்தினால் சென்னை பேரிடருக்கு உள்ளாகி விட்டது.ஒரு நாட்டின்வளம் அதன் நீர் வளத்தினைச் சார்ந்தது. மாடு கட்டி போரடித்தால் மாளாது என்று யானை கட்டிபோராடிக்கும் மரபாக தஞ்சை மண் இருந்தது.வான் பொய்த்தாலும் தான் பொய்க்காது எனக்காவிரித் தாய் திகழ்ந்தாள்..ஆனால் இந்திய மாநிலங்களில் பெரும் தண்ணீர்த் தட்டுபாட்டைசந்தித்து வரும் மாநிலம் தமிழகமாகும். காரணம் வறட்சி, பருவ மழை பொய்த்த வானம்,…
-
நிலவு குளிர்சியாக இல்லை.
நடேசன். கனடா எழுத்தளர் மாரக்கிரட் அட்வூட்‘ மற்றவர்கள் கதைகளை நாம் படிப்பதன் மூலம் நாங்கள் நல்ல கதை சொல்லிகளாக மாறுகிறோம்’ என்றார். கதை சொல்வது காலம் காலமாக ஒவ்வொரு சமூகத்திலும் இருந்தது. அச்சு எழுத்துகள் வருவதற்கு முன்பு கதை சொல்லலே எமது ஊடகம். சிறுகதை ஒரு இலக்கியவடிவமாக வரும் போது அங்கு பாத்திரம், மொழி ,உணர்வு, மற்றும் நோக்கம் என பல விடயங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது சாதாரணமான குடிசையாக இருந்தது அழகியவீடாக வருவதற்கு ஒத்தது. நமது சமூகத்தில்…
-
சிங்களவர்கள் மட்டுமா இனவாதிகள்?
நடேசனின் நேர்காணல் – கேள்விகள் அனோஜன் பாலகிருஸ்ணன். நன்றி ஆட்காட்டி தாங்கள் பிறந்துவளர்ந்த சூழல், இளமைவாழ்க்கை,கல்விப்பின்புலம், இலக்கியத்தின் மீதான பிரியத்தை அதிகரிக்க எவ்வாறு ஒத்தாசை செய்தது? தங்கள் குடும்பத்திலும் எழுத்தாளர்கள்,கவிஞர்கள் உண்டா? சிறு வயதில் கண் தெரியாத பாட்டாவிற்கு வீரகேசரி, கல்கி உரக்க வாசிப்பது எனது கடமையில் ஒன்று, அதற்கு வேதனமும் இருந்தது. இதன் பின்பு நானாக கதைப்புத்தகங்கள் வாசிப்பது அதிலும் யாழ்ப்பாண நூல்நிலையத்தில் உள்ள ஏராளமான கதைப் புத்தகங்களை வாசித்தேன். முக்கியமாக பல்கலைக்கழகப் பரீட்சை எடுத்துவிட்டு…
-
மெல்பனில் நான்கு நூல்களின் வாசிப்பு அனுபவப்பகிர்வு
முருகபூபதி கல்லிலிருந்து கணினி வரையில் அனைத்துமொழிகளும் பயணித்துக்கொண்டிருக்கின்றன. இனிவரும் யுகத்தில் மொழிகள் எதில் பதிவாகும் எனக்கூறமுடியாது. ஆனால் மொழிகள் வாழும். மறையும். வாசகர்களிடத்திலதான்; மொழியின் வாழ்க்கை தங்கியிருக்கிறது. அதனால்தான் வாசிப்பு மனிதனை முழுமையாக்கும் என்று எமது முன்னோர்கள் சொன்னார்கள். ஆனால் இந்த நூற்றாண்டில் மக்கள் வாசிப்பதற்காக தேர்ந்தெடுத்துள்ள சாதனங்கள் இலகுவாகிவிட்டது. அவற்றில் படிக்கலாம். பார்க்கலாம். ரசிக்கலாம். சிரிக்கலாம், கோபிக்கலாம். உடனுக்குடன் பதில்களையும் பதிவேற்றலாம். ஆயினும் அச்சில் வெளியாகும் படைப்புகளுக்கும் பத்திரிகை இதழ்களுக்கும் மதிப்பு இன்னமும் குறையவில்லை. இணையத்தளங்கள்…
-
ஆழியாள் – மதுபாஷினி
திரும்பிப்பார்க்கின்றேன் திருகோணமலையிலிருந்து அவுஸ்திரேலியாவரையில் சர்வதேசப்பார்வையுடன் பயணித்த ஆழியாள் மதுபாஷினி அவுஸ்திரேலியாவின் ஆதிக்குடிகளின் துயர்மிகு வாழ்வின் பக்கங்களை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் தமிழர் வாழ் நிலங்களில் புதிய பரிணாமமாக ஆறாம் திணையை ஆய்வுக்குட்படுத்தும் ஆளுமை முருகபூபதி பால்ய காலத்தில் அவுஸ்திரேலியாவை அப்பிள் பழங்களின் ஊடாகத்தான் அறிந்துகொண்டேன். வெளியே வர்த்தகத்திற்கு செல்லும் அப்பா, திரும்பிவரும்பொழுது வாங்கிவரும் அப்பிள் பழங்களை அவுஸ்திரேலியா அப்பிள் என்றுதான் அறிமுகப்படுத்துவார். எனது மகனுடன் அவனது பதினோரு வயதில் இலங்கை சென்றபொழுது, கொழும்பு புறக்கோட்டையில் நடைபாதை வர்த்தகர்கள், ”…
-
வரவிருக்கும் எனது புத்தகத்திற்கான முன்னுரை
தமிழ் இலக்கியத் தோட்டத்தில் எஸ்.பொ. என்ற பொன்னுத்துரை நீண்டு பருத்து அறுபது வருடங்கள் ஓங்கிவளர்ந்து கிளைவிட்ட வேப்பமரம். அவரால் வெளிவந்த பிராணவாயுவைச் சுவாசித்து எழுதத் தொடங்கியவர்களில் நானும் ஒருவன். படிப்பறிவற்ற மத்துயுவை ஒரு தேவதை கைகளைப் பிடித்து விவிலியத்தை எழுதுவதாக இத்தாலியில் புகழ்பெற்ற ஓவியம் ஒன்று உண்டு. அதேபோல என் போன்றவர்களின் கையைப் பிடித்து இலக்கியத்தின் ஏடு தொடக்கியவர் அத்துடன் பல வருடங்கள் துரோணராய் இருந்தார் அவர். அவுஸ்திரேலியாவில் உதயம் பத்திரிகை நடத்திய காலத்தில் நான் எழுதிய…
-
அப்பாவிகளைக் கொல்லும் பயங்கரவாதம்
எக்ஸைல் 1984 நடேசன் இராசா ஒருவர் தமது ஊரில் தான் பார்த்திராத பழத்தை கொண்டு வந்து காண்பித்தால் இளவரசியை திருமணம் செய்துவைக்கவிருப்பதாகவும், ஆனால் அந்தப்பழம் பற்றி நான் அறிந்திருந்தால் அதையே கொண்டு வந்தவனின் வாயில் திணித்து அனுப்புவதாகவும் அறிவித்தார். பலர் திராட்சை, வாழை என பலதரப்பட்ட பழங்களைக் கொண்டுவந்து காண்பித்தபோது, அவைகளை தான் அறிந்திருந்திருப்பதாக சொன்ன இராசா அவர்களது வாய்களில் அவற்றைத்திணித்து அனுப்பினார் . அவர்கள் சிரித்தபடியே சென்றார்கள். ஒருவன் அன்னாசிப்பழத்தை கொண்டுவந்தான் அப்பொழுதும் இராசா இதை…
-
வாசிப்பு அனுபவப்பகிர்வு
அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் ஆலோசனைக்கூட்டம் – வாசிப்பு அனுபவப்பகிர்வு அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் நடப்பாண்டுக்கான (2015 – 2016) முதலாவது ஆலோசனைக்கூட்டமும் வாசிப்பு அனுபவப்பகிர்வு நிகழ்ச்சியும் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 05-12-2015 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 3.00 மணியிலிருந்து இரவு 7.00 மணிவரையில் மெல்பனில் Mulgrave Neghbourhood House ( 36 – 42 Mackie Road, Mulgrave – Vic – 3170) மண்டபத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், புதிய ஆண்டில் சங்கம் மேற்கொள்ளவுள்ள…
-
எஸ். பொன்னுத்துரையின் வரலாற்றில் வாழ்தல் – நடேசன்.
27-11-2015 ல் மறைந்த இலங்கை தலைமை இலக்கியவாதி எஸ் பொவின் மறைவை நினைவு கூர்ந்து அவரது ‘வரலாற்றில் வாழ்தல்’ என்ற சுயசரிதை நூலை முன்வைத்து வெளிவரும் கட்டுரை இரண்டாயிரம் பக்கங்கள் கொண்ட எஸ் பொன்னுத்துரையின் வரலாற்றில் வாழ்தல். இரண்டாயிரம் பக்கங்கள் கொண்ட இரண்டு பாகங்களையும் நான் ஏன் படிக்கவேண்டும்? படித்தால் என்னிடத்தே வைத்திராமல் அதைப் பற்றி உங்களுக்கு ஏன் சொல்லவேணடுமென்பது என்ற முக்கியமான கேள்விக்கு நான் பதில் தரவேண்டும். பதிலை எனது கூற்றாகச் சொன்னால் அது…