பகுப்பு: Uncategorized
-
என் பர்மிய நாட்கள்-1.
நடேசன் இலங்கைக்கு மிக அருகில் இருக்கும் தேசம் மட்டுல்ல கலாச்சாரம், மதம் என்பவற்றால் மிகவும் நெருங்கிய தேசம் (மியான்மார்) எனப்படும் பர்மா. பர்மாவை நினைத்தவுடன் இராணுவ அரசுக்கு எதிராக போராடி வருடக்கணக்கில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த பெண்மணி அங் சான் சூ கி யும் நினைவுக்கு வருவார். தற்போது ராக்கின் மாநிலத்தில் இருந்து அகதிகளாக வந்து வங்காளக்கடலிலும், தாய்லாந்திலும் துன்பப்படும் ரொகிங்கா முஸ்லீம் மக்களை நினைக்கத் தோன்றும். இதற்கும் அப்பால் பர்மாவில் இருந்து வெளியேறிய தமிழர்களால் சென்னையில் உருவாகிய…
-
மெல்பனில் தென்னாசிய கவிஞர்களின் சங்கமம்
கண்காட்சியும் கவிதா நிகழ்வும் இலங்கை – இந்தியா – பாக்கிஸ்தான் – பங்களாதேஷ் – நேபாளம் – பூட்டான் – மாலைதீவு – ஆப்கானிஸ்தான் முதலான எட்டு நாடுகளின் பிரதிநிதிகள் அங்கம் வகிக்கும் SAPAC (South Asian Public Affairs) என்னும் தென்னாசிய விவகாரங்களுக்hகன அமைப்பு கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மெல்பனில் தொடங்கியது. பல்லின கலாசார நாடாக விளங்கும் அவுஸ்திரேலியாவில் இதுபோன்ற பல தேசிய அமைப்புகள் இயங்குகின்றன. பொருளாதாரம் – விளையாட்டு –…
-
அவுஸ்திரேலியத்தமிழ் இலக்கிய கலைச்சங்கம்
அகில உலக மகளிர்தினத்தை முன்னிட்டு எமது அவுஸ்திரேலியத்தமிழ் இலக்கிய கலைச்சங்கம், எதிர்வரும் மார்ச் மாதம் 06 ஆம் திகதி ( 06-03-2015) ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிமுதல் மெல்பனில் பிரஸ்டன் நகர மண்டபத்தில் கருத்தரங்கு – கவியரங்கு – விவாத அரங்கு – நினைவரங்கு முதலான அமர்வுகளில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிரும்பும் எழுத்தாளர்கள் – கலைஞர்கள் – பெண்ணியச்சிந்தனையாளர்கள் மற்றும் அன்பர்களின் வரவை பெரிதும் எதிர்பார்க்கின்றோம். அண்மையில் மறைந்த பெண்ணிய ஆளுமைகளான படைப்பாளிகள் அருண்…
-
68 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு
நடேசன் இலங்கை சுதந்திரமடைந்த 68 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இலங்கையர்களாகிய நாம் தமிழர்கள், சிங்களவர்கள், இஸ்லாமியர்கள் என்ற எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாயினும் நமது தாய்நாட்டில் உருவாகும் ஒவ்வொரு அதிர்வுகளும் எல்லோரையும் இன, மத பாகுபாடு இன்றி பாதிக்கிறது என்பதுதான் வரலாற்றில் படித்த உண்மை. இயற்கையின் பேரழிவு 2004 இல் நடந்த சுனாமி. அது தெற்கு மற்றும் கிழக்கு கரையோர மக்களை ஆயிரக்கணக்கில் காவு கொண்டது. அந்த சுனாமி மனிதர்களின் சக்திக்கு அப்பாற்பட்ட இயற்கையின் சீற்றம். இதைவிட…
-
‘தவறான விமர்சனங்கள் நூலுக்கான வரவேற்பை குறைத்துவிடுகின்றது’
நேர்காணல்: எஸ்.ஜீவா ஒரு புத்தகம் நன்றாக இருந்தாலும் எல்¬லோ¬ரும் விரும்பும் அளவுக்கு இருக்கப்போவதில்லை. அதாவது எல்லோரும் விரும்பும் வகையில் அனைத்தும் முழுமையாக இருக்குமென கூற முடியாது. ஒரு புத்தகம் பலரின் கைகளில் சேர்ந்த பின்பு அதனை விமர்சிக்கலாம். அதுவும் குறிப்பிட்ட புத்தகத்தில் உள்ள விடயங்களை மாத்திரம் விமர்சிக்கலாமே தவிர அதற்கு அப்பாற்பட்ட விடயத்தை விமர்சிப்பதைத் தவிர்ப்பது சிறந்தது. இது காலங்காலமாக வலியுறுத்தப்பட்டு வந்தாலும் நடைமுறைப்படுத்தப் படுவதில்லை. பிழையான விமர்சனங்கள் மூலம் புத்தகத்திற்கான வரவேற்பு முற்றாக தடைப்பட்டுவிடுகிறது. இலங்கையில்…
-
மெல்பனில் அமரர் அருண். விஜயராணி நினைவரங்கு
மெல்பனில் அமரர் அருண். விஜயராணி நினைவரங்கு விஜயதாரகை வெளியீடு அவுஸ்திரேலியாவில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக கலை இலக்கிய சமூகப்பணிகளில் ஈடுபட்ட எழுத்தாளரும், வானொலி ஒலிச்சித்திர பிரதியாளருமான, கடந்த டிசம்பர் மாதம் 13-12-2015 ஆம் திகதி மறைந்த திருமதி அருண். விஜயராணியின் நினைவாக அன்னாரின் குடும்பத்தினர் ஒழுங்குசெய்துள்ள நினைவு அரங்கு அஞ்சலிப்பகிர்வு நிகழ்ச்சி 31-01-2016 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மெல்பனில் பிரஸ்டன் நகர மண்டபத்தில் மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்நிகழ்வில் அமரத்துவம் எய்திய அருண். விஜயராணியின் உருவப்படத்திற்கு…
-
வாழும் சுவடுகள்
Ashroff Shihabdeen · புதிய பிடித்த நூல்களை இப்போதெல்லாம் ஒரே மூச்சில் நான் படித்து முடித்து விடுவதில்லை. ஒவ்வொரு அல்லது இவ்விரு அங்கமாக ரசித்து ரசித்துப் படிக்கிறேன். அப்படித்தான் டாக்டர் நடேசனின் வாழும் சுவடுகள் நூலையும் வாசித்துக் கொண்டிருக்கிறேன். மருத்துவத் தொழில் ரீதியான இலகுபடுத்தப்பட்ட அதேவேளை சுவை குன்றாத எழுத்துக்கு டாக்டர். முருகானந்தனையும் டாக்டர் நடேசனையும்தான் என்னால் குறிப்பிட்டுச் சொல்ல முடியும். அடிப்படையில் இருவரும் சிறந்த படைப்பாளிகளாக இருப்பது ஒரு முக்கியமான காரணம் என்பேன். மிருக வைத்தியரான…
-
சேரனின் வாதத்தில் ஓட்டைகள் – நடேசன்
இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு நடந்துள்ளது இனப்படுகொலைதான் என்பது எனது வாதம் – சேரன்:- courtesy globaltamilnews.net இந்த மக்கள் தீர்ப்பாயத்தில் இனப் படுகொலை தொடர்பான எனது கருத்துக்களையும் வாதங்களையும் முன்வைக்க வாய்ப்பு வழங்கியமைக்கு எனது மனமார்ந்த நன்றி. என்னுடைய வாதங்களின் மையப்பொருள், சமூகவியலாளர்களும் மானுடவியலாளர்களும், இனப்படுகொலை என்றால் என்ன எத்தகைய எண்ணங்களைக் கொண்டிருக்கிறார்கள்? இந்த எண்ணங்கள் எவ்வகையில் ஈழத் தமிழ் இனப்படுகொலையை ‘இனப்படுகொலை’ என வரையறை செய்ய உதவக்கூடும்? என்ற இரு கேள்விகளையும் ஒட்டியதாக அமைந்துள்ளது. மூன்று வௌ;வேறான,…
-
பாலச்சந்திரனின் மணிவாசக அணியமுதம்.
நடேசன் மொழியில் கடுமையும் சுவாரசியமற்ற உரைநடையுமே சமயநூல்களின் பொதுவான தன்மை என்பது எனது அபிப்பிராயம். இதனால் அவற்றை வாசிப்பது சிறுவயதிலிருந்து எனக்குத் தண்டனையாகத் தெரியும். கட்டாயத்திற்காக பாடசாலைத் தேர்வில் படித்துவிட்டு அதன்பின்பு அதன்பக்கம் தலைவைத்துப் படுக்காமல் இருப்பது சாலச்சிறந்தது என்ற மனப்பான்மையில் ஊறி பிற்காலத்தில் திராவிட பகுத்தறிவுவாதம், கம்மியூனிசம் பின்பு சோசலிசம் பின்பு செக்கியூரியல் ஏதிசம் என பரிணாமமடைந்த என் போன்ற மத நம்பிக்கையற்ற ஒருவர் மதத்தின் ஆன்மீகத்தைப் புரிந்து கொள்ளவும் அதன் இலக்கிய நயத்தை அனுபவிக்கவுமே…
-
வாழும் சுவடுகள் – நூலறிமுகம் – க. நவம்
டாக்டர் என். எஸ். நடேசனின்‘வாழும் சுவடுகள்’ நூலறிமுகம் -க. நவம்- ‘உலகில் சொல்ல வேண்டியதை எல்லாம் மூவாயிரம் வருஷங்களுக்கு முன்பே கங்கைக் கரையிலும் காவிரிக் கரையிலும் சொல்லி முடித்துவிட்டதாக மமதை கொண்டிருக்கும் அரிசி உணவை உட்கொள்ளம் பிராணிகளும் தங்கள் மனோரதத்தை செலுத்தியாவது தேசயாத்திரை செய்து பார்க்க, பிறநாட்டு இலக்கியப் பயிற்சி அளிப்பதே இத்தொகுப்பின் நோக்கமாகும்’. புதுமைப்பித்தன் இவ்வாறு ஒருமுறை மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுதி ஒன்றுக்கு வழங்கிய முன்னுரையில் குறிப்பிட்டிருந்தார். தான் வாழும் கிணற்றுக்குள்ளேயே முழு உலகையும் அமுக்கிவிட்டதாக…