
கரவை மு. தயாளன்
நோயல் நடேசனின்பண்ணையில் ஒரு மிருகம் நாவல் இப்போது படித்து முடித்தேன்.
ஒரே மூச்சில் படித்து முடித்தேன்.
சில விடயங்களை நாசூக்காகச் சொல்லும் விந்தையைக் கற்றுக்கொண்டேன்.
சலிப்பில்லா நகர்வு.
நிஜ மிருகங்கள்பற்றிய அறிவூட்டல் அற்புதம்.
படிக்கும்போது லண்டனைவிட்டு அந்தப் பண்ணைக்குப் போய்விட்டேன். பண்ணைத் தொழிலாளர்களுடன் நீங்கள் மட்டுமல்ல நானும் தோழமை கொண்டுவிட்டேன்.
ராமசாமிக்கு நான் மிக நெருக்கமாகிவிட்டேன். கற்பகம் மனதில் வாழத் தொடங்கிவிட்டாள்.
நெருடியவை:
இராமசாமி சிலவேளை ராமசாமி என வந்துள்ளது.
கதை முடிவுக்கு வந்தமை ஒரு ஆவியின் வாக்கு மூலத்தால் உள்ளமை.
ஆவிப் பிரசன்னம் மறுக்கப்படாமல் மாக்சின் சிந்தனைபற்றி ஆங்காங்கு கூறப்பட்டமை முற்றிலும் முரண்பாடாக உள்ளது.
மேஸ்திரி பாத்திரம் தண்டனை பெறாது கற்பகம் சிவப்பியின் குட்டியாகித் தண்டனை கொடுத்தமை ஏற்றுக் கொள்ள முடியாத யதார்த்தம்.
விறுவிறுப்பான ஒரு நாவல். ஆவி சம்பந்தப்பட்ட விடயங்கள் ஆய்வுக்குரியனவே. ஆசிரியரின் அரசியல் பின்புலம்தான் இது பற்றிக் கூறலாம் .
நாவல் என்பது களத்தோடு ஒன்றி களமாகவே மாறிவிடவேண்டும். நாவல் என்பது பல உத்திகளோடு பயணித்தாலும் சம்பவங்கள் யதார்த்தத்திற்கு வெளியில் வருவது என்னுடைய மக்கள் இலக்கியம் பற்றிய கருத்தோடு ஒத்துப் போகவில்லை. இந்த வகையில் இந்த நாவல் களத்தோடு இறுகப் பிணைந்திருந்தாலும் சம்பவங்கள் வெளியில் நிற்கின்றன. பண்ணையை மறக்க முடியாதளவுக்கு நாவல் அமைந்துள்ளது.
இது நாவலாசிரியனின் வெற்றியாகும்.
பின்னூட்டமொன்றை இடுக