விரைவில் 4 வது பதிப்பு: கானல்தேசம்

கானல் தேசம் நாவல் இதுவரை மூன்று பதிப்புகள் வெளிவந்து முடிந்து விட்டதாகக் காலச்சுவடு பதிப்பகம்   அறிவித்திருந்தார்கள் . 4வது பதிப்பு விரைவில் வெளிவரும். 

ருவிட்டர்ஸ் பேசிலும் கிளப் கவுசிலும் எனது புத்தகத்தை பிரபலமாக்கிய சகோதரிகள்,  ராஜேஸ்வரி  பாலசுப்பிரமணியம்  தாமரைச்செல்வி மற்றும் பிரிஸ்பேன் பார்த்திபன், நந்தா,  கவிஞர் கருணாகரன் , தோழர் சுகுவுக்கு   நன்றி. நம் தமிழில் பேசிய நண்பர் சத்தார், முருகபூபதி மற்றும் Haseen Atham நண்பருக்கு நன்றிகள்.

அடுத்த மாதத்தில் எழுத்தாளர் சிவகாமி(IAS) முன்னுரையுடன்  “பண்ணையில் ஒரு மிருகம்” என்ற நாவல் தமிழகத்தைக் களமாக- சாதி , சிறுவர் பாலியல் சுரண்டல் என்பவற்றைக்  கருவாகக்  கொண்டது, காலச்சுவடு வெளியீடாக வெளிவரும்.  

இப்பொழுது நான் எழுதுவது குடும்ப வன்முறையைக் கருப்பொருளாகியது. அத்துடன் எனது மனத்தில் இருந்த பாரமான விடயங்களை கீழே வைத்து விடுவேன். இறுதி காலத்தில் சாதாரண மனிதனாகிவிடலாம்.

அன்புடன் நடேசன்.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.