கானல்தேசம்

Ⓜ️ G _ கிஷ்னா ♨️ rated it it was amazing

ஈழத்தில் போர் முடிந்த பின்னர் வெளிவந்த இலக்கியபடைப்புகளில் அநேகமானவை விடுதலைபுலிகளின் சார்பாக, உண்மையை முற்றிலும் புறம்தள்ளி எழுதபட்டவை . அவற்றில் இருந்து நோயல் நடேசனின் #கானல்தேசம் வித்தியாசபடுகிறது.

புனைவுதான் என்றாலும், வெளிநாட்டு அரசுகள் எவ்வாறு இப்போரின் பின்நிலையில் இயங்கின. அவர்களது உளவு நிறுவனங்கள் எங்கெல்லாம், எவ்வாறு ஊடுருவி இருந்தன, எமது பொடியளின் சர்வதேச வலையடைப்பு எவ்வாறு இயங்கியது. உள்நாட்டிலும் எங்களுக்கு தெரியாமல் கண்கட்டி வித்தையாக, இப்படியான காரியங்களை எல்லாம் செய்தார்களா என ஆச்சரியப்பட வைத்தது.

பொடியள் விடுதலைப் போருக்கு தேவையான பணத்தில் ஒரு பகுதியை வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிடமிருந்து எவ்வாறு திரட்டியனார்கள். தமிழர் ஒருங்கிணைப்புக் குழுக்கள் அதற்கு எவ்வாறு உதவின போன்ற விடயங்களையும் இந் நாவல் பேசுகிறது.

வெளிநாடுகளில் சேகரிக்கப்பட்ட போது அவ்வாறு பணம் சேகரிப்பதற்கு உதவியவர்களுக்கு கொமிசன், இனாம் போன்றவை வழங்கப்பட்டதை அறிந்தபோது எமது இனப் போரும் ஒரு வர்த்தக சந்தையாக மாறியிருந்தது என்ற கசப்புணர்வே ஏற்பட்டது.

https://www.goodreads.com/book/show/50225118?fbclid=IwAR0GJ3GaQryiITmhbaBOg1Xte-qhJWgyDMD5n03j-JW7xacKECXk1BiEJtc#

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.