உணர்ச்சியூட்டியவரின் சாதனை

எக்ஸோடஸ் இரண்டாம் அங்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் உணர்ச்சிக்(?) கவிஞர் சிறையிலிருந்து வந்தபின்னர் எங்கள் ஊர் நீர்கொழும்பில் அவரது உணர்ச்சிகளினால் பாதிக்கப்பட்ட சிலர் இரத்தத்திலகமிட்டு வரவேற்றனர். அந்தச்செயலை நாம் கண்டித்தோம். தெய்வேந்திரம் என்ற நபரும் காசி ஆனந்தனுக்கு தனது கரத்தைக்கீறி இரத்தத்திலகம் வைத்தார். இந்தப்பிரகிருதி பேராசிரியர் கைலாசபதியை நாம் அழைத்தபொழுது அந்தக்கூட்டத்திற்கு கல்லெறிந்தார். பின்னர் எனது நண்பர்கள் மூவரை கத்தியால் குத்தியும் வாளால் வெட்டியும்விட்டு தலைமறைவானார். பொலிஸார் தேடியதும் யாழ்ப்பாணம் சென்று பதுங்கியிருந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டார். வடமராட்சியில் ஒரு கூட்டுறவுச்சங்கக்கடையை கொள்ளையடித்துவிட்டு தமிழகம் சென்று தலைமறைவானார். அங்கு போதைவஸ்து கும்பலுடன் இணைந்து சமூகவிரோதச்செயல்களில் ஈடுபட்டு இறுதியில் இனம்தெரியாத ஒரு கும்பலினால் படுகொலைசெய்யப்பட்டு அநாதையாக உயிரிழந்தார்.
உணர்ச்சிக்கவிஞர் தனது அரசியல் எதிரிகளை இயற்கையாக சாகவிடவேண்டாம் எனவும் பேசியவர். விடுதலைப்புலிகளின் மாமனிதர் விருதும் பெற்றவர். அவரது சாதனைகளின் பட்டியல் நீளமானது.
முருகபூபதி

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.