மெல்பேனில் வாழும் சமூக சேவையாளரும் தமிழ் இலக்கியவாதியுமான் திருவாளர் லெட்சுமணன் முருக பூபதின் மணிவிழாவையொட்டி அவரது நண்பர்கள் அவரது சேவைகளை பாராட்டும் முகமாக வரும் July 31(2011)ஞாயிறுகிழமை விருந்து நிகழ்சியை ஒழுங்கு செய்கிறார்கள்.
கடந்த இருபத்தி மூன்று ஆண்டுகளாக இலங்கையில் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆதரவு அற்ற குழந்தைகளை இலங்கை மாணவர் நிதியம் ஊடாக கல்வி பெற ஊக்கு சக்திகாக இருந்து வருபவரும் மற்றும் அவுஸ்திரேலிய தமிழர் அகதிகள் கழகம் அவுஸதிரேலிய தமிழர் ஒன்றியம் ஊடாக பல வருடங்களாக சேவையாற்றியவர் திரு முருக பூபதி என்பது குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலியாவில் தமிழ் இலக்கியத்தை வளர்க்க முதல் முதலாக அவுஸதிரேலிய கலை இலக்கியசங்கத்தை உருவாக்கி பல இளம் எழுத்தாளரை ஊக்குவித்ததுடன் உதயத்தின் இலக்கி பகுதியையும் பலகாலமாக நடத்தியவர்
இவர் இலங்கை அரசின் தேசிய விருதான சாகித்திய விருதை இரு முறை பெற்ற இலக்கியவாதி பலகாலமாக பத்திரிகையாளராக இருந்தவர் என்பதும் குறிபிடத்தக்கது.
கடந்த ஜனவரியில் இலங்கையில் நடை பெற்ற சர்வதேச தமிழ் எழுத்தாளர் விழாவை பல கரிப்புகளுக்கு மத்தில் நடத்துவதில் முன்னணி வகித்தவரில் முருகபூபதியும் ஒருவராகும். இவரின் சேவைகளை மெல்பேண் மக்கள் கௌரவிப்பதாக இந்த நிகழ்சசி அமைகிறது.
இந்த நிகழ்சியில் பல எழுத்தாளர்களும் பேராசிரியர்களும் அவுஸ்திரேலியாவின் பல பகுதியில் இருந்து கலந்து கொள்ளவிருக்கிறார்கள்
தகவல் நோயல் நடேசன் -uthayam@optusnet.com.au
பின்னூட்டமொன்றை இடுக