தேனீ இணைய இதழின் ஆசிரியர்

ஜெமினி கெங்காதரன் ஓராண்டு நினைவேந்தல்

22-01- 2022 ) சனிக்கிழமை

கொரோனோ  பெருந்தொற்று  உலகடங்கிலும் உக்கிரத்தாண்டவம் ஆடத் தொடங்கிய  காலப்பகுதியில்,   கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் திகதி தேனீ இணைய இதழின் ஆசிரியர் ஜெமினி கெங்காதரனையும்  அது  ஜெர்மனியில் காவுகொண்டுவிட்டது.

புங்குடுதீவில் 1965 ஆம்  ஆண்டு  கணேஷ் – மங்கையற்கரசி தம்பதியரின் புதல்வனாகப்பிறந்த ஜெமினி கெங்காதரன் யாழ். இந்துக்கல்லூரியின் முன்னாள் மாணவர்.

1980 களில்  அய்ரோப்பாவுக்கு புலம்பெயர்ந்த  அவர்,  1989 ஆம் ஆண்டு தொடக்கத்தில்  நண்பர்களுடன் இணைந்து தேனீ என்ற சிற்றிதழை ஆரம்பித்தார்.  கலை, இலக்கிய, அரசியல், சமூக அக்கறை சார்ந்த படைப்புகளுக்கு  குறிப்பிட்ட இதழ் களம் வழங்கியது.

அதனையடுத்து  அக்கினி என்ற இதழையும் சிறிதுகாலம் நடத்தினார்.  அதன்பின்னர் தேனீ இணைய இதழை தொடங்கி தினமும்  பல வருடங்களாகப் பதிவேற்றினார்.

தேனீ இணைய இதழை தனிமனிதராக  அர்ப்பணிப்போடு வெளியிட்டு,  மாற்றுச்சிந்தனைகளுக்கும்   சிறந்த  களம் வழங்கினார்.  கலை, இலக்கியம் மற்றும் அரசியல் ஆய்வுத் தொடர்களுக்கும் பயனுள்ள நேர்காணல்களுக்கும் மொழிபெயர்ப்புகளுக்கும் களம் வழங்கி,  வாசகர்களிடம் சேர்ப்பித்தவர். அதற்காக எந்த ஊதியமும் பெறாமல் கருத்துக்களையும் எதிர்வினைகளையும் விமர்சனங்களையும் மாத்திரமே ஏற்றுக்கொண்டவர்.

தேனீயில்  வெளிவரும் ஆக்கங்களுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பு என்றவுணர்வுடன்  ஊடக தர்மத்தை பின்பற்றி,  பாரதூரமான விமர்சனங்கள்  வரும்போது  அவற்றை உரியவர்களுக்கே அனுப்பி அவர்களின் கவனத்திற்குட்படுத்தி ஊடக தர்மத்தின் கண்ணியத்தையும் காப்பாற்றினார்.

ஆங்கில ஊடகங்களில் சிறந்த அரசியல் ஆய்வுகள் வெளிவரும் பட்சத்தில் அவற்றை தெரிவுசெய்து இலங்கைக்கு அனுப்பி மொழிபெயர்ப்பாளரிடமிருந்து மொழிமாற்றம் செய்து தருவித்து, தானே கணினியில் பதிவுசெய்து வெளியிட்டார்.

தனது குடும்பத்திற்காக இரவுநேர வேலைக்குச்சென்று,  அதிகாலை வீடு திரும்பி, உறங்காமல் விழித்திருந்து தேனீயை பதிவேற்றிவிடுவார்.

உலகடங்கிலும் வாழும்  கலை, இலக்கிய ஆளுமைகள் பலரைப்பற்றிய ஆக்கங்களும் தேனீயில் வெளியாகியிருக்கின்றன.

ஜெமினி கெங்காதரனின் ஓராண்டு நினைவேந்தல் நிகழ்வு இம்மாதம் 22 ஆம் திகதி சனிக்கிழமை மெய்நிகரில் நடைபெறவிருக்கிறது.

இலங்கையிலிருந்து எழுத்தாளர் – ஊடகவியலாளர்களான டான் தொலைக்காட்சி எஸ். எஸ். குகநாதன்,  மற்றும் கருணாகரன், அவுஸ்திரேலியாவிலிருந்து இலக்கியவாதி லெ. முருகபூபதி, பிரித்தானியாவிலிருந்து அரசியல் ஆய்வாளர்  திரு. விஸ்வலிங்கம் சிவலிங்கம் ஆகியோர் நினைவுரைகளை நிகழ்த்துவர்.

எழுத்தாளர் நடேசன் இந்நிகழ்வை  அவுஸ்திரேலியாவிலிருந்து  ஒருங்கிணைத்துள்ளார்.  

22-01- 2022 சனிக்கிழமை

அவுஸ்திரேலியா நேரம் இரவு 10-00 மணி

           இலங்கை – இந்திய நேரம் நேரம்  மாலை 4-30 மணி

                    பிரித்தானியா  நேரம்  முற்பகல் 11-00 மணி

மெய்நிகர் இணைப்பு: 

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/88645005608?pwd=M1J5TS9TR3ZUbzVxZVVMQlcySFBJZz09

Meeting ID: 886 4500 5608
Passcode: 334900

——  000 ——

தகவல் : முருகபூபதி

தேனீ இணைய இதழின் ஆசிரியர்” அதற்கு 2 மறுமொழிகள்

  1. Sorry, WHEN is this Zoom meeting???

    >

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: