Month: செப்ரெம்பர் 2021
-
அவுஸ்திரேலியா -மொழிபெயர்ப்புகள்
‘எஸ்.பொ’ : ஆபிரிக்க இலக்கியங்களை தமிழுக்குத்தந்த முன்னோடி மூன்று நூல்களை மொழிபெயர்த்த ‘ நல்லைக்குமரன் ‘ குமாரசாமி முருகபூபதி ஆங்கிலம் சர்வதேச மொழி. அதனால் ஏராளமான பிறமொழி இலக்கியங்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுகின்றன. ருஷ்ய இலக்கிய மேதைகள் லியோ டோல்ஸ்ரோய், மாக்ஸிம் கோர்க்கி ஆகியோரினதும் படைப்புகளின் ஆங்கில மொழிபெயர்ப்பின் ஊடாகவே சிலர் அவற்றை தமிழுக்குத்தந்தனர். பல மேனாட்டு மொழிகளை தெரியாத தமிழர்கள் அவற்றின் தமிழ் மொழிபெயர்ப்பின் ஊடாகவே அந்தநாட்டு இலக்கியங்களை படித்தனர். தமிழர் புலம்பெயரத் தொடங்கியபின்னர், […]
-
இன உறவுக்கு; மடுள்கிரியே விஜேரத்ன
தமிழ் – சிங்கள இலக்கிய மொழிப் பரிவர்த்தனைக்கு பாலம் அமைத்த மடுள்கிரியே விஜேரத்ன முருகபூபதி “ இன நல்லிணக்கத்திற்காக இலங்கையிலும் வெளிநாடுகளில் புலம் பெயர்ந்தும் வாழும் தமிழ் – சிங்கள எழுத்தாளர்கள் கடுமையாக உழைக்கவேண்டும்” இவ்வாறு கடந்த 2017 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு வருகை தந்திருந்தபோது, மெல்பனில் நடந்த 17 ஆவது தமிழ் எழுத்தாளர் விழாவில் உரையாற்றியவர் மடுள்கிரியே விஜேரத்ன. இவர் மீண்டும், மெல்பன் – கன்பரா இலக்கியவாதிகள் இணைந்து மொழிபெயர்ப்பு இலக்கியத்தில் தமிழ் என்னும் […]
-
“ மாலன் “ என்னும் பன்முக ஆளுமை !
எழுத மறந்த குறிப்புகள்: குமுதம், தினமணிக்கதிர், இந்தியா டுடே, புதிய தலைமுறை இதழ்களின் முன்னாள் ஆசிரியர் ! ! இந்திய முன்னாள் பிரதமர்களின் செய்தி ஊடகப்பிரிவில் இணைந்திருந்த மூத்த இதழாளர் ! ! ! முருகபூபதி “ என் ஜன்னலுக்கு வெளியே நெடிதுயர்ந்து நிற்கும் வேம்பு, கடந்து போகும் காற்றின் சிலிர்ப்பில் பூக்களை உதிர்க்கிறது. வானின்று இறங்கும் நட்சத்திரங்களைப் போல அந்த வெண்பனிப்பூக்கள் காற்றில் சுழன்று சுழன்று தரையிறங்குகின்றன. வாசல் கோலத்தில் சில வந்தமர்கின்றன. இன்னும் […]
-
18 கரையில் மோதும் நினைவலைகள்: உதயம் பத்திரிகை விடுதலைக்கெதிரானது.
நடேசன் பேராதனைப் பல்கலைக்கழகத்தில், 1975 ஏப்ரலில் நடந்த றாக்கிங்கில் , ரூபா ரத்தினசீலி , ராமநாதன் விடுதியின் மேல் மாடியிலிருந்து குதித்து இடுப்புக்கு கீழ் இயங்காது போனபின்னரும் அங்கு நடந்த றாக்கிங் முடிவுக்கு வரவில்லை. ஆனால் கிட்டத்தட்ட அரைவாசியாக குறைந்ததை அடுத்த வருடத்தில் என்னால் அவதானிக்க முடிந்தது. பிற்காலத்தில் றாக்கிங்கால் இறப்புகள் நடந்த போதும் எமது காலத்தில் நடந்த சம்பவமும், அதற்கு ரூபா ரத்தினசீலி என்ற ஏழை மாணவி கொடுத்த விலையும் மிகப் பெரியது. எனக்கு நடந்த […]
-
எழுத்தாளர் நந்தினிசேவியர் விடைபெற்றார் !
அஞ்சலிக்குறிப்பு: இறுதிவரையில் முகநூலில் வலம் வந்தவர் முருகபூபதி “ Sino pharm 2nd dose . தடுப்பூசி கடுப்பேத்தி படுக்கையில் வீழ்த்திவிட்டது. எதுபற்றியும் சிந்திக்கவோ எழுதவோ முடியவில்லை. மீண்டு எழுவேன். வருவேன். எழுதுவேன். இனிப்போதும். எனக்கே சலிக்குது. எழுத இன்னும் பலது உண்டு. “ மேற்குறிப்பிட்ட வரிகள், எமது எழுத்தாளர் நண்பர் நந்தினி சேவியர், ( செப்டெம்பர் 16 ஆம் திகதி ) மறைவதற்கு முன்னர் எழுதி முகநூலில் பதிவேற்றியவை ! என்னிடம் […]
-
அத்தியாயம் 5: முள்ளுள்ளபுதர்களின் மத்தியில்
ரெரன்ஸ் அந்தோனிப்பிள்ளை ‘மாத்தையாஎன்டகிவ்வா’ (ஜயா வரட்டாம்) என்றகுரல் கேட்டது. முக்கால்மணி நேரமாக வவுனியாவாகனதொடரணி சோதனைமுகாமிற்கு அருகாமையிலிருந்த மரநிழலின் கீழ் பத்திரிகை வாசித்துக்கொண்டிருந்த நான் திடுக்குற்றுநிமிர்ந்துபார்த்தேன்.கையில் துப்பாக்கியுடன் இராணுவச்சிப்பாய் எதுவித உணர்ச்சிகளுமின்றி என்னைப்பார்தவாறு நின்றிருந்தான். எனக்குநெஞ்சுதிக்கென்றது. இராணுவச்சிப்பாய் என்னுடன் கதைத்தது சுற்றியிருந்த பலரின் கவனத்தை எனது பக்கம் திருப்பியது. வன்னியில் பணிபுரியும் பலஅரச. அரசசார்பற்ற உத்தியோகஸ்தர்கள்,வாகனசாரதிகள் எனப்பலர் தொடரணி புறப்படுவதற்காக காத்திருந்தனர். ஏதோதடை செய்யப்பட்டபொருட்களைக் கடத்த முற்பட்டுப் பிடிபட்டுவிட்டேன் என்றுஅவர்கள் எண்ணியிருக்கக்கூடும். விடலைப்பருவத்தில் சுயஇன்பத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் பொழுது கையும் […]
-
மகாகவி பாரதி மறைந்து நூறு ஆண்டுகள் !
செப்டெம்பர் 11 : முருகபூபதி மகாகவி பாரதிக்கு கிடைத்த நண்பர்கள் பல்வேறு குணாதிசயங்கள் கொண்டவர்கள். அவர்களில் சித்தர்கள், ஞானிகள், அறிஞர்கள், வக்கீல், வர்த்தகர், தீவிரவாதிகள், விடுதலை வேட்கை மிக்கவர்கள், பத்திரிகாசிரியர்கள், சாதாரண அடிநிலை மக்கள் , பாமரர்கள் என பலதரத்தவர்களும் இருந்தனர். அவர் சந்தித்த சித்தர்கள் அவருக்கு ஞானகுருவாகியுமிருக்கின்றனர். அவ்வாறு அவரது வாழ்வில் மாற்றங்களையும் சிந்தனைப்போக்கில் புதிய திசைகளையும் தந்தவர்களின் வரிசையில்தான் எங்கள் யாழ்ப்பாணத்துச்சாமி அருளம்பலம் அவர்களும் வருகிறார். பாரதி தனது வாழ்நாளில் சந்தித்த சித்தர்களில் […]
-
திருப்பூர்இலக்கியவிருது 2021
( 11ஆம்ஆண்டு ) அன்புதமிழ்சொந்தங்கள்அனைவருக்கும்வணக்கம். வருடம்தோறும்வழங்கப்படும்திருப்பூர்இலக்கியவிருதுவழங்கும்விழாஇவ்வாண்டுசென்னையிலும் ,திருப்பூரிலும்நடைபெறும். இவ்வாண்டுமுதல்கொங்குமுன்னோடிஎழுத்தாளர்ஆர்.சண்முகசுந்தரம்நினைவுவிருதுவழங்கப்படும்.இவ்விருதுஇவ்வாண்டு‘தாளடி’நாவல்,எழுத்தாளர்சீனிவாசன்நடராஜன்அவர்களுக்குவழங்கப்படுகிறது. விருதுவழங்கும்விழாநடைபெறும்தேதி, இடம்பின்னர்அறிவிக்கப்படும். சென்னைவிழாவில்விருதுபெறுவோர் : அருண்.மோ, ஆண்டாள்பிரியதர்ஷினி, தேவசீமா, பூமாஈஸ்வரமூர்த்தி, பாக்யம்சங்கர், முத்துராசாகுமார், இவள்பாரதி, அக்களூர்ரவி, சந்தியாநடராஜன், இரா.கவியரசு, மருத்துவர்ஜெ.பாஸ்கரன், கணேஷ்ராகவன், ஐஸ்வர்யன், தீபம்எஸ்.திருமலை, சுசித்ராமாறன், ஜெய்சக்திவேல், கன்னிகோவில்இராஜா, பாலசாண்டில்யன், மயிலாடுதுறைஇளையபாரதி, கவின், சீராளன்ஜெயந்தன், முரளிதரன்சத்தியானந்தன், விஜயராவணன், குமரிஎஸ்.நீலகண்டன், சிந்துசீனு, எழில்மதி, தனசேகரபாண்டியன், குணசேகர், தமிழன்ராகுல்காந்தி. பாண்டிச்சேரிஎழுத்தாளர்கள் : லெனின்பாரதி, டாக்டர்சந்திரசேகரன், பாரதிவசந்தன், பூங்குழலி, கலாவிசு, பூபதிபெரியசாமி, செந்தமிழினியன், தி.கோவிந்தராசு, நா.இராசசெல்வம், ஊத்தங்கால்கோவிந்தராசு, இரா.இளமுருகன், துரையரசன். ஹைதராபாத்எழுத்தாளர்கள் […]
-
A balloon that spoiled the footy match
It was a very quiet day at the Veterinary Clinic. The reason: the crowds were all at the footy match at the Melbourne Cricket Ground. The MCG is known to overflow with footy fans whenever there is a popular contest. Traffic jams on the roads leading to the MCG are common occurrences on such days. […]
-
கர்ப்பம்
நடேசன். நான் ஒரு மிருகவைத்தியர். அந்த சனிக்கிழமை வேலைக்குச் சென்றபோது, வாசலில் வைத்தே கதவைத் திறந்தபடி “ இன்று ஒரு நாயை எக்ஸ்ரே எடுக்க வேண்டும்.” என்று எனது நேர்ஸ் சொன்னாள். வழக்கமாகவே சனிக்கிழமையில் அப்படி வேலை இருப்பதில்லை. வெளி நோயாளர்களைப் பார்ப்பது மட்டுமே. ஏதாவது அவசரமாக இருக்கலாம். அல்லது தன்னார்வத்தில் அவளே தீர்மானித்தாளா? எக்ஸ்ரே எடுக்க அரைமணியிலிருந்து முக்கால் மணிநேரம் எடுக்கும். மனிதர்கள்போல் இலகுவானதல்ல. ஒத்துழைக்காத அல்லது பயந்த பூனை , நாயானால் சில நேரத்தில் […]