மாதம்: பிப்ரவரி 2021
-
முருகபூபதியும் சிவகுமாரனும்
வீரகேசரியில் 1977 இல் ஒப்புநோக்காளர் பணி கிடைத்தபின்னரும், கொழும்பில் தொடர்ந்தும் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினதும் எழுத்தாளர் கூட்டுறவுப்பதிப்பகத்தினதும் வேலைகளை மேற்கொண்டவாறு, இலங்கை ஆசிரியர் சங்கம், மக்கள் விடுதலை முன்னணி ஆகியனவற்றின் தலைமை அலுவலகங்களுக்கும் சென்று அங்கு தரப்பட்ட பணிகளை செய்துகொடுத்தேன். சங்கத்தின் செயலாளர் பிரேம்ஜி ஞானசுந்தரன், கொழும்பு -07 இல் சேர் ஏர்ணஸ் டீ. சில்வா மாவத்தையில் அமைந்திருந்த சோவியத்தகவல் பிரிவில் பணியாற்றினார். இங்கிருந்துதான் சோவியத் நாடு மற்றும் சோசலிஸம் தத்துவமும் நடைமுறையும் முதலான இதழ்கள்…
-
அந்தரங்கம் – சிறுகதைத் தொகுப்பு
சென்னை மனிதன் தன் வளரிளம் பருவத்தில் தொடங்கி வாழ்நாள் முடியும் வரை நடத்தும் போர் ஒன்று உண்டு.அதில் வென்றவர்கள் மிகக் குறைவு. ஞானம், கல்வி, அதிகாரம், செல்வம், இப்படி மனிதன் சம்பாதித்துக் கொண்ட சம்பத்துக்கள், இவையன்றி மனிதனுக்கு அருளப்பட்ட குலம், குடும்பம் இன்ன பிற வரங்கள் இவை யாவும் அதன் முன் தோற்றுத்தான் போயிருக்கின்றன. அது : காமம். மோகத்தைக் கொன்றுவிடு அல்லால் மூச்சை நிறுத்திவிடு என பாரதியின் கதறல்…
-
It is shocking video
It is shocking video https://noelnadesan.com/2011/08/18/mahinda-rajapaksa-saved-the-tamil-race/
-
உனையே மயல் கொண்டு.
குடும்ப அமைப்புக்கள் மீது காலங்காலமாக பல்வேறு விதமான உரையாடல்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. திருமணம்/உறவுமுறைகள் போன்றவை தொடர்ந்து அதிகாரத்தைத் தேக்கிவைக்கவும், எதிர்ப்பாலினர் மீது அதிகாரத்தை பிரயோகிக்கவுமே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன என்ற குரல்கள் சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதியிலேயே உரத்து எழுப்பப்பட்டிருக்கின்றன. சேர்ந்து வாழ்தல் (Living Together) இன்னபிற, திருமணம்/குடும்ப அமைப்புக்களுக்கு மாற்றாக முன்வைக்கப்பட்டாலும், இன்றும் குடும்பம் என்ற அமைப்பு முழுமையாக உடைக்கப்படாமலே -இன்னுமின்னும்- இறுக்கமடைந்து வருகின்றது. மேலும், ஒரளவு அடிப்படை உரிமைகள் சட்டத்தால் வரையறுக்கப்பட்ட குடும்ப அமைப்புக்களின் உள்ளேயே அதிகாரமும்…
-
அமரர் கலாநிதி கந்தையா
அவுஸ்திரேலியாவில் 13வருடங்கள் உதயம் இதழை நடத்திவிட்டு மூடிய பின்பு என்னிடம் இருந்த ஒளிப்படங்களைப் பார்த்தபோது அதிக அளவில் இருந்த படங்கள் கலாநிதி கந்தையாவுடையதாகும். உதயம் பத்திரிகையை ஆரம்பித்தபோது எனக்கு அறிமுகமானவர்கள் பலர். அவர்களில் ஒருவர் சிட்னியிலிருந்து உதயத்திற்கு அடிக்கடி விடயதானங்களும் ஒளிப்படங்களும் அனுப்பிக்கொண்டிருந்த கலாநிதி ஆ.கந்தையா. அவர் தனது நிகழ்ச்சியொன்றை அனுப்பி விட்டு அதைபிரசுரிக்க சொன்னபோது மறுத்துவிட்டேன். அந்த விடயம் இந்தியாவில் நடந்தது இங்கே அது முக்கியமானது அல்ல என்று மறுத்த போது அடுத்த முறை வேறு…
-
As history that never ends…. “I can do it” – Colonel Charles
Written by S. Pottu Amman Today we are republishing the article written by Mr. S. Pottu Amman, head of the Intelligence Unit of the L.T.T.E in 2008, in remembrance of Colonel Charles. That first week of 2008, was a time when the Mannar battlefield was under severe attack. I wanted to meet Commander Baanu. It…
-
அரசியலும் நாடகங்களும்.
நடேசன் ————————————————————— அரிஸ்ரோட்டல் கருத்துப்படி, நாடக பாத்திரங்கள் தாம் நடிக்கும்போது அதன் வழியே மனித உணர்வுகளைத் தூண்டி பார்வையாளர்களது உணர்வுகளுக்கு வடிகாலாகவே நாடகங்களை நடத்தினார்கள் . திகில் , நகைச்சுவை முதலான இருவகையான நாடகங்களிலும் இதையே நோக்கமாக கொண்டிருந்தார்கள். நாடகங்களில் வரும் பாத்திரங்களுடன் தங்களை ஒன்றவைத்து பார்த்து ரசித்த மக்கள், அந்தப் பாத்திரங்களோடு தங்களைத் திணித்து, அவர்களது உணர்ச்சிளை ஏந்திய கிண்ணங்காக வெளியேவருவார்கள். ஹோலிவூட் திரைப்படத்துறையிலிருந்து நமது பாரதிராஜாவின் முதல் மரியாதை வரையிலும் இதே போஃர்முலாவை பின்பற்றினார்கள்.…
-
ஈழத்து மார்க்சிம் கோர்க்கி யார்..?
டொமினிக்ஜீவாவா..? அல்லது புதுவை இரத்தினதுரையா…? நடேசன் ——————————————————————————————– டொமினிக் ஜீவாவை, ஈழத்து மார்க்சிம் கோர்க்கி என்று ஒரு சிங்களப் பத்திரிகையில், நண்பர் மடுள்கிரியே விஜேரத்ன எழுதியிருந்தார் . உண்மையான நமது மார்க்சிம் கோர்க்கி என நாம் கொண்டாடவேண்டியவர் கவிஞர் புதுவை இரத்தினதுரையே. அந்தப் பெருமை அதற்கு உரியவரிடம் சேரவேணடும் என்பதால் இதை எழுதுகிறேன். “ரஷ்யாவின் சிறந்த கவிஞராகிய ஒருவர் போல்ஸ்விக்குகளால் கொலை செய்யப்படுவதைத் தடுக்கும்படி, லெனினிடம் கேட்டு அந்தக் கொலையைச்செய்ய தயாராகியிருந்தவர்களுக்கு அவசரத்தந்தி மூலம் தகவல்…
-
தேனி- ஜெமினியின் மறைவு தரும் பாடம் ! ?
நடேசன் ஸ்டுட்காட்டில் (Stuttgart, Germany) நண்பர் யோகநாதன் புத்திராவின் வீட்டில் பத்துப் பேர் சில வருடங்கள் முன்பாக என்னைச் சந்திக்க வந்திருந்தார்கள் அவர்கள் பலரில் ஒருவர், தலையில் கருமையான தொப்பியணிந்தபடி ஓரத்தில் அமர்ந்திருந்தார். அப்போது யோகநாதன் “இவர்தான் தேனி ஜெமினி “ என அறிமுகப்படுத்தியபோது “தேனியை நடத்திக் கொண்டு ஜெர்மனியில் எப்படி உங்களால் உயிர்வாழ முடிகிறது?” எனக் கேட்டேன். ஆரம்பத்தில் அவரிடமிருந்து புன்சிரிப்பு மட்டும் வந்தது. சிறிது நேரத்தின் பின் “ எவரையும் எனது வீட்டுக்கு…