Month: நவம்பர் 2019
-
பிராணவாயுவைத் தேடி
ஈகுவடோரின் தலை நகரமான கீற்றோவில் சில நாட்கள்-2 நடேசன் கீற்றோவிற்கு செல்லும் எவரும் பார்ப்பதற்குத் தவறாத இடம் பூமத்திய ரேகை என்னும் கற்பனையான கோடாக நினைக்கும் புவியின் மத்திய பகுதி.அதனாலேயே ஸ்பானிய மொழியில் ஈகுவடோர் எனப் பெயர் வந்தது. பூமத்திய ரேகை கீற்றேவிற்கு வடக்கே செல்கிறது. கீற்றோ மத்திய நகரம் கோட்டிற்கு தெற்கேயுள்ளது. 200 வருடங்கள் முன்பாக பிரான்சின் புவியியல் விஞ்ஞானிகளது வருகையை கவுரவிக்கும் முகமாக பூமத்திய ரேகை வரையப்பட்டு, அங்கு கண்காட்சியகம் , பூங்கா என்பன […]
-
ஷோபா சக்தியின் “ இச்சா “ – நாவல்
நடேசன் நல்ல நாவலைப்படிக்கும்போது நமக்குள் ஒரு உருமாற்றம் (Metamorphosis) நடக்கிறது என்பார்கள் . அப்படியான ஒரு மாற்றத்தை சமீபத்தில் தோப்பில் முகம்மது மீரானது சாய்வு நாற்காலியையும் ஷோபா சக்தியின் இச்சா நாவலையும் வாசித்தபோது உணர்ந்தேன். இந்த உருமாற்றம் மனதில் நடக்கும் . எப்படி புரியவைக்கலாம்? நகரவீதிகளில் நடந்து கொண்டு போகும்போது திடீரென ஒரு பெரிய காட்டுக்குள் இருக்கிறீர்கள் என்றால் அப்பொழுது உங்களது மனதில் ஏற்படும் மாற்றத்தை உணர்ந்திருக்கிறீர்களா? அதை அனுபவித்திருக்கிறீர்களா? அதுபோலவே . கிட்டத்தட்ட 18 மாதங்கள் […]
-
இலங்கைத் தேர்தலில் வெளிப்பட்ட அச்சம்
நடேசன் “ இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகளைப்பற்றி என்ன நினைக்கிறாய் நடேசன் ?” எனக்கேட்டாள் பிரீதி அவளது கேள்விக்கு, “ இந்த முடிவையே நானும் எதிர்பார்த்தேன். அங்கு மாற்றம் வருதையே விரும்பினேன் “ என்றேன். “ அப்படியா ? “ “ நாங்களும் கோத்தாவிற்கே ஆதரவு. நாடு பாதுகாப்பாக இருக்கும். மக்களும் பாதுகாப்பபாக இருப்பார்கள் “ என்றார் என்னுடன் பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் படித்த டொக்டர் பிரீதி கருணாரத்தின. அதேபோல்; எனது நண்பி புஸ்பா மாத்தறையில் வசிப்பவள். அவளும் […]
-
கரையில்மோதும் நினைவலைகள் — 4 இடப்பெயர்வுகள்.
இலங்கை சிட்னியியில் நியு சவுத்வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நான் படித்த காலம் ஒரு வருடமே . ஆனாலும் புதிய இடம், கலாச்சாரம் என்பதால் அவை நினைவில் நீங்காதவையே. யாழ்ப்பாணத்தில் இந்துக்கல்லூரியின் விடுதி வாழ்க்கை மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் நினைவுகள் போல் பசுமையானவையல்ல. புலம்பெயர்ந்தபின் வாழ்வதற்கு புதிய அவுஸ்திரேலியப் பட்டம் தேவையாகவிருந்தது இலங்கையின் வடகரையில் எழுவைதீவென்ற சிறு தீவில் பிறந்து வளர்ந்து அமைதியாக ஏழாம் வகுப்பில் படித்த எனக்கு வங்கக் கடலில் மையங் கொண்ட புயலாக எனது தந்தையார் வந்தார். […]
-
நவீனகால மதியூகி சுமந்திரனுக்கு ஒரு கடிதம்
“Our decision (to support Sajith Premadasa) was made, based on who should be defeated and who should not win. Not for any other reasons.” – M. A. Sumanthiran, in Mannar, to the media, on November 4th. நடேசன் இராமாயணத்தில் வரும் பரதன் 14 வருடங்கள் இராமன் அமரவேண்டிய சிம்மாசனத்தில் அண்ணன் இராமனின் பாதுகையை வைத்து அரசாண்டான். அங்கும் ஆலோசகராக சுமந்திரன் என்ற மதியூகி […]
-
தோப்பில் முகம்மது மீரானின் சாய்வுநாற்காலி – நாவல்
வாசிப்பு அனுபவம் நடேசன் தோப்பில் முகம்மது மீரான் எழுதிய சாகித்திய அக்கடமி விருது பெற்ற நாவல் சாய்வுநாற்காலியை அவரை நினைவு கூர்ந்து பேசுவதற்காக இரண்டாவது முறையாக வாசித்தேன். காதலித்தபோது தெரியாத பெண்ணின் பக்கங்களை பிற்காலத்தில் மனைவியாக்கியபின் புரிந்து கொள்வது போல் இருந்தது. முதல்முறை வாசித்தபோது கண்ணில்படாத பல புதிய தருணங்கள் அவிழ்ந்து அழகு காட்டியது. இம்முறை இலகுவாக நாவலின் புதிய இடுக்குகள், மடிப்புகளுக்குள் பயணிக்க முடிந்தது. தாத்தா குதிரை வைத்திருந்தார் என்ற பாரம்பரிய பெருமைகளை பேசியபடி நிகழ்காலத்தை […]