விமர்சனம் -நடேசனின் வண்ணாத்திக் குளம்


பாலியல் வயது இளையயோடும் ஒரு காதல் கதை. இப்படித் தான் இந்த வண்ணாத்திக் குளம் குறுநாவலின் தொடக்கத்தை என்னால் முதலில் உணரமுடிந்தது.
ஆனால் இக்கதைப் பின்னணியின் ஆழத்தை ஒரு தமிழன் என்ற பகுப்பாய்வில் நின்று கொண்டு நான் வாசித்த போது தான், ஏதோ ஒரு ஏக்கம் இளையோடுவதை உணர முடிந்தது. கதையின் கருத்து உணர்த்தும் உள் நோக்கம் எல்லா வாசகர்களுக்கும் கொண்டு சென்றிருக்குமா என்ற கேள்வியோடு தான் இதை எழுதுகிறேன்.
பெரும்பான்மையான இடங்கள் ஒவ்வொன்றிலும் ஏதோ நடக்க வேண்டி நடை முறை சரி முறையில் நடக்காமல் பாதை மாறிப் போகும் நிலையை இக் கதையின் கதா நாயகன் சுதாகரித்துக் கொண்டு தனது முடிவுகளைத் தெளிந்த மனத்துடன் தெரிவாக்கிக் கொண்டு நகரும் தன்மை என்னைக் கவர்ந்து நிற்கிறது. ஏக்கமே இந்த நாவலின் முதன்மை உணர்வாக நான் நுகர்ந்த நுகர்வின் பகுதி.
கதாநாயகன் விமானத்தில் அவன் தன் தாய் மண்ணையும் மனிதர்களையும் விட்டுப் பிரியும் அந்த வான வெளிப் பரப்பின் பார்வையில் பதிவாகிய கடைசிப் பக்கம் இன்னும் எனக்கு மன ஆழத்தில் ஊன்றிக் குத்தப்பட்ட அந்த ஆணியின் வலி சுமக்கும் பகுதி என்பதாலோ என் மனதில் இன்னும் இப்பகுதி உளன்று கொண்டிருக்கிறது.நடேசனின் இந்த நாவவலுக்குப் பின் வந்த நாவல்கள் வாசகர்கள் மத்தியில் ஏற்படுத்தும் விமர்சனத் தாக்கம் இந்த நாவலில் ஏற்படுத்தாத போதும் தெளிவான வாசிப்போடு நகர்ந்து செல்லும் வாசகனின் மனதை விட்டு அகல மறுக்கும் சம்பவங்களின் கோர்வை தான் நாவலை உயர்த்தி நிற்கின்றது என்பேன்.இதனால் தான் இந்த நாவல் ஒரு திரைப் படப் பிரதியை உருவாக்க முடிந்திருக்கும் என்பதும் என் எண்ணம்.
நல்ல நாவலைப் படித்த மனத்தாங்கலுடன் விடை பெறுகின்றேன்.

“விமர்சனம் -நடேசனின் வண்ணாத்திக் குளம்” மீது ஒரு மறுமொழி

  1. தங்கள் கண்ணோட்டம் அருமை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: