கானல் தேசம் காலச்சுவட்டில் இரண்டாம் பதிப்பு

எதிர் மறையான கருத்துகள் பலமானவை .உத்வேகத்தைக் கொடுப்பவை.

2016வது ஆண்டில் வந்த புத்தகங்களில் சிறந்தது வாழும்சுவடுகள் எனக் கவிஞர் சல்மா ஆனந்தவிகடனில் சொன்னார். அதேபோல் ஜெயமோகன் ராமகிருஸ்ணன் போன்றோர் அதைத் தமிழுக்குப் புதுவரவெனச் சிலாகித்தனர்.

அதேபோல் 13 ஆண்டு அசோகனின் வைத்தியசாலையைப் பலர் நன்றாகச் சொன்னார்கள். இரண்டும் முதல் பதிப்பைத் தாண்டாது பதுங்கு குழிகளில் கிடக்கின்றன.

2019 ஆண்டு தைமாதம் வெளிவந்த கானல் தேசம் இரண்டாவது பதிப்பை நோக்கிப் பிரவேசிப்பதான நேற்று எனது நண்பர் சொன்னார் . அதை காலச்சுவடு கண்ணனும் உறுத்திப்படுத்தினார்.

யாருக்கு நன்றி சொல்லவேண்டும்?

முகவுரையை மட்டும் படித்துவிட்டு ஒரு மணி நேரம் மூவரை வைத்து ஐரோப்பா முழுவதும்
அறிமுகம் செய்த IBC மற்றும் முன்னுரையை வைத்தே புத்தகத்தை அலசிய நண்பர் சுறுக்கர் எனச் செல்லமாக அழைக்கப்படும் தியாகராஜன், புத்தகத்தை கசப்பின் இதிகாசமாக அலசிய நண்பர் தெய்வீகன் மற்றும் ஆங்காங்கு முகநூலில் நெருப்பு வைத்த பலருக்குமே முதற்கண் நன்றி சொல்லவேண்டும்.

புத்தகத்தை வெளிக்கொண்டு வர உழைத்த கருணாகரன் தயாளன் அவர்களுடன் காலச்சுவடு கண்ணனுக்கே எல்லாப் புகழும்

எழுத்தாளர் ராஜேஸ்வரி, டாக்டர் முருகாநந்தம் நண்பர் சுகு சிரீதரன், ஹாஸீன் மற்றும் எழுத்தாளர் தீரன் நவ்சத்துக்கு நன்றிகள் .

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: