தமிழ்த் திரைப்பட இயக்குநர் மகேந்திரன் மறைந்தாலும் அவரது நினைவு என் நெஞ்சில் நிரந்தரமாக இருக்கும்.
ஏன் தெரியுமா?
திரைப்படமாகாத கதை வசனம்- வண்ணாத்திக்குளம்.
சென்னையிலிருந்து – எஸ்பொ போர் நிறுத்த காலத்தில் தொலைப்பேசியில் “உமது வண்ணாத்திக்குளம் நாவலைத் திரைப்படமாக எடுக்க இயக்குனர் மகேந்திரன் விரும்புகிறார். அவர்தான் முள்ளும் மலரை எடுத்தவர். என்றார்.
எனக்குச் சந்தோசம் தாங்க முடியவில்லை.
“அப்படியா? “ என வாய் கேட்டாலும் இதயம் நெஞ்சுக் கூட்டில் துள்ளி விளையாடியது. மதவாச்சியில் மிருக வைத்தியராக வேலை செய்தபோது நடந்த சம்பவங்களை வைத்து எழுதியது. அதுவும் 20 வருடங்கள் பழைய கொப்பில் கிறுக்கப்பட்டு என்னுடன் இந்திய, அவுஸ்திரேலியா எனத் தேசங்கள் மட்டுமல்ல சிட்னி- வாணம்பூல்- அடிலயிட்- மெல்பேன் என நகரங்கள் புலம் பெயர்ந்தது.
அப்படியான எனது எழுத்திற்கு இவ்வளவு அதிஸ்டமா?
“படமாக்க அனுமதி கேட்டார்” “
“நீங்களே ஓம் எனச் சொல்லுங்கள்”
மீண்டும் ஒரு நாள் எஸ் பொ தொலைப்பேசியில் மகேந்திரன் உம்மோடு பேசவிரும்புகிறர் என்று சொன்னதும் எதிர் பக்கத்தில் “நாவலைப்படித்தேன். திரைப்படம்போல் காட்சிகள் வந்திருக்கு. அத்துடன் இலங்கைத் தமிழர் போராட்டம் பற்றிய தகவல்கள் வந்திருப்பதால் சினிமாவாக்க விரும்புகிறேன். ” என்றார் . கரகரத்த குரலின்
“தாராளமாக. எனது முழு சம்மதம்”என்றேன்.
தமிழ்நாட்டின் தலைசிறந்த இயக்குநர் நமது கதையை வாசித்ததுடன் அதைப் பாராட்டினார் என்ற திருப்தியுடன்,பொறுப்பான ஆணிடம் மகளை திருமணம் செய்து கொடுக்கும் தந்தையின் மனநிலையில்.
எஸ்.பொ அவுஸ்திரேலியா வந்த போது எனக்கு அவர் எழுதிய கதை வசனத்தின் ஒரு பிரதியைக் கொண்டு வந்தார்.
காலச் சக்கரங்கள் கடந்து சென்றன.
எஸ் பொவிடம்போது என்ன நடக்கிறது என்பேன்.
தற்போதுள்ள இலங்கை அரசியலால் பணம் போடுவதற்குப் பலர் தயங்குகிறார்கள் எனப்பதில் வந்தது.
மீண்டும் சண்டை கடந்தகாலத்தில் சென்னையில் இயக்குநர் மகேந்திரனை அவரை வீட்டில் சந்தித்தேன். இலங்கையில் தமிழர்கள் நிலைபற்றி கவலையோடு பேசினார்
அந்த நேரத்தில் எனக்கு சினிமாவைப்பற்றி பேச வாய் வரவில்லை
2009 ல் எனது வீட்டிற்கு ஜெயமோகன் வந்தபோது அவரிடம் அதைக் காட்டினேன் . வாசித்து விட்டு கொஞ்சம் பழைய பாணியாக இருக்கிறதென்றார்.
எனது நாவல் திரைப்படமாக வராத போதிலும் எனது புத்தக அடுக்கில்
இன்னமும் மகேந்திரனது கதையின் பிரதி இருந்தபடி அவரை நினைவு படுத்தியபடியிருக்கிறது.
மறுமொழியொன்றை இடுங்கள்