சுகு-ஸ்ரீதரன்
திருநிலை- புனிதப்படுத்தப்பட்டவை மீதான தீவிரமான கேள்விகள்
நடேசனின் எக்சைல் மற்றும் கானல் தேசம் இரண்டு நூல்களும் சமகால கவனத்திற்குரியன.
படைப்பு சுதந்திரம் ஒரு சமூகத்தின் சுயவிசாரணை தொடர்பாக அவை முக்கியத்தும் வாய்ந்தன.
எக்ஸைல்
“முறிந்த பனை” 1990 களின் முற்பகுதியில் பரவலாக பேசப்பட்டது. அக்காலத்தில் அது தமிழ் “புனிதங்களை” பற்றி கேள்வி எழுப்பியதால் பூசிப்பவர்களின் கடும் சினத்திற்குள்ளானது.
அதனை வாசிப்பவர்களும் அதனை வினியோகிப்பவர்களும் உயிராபத்தை எதிர் கொள்ளும் நிலை நிலவியது.
இலங்கையின் எந்த தமிழ் புத்தக கடையிலும் அதனை காண முடியவில்லை, இன்றளவில்! நீண்டகாலத்திற்கு பின் சென்னை புத்தக கண்காட்சி ஒன்றில்.
நடேசன் யுத்தம் முடிந்து 9 ஆண்டுகளின் பின் எக்சைல், கானல்தேசம் ஆகிய படைப்புக்களை தந்துள்ளார்.
எக்ஸைல் அவரது சிறு பராய நினைவுகளில் இருந்து ஆரம்பித்தாலும் 1980களில் இருந்து ,
இன சமூக உறவுகளின் சிதைவையும் தனது சொந்த வாழ்க்கையின் அனுபவக் கூறுகள் சிலவற்றையும் பதிவு செய்கிறார்.
குறிப்பாக 1983 இலிருந்து 87 இலங்கை இந்திய- ஒப்பந்தம் வரை.
சமூகங்கள் மனிதர்களிடையே உறவின் சிதைவின் வேதனை அனுபவங்களில் தொனிக்கிறது.
இன-மதரீதியில் பிளவுண்டு போகையில் மனித உறவுகளின் உயிர் ஊசலாட்டத்தை,
அடிப்படையில் ஒரே மாதிரி இதயம் கொண்டவை இந்த கற்பிதங்களின் கருஞ்சுழியில் எவ்வாறு சிக்கி திணறுகின்றன.
வடமத்திய மாகாண கிராமங்களில் சூழலில் மிருகவைத்திய தொழிலை செய்தவருக்கு அங்கு நிலவிய நட்பான சூழல் வெள்ளாந்தியான மனிதர்கள்
1983 இன் மனங்கசந்து போகச் செய்த நிகழ்வுகள்
யாழ்ப்பாணத்திலும் வாழ்வதற்கான இடைவெளி குறைந்ததன் அனுபவங்கள் யாழ் ஆஸ்பத்திரிவீதியிலும்,
எங்கே செல்லும் இந்த பாதை என்பதுபோல் மன்னாரில் கப்பல் ஏறியது.
ராகுல்ஜி சங்கிருத்தியன் தனது தரிசனங்களை ஓயாத இந்திய ரயில் பயணிகளிடையே மேற் கொண்டார்.
கோர்க்கி தனது நாடோடி போன்ற வாழ்க்கையில் பல தரிசனங்களை கண்டார்.
நடேசனும் பயணங்களும் தேடல்களும் கொண்டவர்.
அனுரதபுரமாவட்ட கிராமங்கள்- ராமநாதபுரம்- புயல் பாதுகாப்பு மையங்களில் அகதிளாக வந்திருந்த மக்கள்
நைல் நதி தீரத்தின் வரலாறும் வாழ்க்கையும் பண்பாடும்,
தென்னமெரிக்க பூர்வகுடிகள்
கம்பூச்சியா இந்தோ சீனம் என பரந்த தேடல்.
பள்ளிக் கால நண்பர்கள் சிலர் இயக்கத்திற்கு போனபின் எவ்வாறு அந்நியமனிதர்கள் ஆனார்கள்.
அகதிகளுக்கான மருத்துவசேவை மீது திணிக்கப்பட்ட இயக்க அரசியல் பின்னர் நேர இருந்த விபரீதங்களுக்கான அறிகுறிகளாக இருந்ததை சென்னையின் அராஜகமான வாழ்க்கையும்- தட்ப வெப்பமுமான நிலையில் தடைகளை தாண்டி அகதிகளான மக்களுக்கு மாத்திரமல்ல காயமடைந்த போராளிகளுக்கு சேவை செய்வதில் இருந்த பிரம்ம பிரயத்தனங்கள்,
சமூக நலன் என்று கருதி ஒற்றுமையாக செயற்படுவதில் அந்த நாட்களிலேயே இருந்த இழுபறி,
இவற்றுக்கும் மேலாக கிடைத்த உதவிகள் -தன்னலமற்ற மனிதர்கள் -ஜெய்பூர் கால்கள்
பற்றாக்குறைகள் கெடுபிடிகள் மத்தியில் அர்ப்பணத்துடன் செயற்பட தயாராயிருந்த சகமனிதர்கள், இயக்கங்களிடையே சென்னையில் நிலவிய உரசல்களும்- உறவும் -சமூக அக்கறையும் மானிட நேயம் கொண்ட தலைவர்களும- பெரியவர்களும்.
சமூக உறவின் மீதான நெருடல்களும்- அனுராதபுரம் போதிமரத்தின் கீழ் நடத்தப்பட்ட படுகொலைகள் போன்றவை, சென்னையில் வசித்த தென்னிலங்கை முற்போக்காளர்களிடையே உருவாக்கிய அதிர்ச்சியளிப்பதும் சங்கடமான மனநிலையையும்
1980 களின் நடுப்பகுதியில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் முஸ்லீம் உறவுகள் சிதைவடைந்தபோது போராட்டதில் பங்குபற்ற வந்த
முஸ்லீம் இளைஞருக்கு ஏற்பட்ட சங்கடமான நிலையையும் அதனை புரிந்து கொண்டு நடந்த இயக்க தலைவரையும்,
எழுத்தாளரான தனது கணவரைத் தேடி தோளில் குழந்தையை சாய்த்தபடி இயக்கவாசலில் நின்றவரின் அலநிலையையும்,
இயக்க சமூக ஒற்றுமைக்காக பிரயாசையுடன் உழைத்த தலைவர்களையும் ,இயக்கங்களின் பொதுவான போக்காக ஜனநாயக மறுப்பு ,அராஜகம் ,அர்ப்பணம் ,மெலிந்த தோற்றமுடைய இயக்காரர்கள்.
இயக்காரியாலயம் ஒன்றில் மார்க்ஸ்லெனின் ஏங்கல்ஸ் படங்கள்
அங்கு வந்து சென்ற வடஅமெரிக்காவுக்கு புலம்பெயசந்த உறவினரின் பிரதிபலிப்பு.
குடும்பங்களின் சிதறுண்டநிலை.
சென்னையின் தகிக்கும் வெயில் வசதி குறைந்த இருப்பிடம்
சென்னை சில அரசியல்வாதிகளின் நிலப்பிரபுத்துவபாணி உறவு நிலை
ஈழப்போராடத்தின் ஆராஜக நிலையின் சாரம்சமாக நடேசனின் அனுபவங்கள்
சூழைமேடு, ராமநாதபுரம் நாகபட்டினம் காரைக்கால் எழிலகம் ஒபர் சக்காரியா காலனி
சாலிக்கிராமம்
ஜெய்பூர் டெல்லி என மருத்துவ சேவைக்கான அலைச்சல்
சாந்தி ராஜசுந்தரம், சிவனாதன், ஜெயகுலராசா ,வாசுதேவா, சந்ததியார் ,டேவிட் ஐயா ,தமிழக அமைச்சர் அரங்க நாயகம் சந்திரகாசன் ,அரிச்சந்திரா , யோகி, குணசேகரம் ,விசாகன் தேவானந்தா, பத்மநாபா, ஸ்ரீசாபாரத்தனம,; உமாமகேஸ்வரன், கிருபாகரன், கும்பகோணம் ஸ்ராலின் அண்ணா, டொக்டர் பிரமோத்கரன் சேத்தி என சந்தித்த மனிதர்கள்
அகதிகளான மக்களுக்கும் காயமடைந்த போராளிகளுக்கும் மருத்துவபணி செய்வதில் இருந்த அராஜகசூழலில் சவால் மிக்க பணியாக அது அமைந்ததையும் பின்னர் நிகழவிருந்த ஜனநாயகவிரோத விபரீதங்களுக்கான குணங்குறிகள் மருத்துவசேவை செய்யும் சூழலிலேயே வெளிப்படத்தொடங்கியதையும் அவரின் அனுபவம் பதிவு செய்கிறது.
அண்மைய வழமையாக ஏதோ ஒன்றை புனிதமாக ஏற்றுக் கொண்டு எழுதவேண்டும் பேச வேண்டும் என்பது தமிழர் தரப்பில் எழுதப்படாத விதியாக இருந்து வந்தது. இந்த விதிக்கு கட்டுப்படாதவர்கள் அவர்கள் அரசியல் சமூகம் பத்திரிகை இலக்கியம் எத்துறையினராக இருந்தாலும் துரோகிகள்- அந்த விதி மெல்ல அழிவடைந்து வருகிறது.
நாவலும் அனுபவமும் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற போக்கில் எமது சூழலில் ஒரு ஜனநாக விரோத உள்ளடக்கம் ஒழிந்துகொண்டிருக்கிறது. அது தகர வேண்டும்.
மறுமொழியொன்றை இடுங்கள்