அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் கவிஞர்கள் ஒன்றுகூடும் கவிதா மண்டலம் நிகழ்ச்சி எதிர்வரும் 08-04-2018 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணி முதல் மாலை 6.00 மணி வரையில் மெல்பனில் நடைபெறவுள்ளது.
சங்கத்தின் தலைவர் திரு. சங்கர சுப்பிரமணியன் தலைமையில் இக் கவிதா மண்டலம், நடைபெறும் இடம்: கிளேய்ட்டன் பொது நூலகம் (Clayton Community Centre Library Meeting Room – 9-15, Cooke Street , Clayton, Victoria – 3168 )
சங்கத்தின் உறுப்பினர்களான கவிஞர்களும் மெல்பனில் வதியும் இதர கவிஞர்களும் பங்குபற்றலாம். கலந்துகொள்ள விரும்பும் கவிஞர்கள், தமது கவிதையை அல்லது தமக்குப்பிடித்தமான கவிதையை இந்நிகழ்ச்சியில் சமர்ப்பித்து கலந்துரையாடும் வகையில் இந்நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. கவிஞர்கள் தங்கள் கவிதையை 5 முதல் 7 நிமிடத்திற்குள் சமர்ப்பிக்கலாம்.
மேலதிக விபரங்களுக்கு:
சங்கர சுப்பிரமணியன்
(தலைவர்- அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம்)
atlas25012016@gmail.com —- maniansankara@gmail.com
தொலைபேசி: 0423 206 025
மறுமொழியொன்றை இடுங்கள்