அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம்

xyz
அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் புதிய நிருவாகிகள் தெரிவு

அவுஸ்திரேலியாவில் பலவருடங்களாக இயங்கிவரும் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஆண்டுப்பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் (26 ஆம் திகதி) சனிக்கிழமை மெல்பனில் மல்கிரேவ் Neighborhood House மண்டபத்தில் மாலை 4 மணிக்கு நடைபெற்றது.

சங்கத்தின் துணைத்தலைவர் திரு. லெ.முருகபூபதியின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் , உலகெங்கும் போர் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களுக்காகவும் கடந்த ஆண்டு இறுதியில் மறைந்த முன்னாள் தலைவரும் எழுத்தாளருமான திருமதி அருண். விஜயராணியை நினைவுகூர்ந்தும் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
2015-2016 ஆம் ஆண்டுகளின் காலப்பகுதிக்கான ஆண்டறிக்கையும் நிதியறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
சங்கத்தின் புதிய நடப்பாண்டுக்கான ( 2016 -2017) புதிய நிருவாகிகள் தெரிவு, கிடைக்கப்பெற்ற பரிந்துரைப்படிவங்களின் (Nominations) அடிப்படையில் நடைபெற்றது.

புதிய நிருவாகிகள் தெரிவு, அக்கினிக்குஞ்சு இணைய இதழ் ஆசிரியர் திரு. யாழ். பாஸ்கர் முன்னிலையில் இடம்பெற்றது.

புதிய நிருவாகிகள்:

காப்பாளர்: திரு. கலைவளன் சிசு. நாகேந்திரன்.
தலைவர்: திரு. லெ.முருகபூபதி
துணைத்தலைவர்கள்: திரு. சங்கர சுப்பிரமணியன், பேராசிரியர் ஆசி. கந்தராஜா.
செயலாளர்: டொக்டர் நடேசன்.
துணைச்செயலாளர்: திரு. ஏ.ஆர். திருச்செந்தூரன்.
நிதிச்செயலாளர்: திரு. தெய்வீகன் பஞ்சலிங்கம்.
துணை நிதிச்செயலாளர்: திரு. எஸ். அறவேந்தன்.
இதழாசிரியர்: திரு. ஜே.கே. ஜெயக்குமாரன்.
செயற்குழுவினர்:
திருமதி சகுந்தலா கணநாதன், கலாநிதி ஆர். ஶ்ரீகாந்தன், திருவாளர்கள் செல்வபாண்டியன், முகுந்தராஜ், சுந்தரேசன், ஜெயபிரசாத், கலாநிதி செய்யத் ஷெரிப்தீன்.

—0—

“அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம்” அதற்கு 2 மறுமொழிகள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: