குவின்ஸ்லாந்து – ( கோல்ட்கோஸ்ட் ) பொற்கரையில்
தமிழ் எழுத்தாளர் விழா 2016
ஆறு கலை , இலக்கிய அரங்குகளில் 27-08-2016 ஆம் திகதி ஒன்றுகூடல்
அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த தமிழ் எழுத்தாளர் விழா இம்முறை முதல் தடவையாக குவின்ஸ்லாந்து மாநிலத்தில் கோல்ட்கோஸ்டில் நடைபெறவுள்ளது.
ஏற்கனவே கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் மெல்பன், சிட்னி, கன்பரா ஆகிய நகரங்களில் வருடந்தோறும் நடைபெற்ற தமிழ் எழுத்தாளர் விழா இந்த ஆண்டு கோல்ட்கோஸ்டில் எதிர்வரும் 27-08-2016 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 3.00 மணி தொடக்கம் நடைபெறும்.
நடைபெறும் இடம்: Auditorium, Helensvale Library, Helensvale Plaza – Helensvale 4212, Gold coast, QLD
சங்கத்தின் தலைவர் பேராசிரியர் ஆசி.கந்தராஜா தலைமையில் நடைபெறும் இவ்விழாவை இலங்கையிலிருந்து வருகை தந்துள்ள மூத்த எழுத்தாளர் திருமதி. தாமரைச்செல்வி மங்கல விளக்கேற்றி தொடக்கிவைப்பார். திரு. பவனேந்திரகுமாரின் வரவேற்புரையுடன் விழா நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும். மறைந்த படைப்பாளிகள், கலைஞர்களின் ஒளிப்படக் கண்காட்சி, கவியரங்கு, கருத்தரங்கு, பட்டி மன்றம், வாசிப்பு அனுபவப்பகிர்வு, ஆவணப்படக்காட்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.
16 ஆவது எழுத்தாளர் விழா நிகழ்ச்சிகள்:
முனைவர் ஜீவன் செந்தில்வாசன் தலைமையில் இடம்பெறும் கவியரங்கில் மருத்துவர்கள் காயத்ரி காந்திதாசன், ஜனனி திருமுருகன் , திருவாளர்கள் இரா. சோழன் , பாலாஜி கோபாலகிருஷ்ணன் , திருமதி.சுமதி இராகவன் ஆகியோர் பங்குபற்றுவர்.
நூல் விமர்சன அரங்கு:-
கந்தசாமியும் கலக்சியும் ( நாவல்) ஆக்கம் – ‘ ஜே.கே.” ஜெயக்குமாரன்
விமர்சன உரை – மருத்துவர் நடேசன்.
கொஞ்சும் தமிழ் (சிறுவர் இலக்கியம்) ஆக்கம் கவிஞர் அம்பி
விமர்சன உரை: திரு. முருகபூபதி
கீதையடி நீ எனக்கு (குறுநாவல்கள்) கறுத்தக்கொழும்பான் (படைப்புக்கட்டுரைகள்) – ஆக்கம் பேராசிரியர் கந்தராஜா
விமர்சன உரை : மருத்துவர் வாசுகி சித்திரசேனன்.
வாழும் சுவடுகள் (தொழில்சார் அனுபவப் பதிவுகள்) ஆக்கம்: மருத்துவர் நடேசன்
விமர்சன உரை: திரு. செல்வபாண்டியன்.
கருத்தரங்கில் கன்பராவிலிருந்து வருகைதரும் இலக்கிய ஆர்வலர் மருத்துவர் கார்த்திக் வேல்சாமி “சமகால தமிழ் இலக்கியப் பரப்பில் அவுஸ்திரேலியப்படைப்பாளிகளின் எழுத்துலகம்” என்னும் தலைப்பில் உரையாற்றுவார். அதனைத்தொடர்ந்து குறிப்பிட்ட தலைப்பின் தொனிப்பொருளில் கலந்துரையாடல் இடம்பெறும்.
” வெளிநாட்டு வாழ்வில் நாம் பெற்றது அதிகமா ? இழந்தது அதிகமா?” என்ற தலைப்பில் சிட்னியிலிருந்து வருகைதரும் திரு. திருநந்தகுமார் தலைமையில் இடம்பெறும் பட்டி மன்றத்தில் மருத்துவர் கண்ணன் நடராசன் அறிமுக உரை நிகழ்த்துவார். வெளிநாட்டு வாழ்வில் நாம் பெற்றது அதிகமா ? என்னும் தலைப்பில், திருமதி.வாசுகி சிவானந்தன், திரு.காந்தன் கந்தராசா, திரு.சிவகைலாசம் ஆகியோரும் இழந்தது அதிகமா ? என்னும் தலைப்பில், திருமதி.சாரதா இரவிச்சந்திரன் திருமதி இரமாதேவி தனசேகர் , திரு. கந்தையா குமாரதாசன் ஆகியோரும் வாதாடுவார்கள்.
கலையரங்கம்
வீணையிசை – செல்வி. சிவரூபிணி முகுந்தன்
பரதம்
“பாரதமாதா”- ஸ்ரீமதி.பத்மலக்ஷ்மி ஸ்ரீராமும் குழுவினரும்
“விநாயகர் வணக்கம்”- செல்வி மதுஜா பவன்
“தில்லானா”-செல்வி சிவகௌரி சோமசுந்தரம்
தமிழ்நதி – முத்தமிழ் விருந்து – சங்கமம் கலைக்குழுவினர்.
இவ்விழாவில் அண்மையில் நடந்த அவுஸ்திரேலியா பல கதைகள் சிறுகதைப்போட்டி முடிவுகளை அதன் ஏற்பாட்டாளர் திரு. முகுந்தராஜ் அறிவிப்பார்.
ஆவணப்படக்காட்சி: ஜெயகாந்தன் – உலகப்பொது மனிதன்
தயாரிப்பு, இயக்கம்: கனடா மூர்த்தி.
தொகுப்புரை: பேராசிரியர் கா. சிவத்தம்பி.
( ஜெயகாந்தன் வாழ்ந்த காலத்தில் ஒளிப்பதிவு செய்யப்பட்டது. அமரர்கள் ஜெயகாந்தனையும் பேராசிரியர் சிவத்தம்பியையும் நினைவுகூரும் ஆவணப்படம் )
விழா நிகழ்ச்சிகளின் இறுதியில் 16 ஆவது எழுத்தாளர் விழா நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சங்கத்தின் உறுப்பினர் திரு. முகுந்தராஜ் நன்றியுரை நிகழ்த்துவார்.
இவ்விழாவில் கலந்து சிறப்பிக்குமாறு கலை இலக்கிய ஆர்வலர்களை அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அன்புடன் அழைக்கிறது.
atlas25012016@gmail.com
மறுமொழியொன்றை இடுங்கள்