உனையே மயல் கொண்டு

Priya Ramanathan

Wrapper

பொதுவாக நான் நாவல்கள் வாசிப்பதில்லை .. ஆனால் , நேற்று எதேச்சையாய் இந்த நாவல் என் கண்ணில் சிக்கியது . இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து australiaவிற்கு புகலிடம் தேடிச் சென்ற ஒரு ஆணின் பார்வையில் , அவனது உடலின்பம் குறித்த சிக்கல்களையும் அதன் விளைவுகளையும் விபரிக்கும் “உனையே மயல் கொண்டு ” !

நாவல், இரண்டு தளங்களில் இயங்குகிறது . ஓன்று , புகலிடத்தில் உள்ள நிம்மதியற்ற பிழைப்பின் விளைவாக ஏற்ப்படும் மனவெறுமையும் , அதை போக்கிக் கொள்வதற்க்காக பீறிடும் காமம் பற்றியது , இன்னொன்று கணவன் மனைவிக்குள் உடலின்பம் சார்ந்து ஏற்ப்படும் பேசா மௌனமும் அதன் விளைவுகள் பற்றியது. “bipolar disorder ” என்ற ஒரு மனோவியாதியை (மன அழுத்தம்) வைத்தே கதை நகர்த்தப்பட்டிருக்கும் . பல மனிதர்கள் சொல்ல விரும்பாத , சொல்லத் தயங்கும் மன நலப் பிரச்சினைகளும் , அதன் பாதிப்பால்வரும் பாலியலுமே கதைப்பொருள் . பாலியல் உறவுக்கு ஆரோக்கியமான மனநிலை முக்கியம். ஆனால் , மனநலப் பிரச்சினையை எதிர்நோக்கும் ஆணோ , பெண்ணோ தங்களின் பாலியல் தேவைகளை எப்படி இழக்கிறார்கள், உணரும் சக்தியை எப்படி இழக்கிறார்கள் என்பதையும் , தங்களின் பிரச்சினையை புரிந்துகொள்ளாமல் , தங்களுக்குள் ஏதோ ” பிழை ” இருப்பதாக நினைத்து குடிக்கத் தொடங்குவதும் , பிறழ்வான வாழ்வில் தொலைந்துபோவதும் என்று அடுப்பில் இருந்து நழுவி நெருப்பில் வீழ்ந்து அழிந்த கதையாக வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் விபரீதங்களும் நிறைந்த நம் சமூகத்தில் , ஒழுக்கக் கோட்பாடுகள் , கலாசாரத் தடைகள் என்ற பெயரில் காமம் தொடர்பான சொல்லாடல்களை ரகசியமான செயல்பாடாக மாற்றிவைக்காமல் ஆசிரியரின் கதை சொல்லும் திறன் ரசனை !

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: