Month: செப்ரெம்பர் 2012
-
Return ticket from ‘heaven’ ends dream of better life for Sri Lankan voyagers
September 29, 2012 Read later Ben Doherty Returned home: Anthony Sujith at home in Thoduwawa. Photo: Ben Doherty AUSTRALIA – the tiny slice he saw of it, the Cocos Islands and the immigration detention centre at Christmas Island – was heaven, Anthony Sujith says. ”They were very nice to us, the food was very good, […]
-
கத்தோலிக்க திருச்சபையும் பாலியல் வன்முறையும்
நடேசன் அவுஸ்திரேலியாவில் கத்தோலிக்க திருச்சபையை சேர்ந்தவர்கள் கடந்த எண்பது வருடத்தில் 620 சிறுவர்களை பாலியல் வன்முறைக்கு உட்ப்படுத்தியுள்ளார்கள் என்பதை ஏற்றுக்கொண்டு அறிக்கை தயாரித்திக்கிறார்கள். இது அவர்களது புள்ளிவிபரம். இவர்கள் பல சமயங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்கனவே பணம் கொடுத்து விடயம் வெளிவராமல் மறைக்கப்பட்டவையும் இதில் அடங்கும் என நினைக்க விரும்புகிறேன். அவுஸ்திரேலியாவில் எடுக்கப்பட்ட கணக்கின்படி பத்திற்கு ஒன்று மடடுமே பாதிககப்பட்டவர்களால் வெளி சொல்லப்படுகிறது. இப்படி பார்த்தால் ஆறாயிரத்துக்கு மேற்பட்வர்கள் கத்தோலிக்க திருச்சபையை சேர்ந்தவர்களால் பாலியல் வன்முறைக்கு உடபடுத்தப்பட்டிப்பார்கள். இதைவிட விக்டேரியபொலிஸ் […]
-
ஏரிக்கரைச் சிறைச்சாலை
சொல்லமறந்த கதைகள் — 15 முருகபூபதி – அவுஸ்திரேலியா இலங்கையில் ஏரிக்கரை பத்திரிகை நிறுவனம் என்றவுடன், எவருக்கும் நினைவுக்கு வருவது கொழும்பு கோட்டையில் கேந்திர முக்கியத்துவம் பெற்ற இடத்தில் அமைந்துள்ள லேக்ஹவுஸ் கட்டிடம்தான். இலங்கையில் போர்த்துக்கீஸரின் வருகைக்குப்பின்னர் பல பிரதேசங்களில் கோட்டை கொத்தளங்கள் அமைக்கப்பட்டன. இன்றும் அவை கொழும்பு, காலி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கற்பிட்டி, திருகோணமலையில் மட்டுமன்றி நீர்கொழும்பிலும் அவற்றை எம்மால் பார்க்கமுடியும். நீர்கொழும்பு- புத்தளம் பாதையில் மகா ஓயா நதி ஓடுகிறது. அதிலிருந்து ஒரு கால்வாயை […]
-
Tamil Traitors Muralitharan and Noel Nadesan
Email bsenewiratne@gmail.com The biggest problem that the Tamils face is NOT Rajapaksa and his cronies but the Tamils – fellows like Noel Nadesan and their ilk. These is another Tamil, Rajasingham or some such name, who owns and writes in the Asian Tribune – a mouthpiece of the Rajapaksa junta. A piece he has written […]
-
நேசிக்கத்தகுந்த மனிதர் சோமா அண்ணர்
நேசிக்கத்தகுந்த மனிதர் சோமா அண்ணர் தமிழ் சமூகப்பணியில் அயராது உழைத்தவர் நினைவஞ்சலிக்குறிப்பு முருகபூபதி அவுஸ்திரேலியாவில் சமீபத்தில் மறைந்த முன்னாள் விக்ரோரியா ஈழத்தமிழ்ச்சங்கத்தின் தலைவரும் தமிழ் சமூகப்பணியாளருமான சோமசுந்தரம் அவர்களுக்கும் எனக்குமிடையிலான நட்புறவுக்கு இருபத்தியைந்து வருடங்களும் ஏழுமாதங்களும் என்பதை தெளிவாகவே சொல்லிவிடமுடியும். இக்காலப்பகுதியில் அவருடன் பழகிய தருணங்கள் மறக்கமுடியாத நிகழ்வுகளாகவே மனதில் பதிந்துள்ளமையால்தான் இந்தப்பதிவை எழுதமுடிகிறது. அவர் மறைந்துவிட்டார் என்ற துயரமான செய்தியை நண்பர் நடேசன் எனக்குச்சொல்லும்பொழுது, தொலைதூரப்பயணத்திலிருந்தேன். அதன்பிறகு, சில மணிநேரங்களில் நண்பர் சபேசன், கைத்தொலைபேசிக்கு குறுந்தகவல் […]
-
கண்ணுக்குள் ஒரு சகோதரி
சொல்லமறந்த கதைகள் -14 முருகபூபதி – அவுஸ்திரேலியா இலங்கையில் முதலாவது ஆயுதக்கிளர்ச்சி சிங்கள இளைஞர்களினால் 1971 ஆம் ஆண்டு நடந்தது. அந்தக்கிளர்ச்சி, ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்களை பலிகொண்டதுடன் அந்த கிளர்ச்சியின் சூத்திரதாரிகளான ரோகண விஜேவீர, லயனல் போப்பகே, உபதிஸ்ஸ கமநாயக்கா, லொக்கு அத்துல, பொடி அத்துல, தர்மசேகர, மகிந்தவிஜேசேகர போன்ற மக்கள் விடுதலை முன்னணி தலைவர்கள் கைதாகியதுடன் முடிவுக்கு வந்தது பற்றி ஏற்கனவே இந்தத்தொடரில் ஒரு அங்கத்தில் குறிப்பிட்டிருந்தேன். கைதான அரசியல் கைதிகளை விடுவிக்கவேண்டும் என்ற இயக்கத்தின் […]
-
அசோகனின் வைத்தியசாலை:நாவலில் ஒரு பந்தி
தற்கொலை செய்து உயிரைவிட நினைப்பவர்கள் பலருக்கு சில கணமேனும் சிந்திக்கவைக்கும் இறப்புக்கு முன்பாக அதை உணர்ந்து கொள்ளும் தன்மை மனிதனுக்கு மட்டுமே உள்ளது. மிருகங்களால் பறவைகளால் அதை உணர்ந்து கொள்ள முடியாது. காட்டில் மேயும் மானால் அம்புடன் காத்திருக்கும் வேடனை நினைத்துப் பார்க்க முடிவதில்லை. நீரில் மிதக்கும் மீனால் அருகில் தொங்கும் தூண்டலினால் மரணம் வருவதை உணரமுடியாது. அதே போல் வளர்ப்பு மிருகங்களையும் கருணைக் கொலை செய்வதற்கு மிருக வைத்தியரிடம் கொண்டு வரும் போது அவைகளுக்கு […]
-
ஜூலியாவின் பார்வையில்…..
– நடேசன் ஜூலியா சொன்ன அந்த வார்த்தைகள். அவள் அறையை விட்டு வெளியேறிய பின்பும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது, ””You are a arrogant man. அந்த மென்மையான இதழ்கள் உதிர்த்த கடினமான வார்த்தைகள். மேசையின் கீழிருந்த தனது ஹான்ட் பாக்கை இழுத்த வேகத்தில் தனது செல்ல நாய் றோசியையும் அழைத்தவாறு அவள் வெளியேறினாள். சுமார் ஆறு ஆண்டு கால நட்புக்கு அவளே முற்றுப்புள்ளி வைத்தாள். நட்பு இனிமையானது. ஆனால் முறிவோ கொடுமையானது என்பதை அனுபவமாக உணர்வதற்கு அந்த […]
-
நம்பிக்கை
சொல்லமறந்த கதைகள் -13 முருகபூபதி – அவுஸ்திரேலியா லண்டன் பி.பி.ஸி தமிழ் ஓசையில் சில வருடங்களுக்கு முன்னர் நான் கேட்ட செய்தி இது: இலங்கையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் புதிய அதிபர் தெரிவாகுவார் என்று தமது சிங்கள சோதிட சஞ்சிகையில் எழுதியிருந்த சந்திரஸ்ரீ பண்டார என்னும் ஒரு சோதிடர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டார். இந்தச்செய்தி என்னைச்சற்று வியப்பில் ஆழ்த்தியது. ஆனால் சில செப்டெம்பர்கள் கடந்துவிட்டன. இலங்கை அதிபரின் தலைமையிலான கூட்டணிதான் இந்த ஆண்டு செப்டெம்பர் நடந்த மூன்று […]
-
உயிர்ப்பிச்சை
முருகபூபதி – அவுஸ்திரேலியா இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை கூர்மையடைந்து தமிழின விடுதலைப்போராட்டம் உக்கிரமடைந்த காலகட்டத்தில் எங்காவது குண்டுவெடித்தால் அல்லது யாராவது அரசியல் தலைவர் தற்கொiலைக்குண்டுதாரிகளினால் கொல்லப்பட்டால் பாதுகாப்பு படையினர் நிலக்கண்ணி வெடியில் தாக்குதலுக்குள்ளானால் உடனடியாக அரச படைகளும் பொலிஸாரும் தேடுதல் வேட்டையில்தான் ஈடுபடுவார்கள். இச்சந்தர்ப்பங்களில் பெரும்பாலும் அப்பாவித்தமிழர்கள்தான் சந்தேகத்தின் பேரில் கைதாகி காலவரையறையின்றி தடுப்புக்காவலில் வைக்கப்படுவார்கள். பாவம்செய்தவர்கள்தான் தமிழராகப்பிறக்கிறார்கள் என்ற பொதுவான பேச்சுத்தான் பாதிக்கப்பட்டவர்களின் தரப்பிலிருந்து இத்தேடுதல் வேட்டைகளின்போது உதிர்க்கப்படும் வார்த்தைகளாக இருக்கும். தேடுதலின்போது கைதான பலர் […]